எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !
Uncategorized
தேசியத் தலைவர் குடும்பத்திற்கு வீரவணக்கம் ! #துவாரகா #பிரபாகரன் #duwaraka
இறந்து கிடப்பது ஒன்று அண்ணியார் மதிவதனி அவர்கள், மற்றது மகள் துவாரகா, அவர் புலிகளின் சீருடையுடன் தான் இறந்துள்ளார் பின்னர் சிங்களவன் உடையை களைந்து கேவல படுத்தி உள்ளான் பிள்ளையை அடையாளம் கண்டு, அது போலவே அண்ணியாரையும் செய்து உள்ளார்கள்.
//////
“யார் யாரெல்லாம் காரணம்..?”
துவாரகா என்று சொல்லி ஒரு போலியைக் கொண்டு வந்துவிட்டார்கள் என கவிஞர் காசி ஆனந்தன் உட்பட சிலர்மீது குற்றம் சுமத்துகிறோம்.
ஆனால் சில கசப்பான உண்மைகளை இங்கே எழுதவேண்டி உள்ளது.
தலைவரின் வீரச்சாவு ஏன் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை? மாவீரர் பட்டியலில் அவரது பெயர் இணைக்கப்பட்டு ஏன் இன்னமும் அஞ்சலி செலுத்தப்படவில்லை? தங்கை துவாரகாவின் வீரச்சாவும் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதது ஏன்?
தலைவரோ, அல்லது அவரது குடும்பத்தில் எவருமோ உயிருடன் இல்லை என்பது நமக்குத் தெரியும். இருந்தும் ஏன் அதை இன்னமும் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்..?
இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லையா? அல்லது அறிவிக்க விருப்பம் இல்லையா? 14 வருடங்கள் கழித்து இப்போதுதான் தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியின் வீரச்சாவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் தலைவரின் பேரிழப்பை அறிவிக்க இன்னமும் பல வருடங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்களா..?
அவரின் இழப்பை அறிவிக்கும்போது நம் எல்லோருடைய மனமும் புண்படும்தான். அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பும் மக்கள் நொந்துபோவார்கள் தான். ஆனால் உண்மையை மறைக்க முடியாது அல்லவா..?
தலைவர் ஒரு போர்வீரன். நம் தானைத் தளபதி. அவரும் ஒரு மனிதன் தானே? சாவு எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதானே? அப்படி இருக்கும்போது தலைவரின் வீரச்சாவை ஏன் இன்னமும் நாம் மறைக்க வேண்டும்?
இப்படி நாமே ஒரு தெளிவில்லாத நிலையில் இருந்தால் – அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்?
இன்று துவாரகா என்று சொல்லி ஒரு போலியைக் கொண்டு வந்தவர்கள், நாளை “இதுதான் தலைவர்” என்று சொல்லி, இன்னொரு போலியைக் கொண்டுவர மாட்டார்களா என்ன..? தலைவர் மற்றும் தங்கை துவாரகாவின் வீரச்சாவை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டால், யாரும் வந்து வாலாட்ட முடியாதே?? அதன்பிறகு போலிகளுக்கு வேலையே இல்லையே..! சொல்லப் போனால் காசி ஆனந்தனிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் உண்மை இல்லையே..??
நமக்கென்று ஒரு திட்டம் இல்லாவிட்டால், அடுத்தவர்களின் தாளத்துக்குத்தான் நாம் ஆடவேண்டும். இப்போது அதுதான் நடக்கிறது.
தலைவரின் வீரச்சாவை அறிவிப்பதில் என்ன தயக்கம் இருக்கிறது? அவர் என்ன கோழைபோல ஓடி ஒழிந்து, எங்கேனும் மறைந்து வாழ்ந்து நோய் வந்து இறந்தாரா? இல்லையே?
போராட்டத்தை அவர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அவரது பேச்சும் கொள்கையும் மாறவே இல்லையே. கடைசி ஒரு போராளி இருக்கும்வரை போராடுவேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார். அவரது வீரச்சாவு ஒன்றும் அவமானகரமானது இல்லையே..? அவர் புறமுதுகிட்டு ஓடவில்லையே..?? இறுதிவரை களத்தில்தானே நின்று போராடினார்..!
அப்படிப்பட்ட அந்த மாவீரனுக்கு 14 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தாமல் இருக்கிறோம் நாம்.
இது என்ன வகையான அரசியல்? யாருக்கு நாம் பயப்பிடுகிறோம்? ஈழத்தமிழர்கள் வீரத்தமிழர்களா? இல்லை கோழைத் தமிழர்களா..???
எம்மிடம் மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் எல்லாம் இருக்கின்றன. யாருமே வாய் திறக்கவில்லையே..! என்ன காரணம்?
துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று சொல்லும் அந்தக் குறூப்புக்கும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லும் ( அல்லது அவரது வீரச்சாவை அறிவிக்காமல் இருக்கும் ) இந்தக் குறூப்புக்கும் என்ன வித்தியாசம்..??
“இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லையே. அதிலிருந்து அடுத்தகட்டம் நோக்கி நகர முடியுமே..!!!
திரும்பவும் சொல்கிறேன் – நமக்கென்று ஒரு திட்டம் இல்லாவிட்டால், நாம் அடுத்தவர்களின் திட்டப்படியே செயல்பட வேண்டிவரும்..!
சிந்தியுங்கள்..!!!
https://www.youtube.com/embed/QWJRv-jWawk?si=JI8HARI7is2SC0jp
https://www.youtube.com/embed/f2TrgVP7J0Y?si=aMucxG9oCRYAiSpN
———————
மொத்தத்தில் அண்ணையின் குடும்பமே “மாவீரர்கள்” நிலைமை அப்படி இருக்கும் போது, இந்த கேடு கெட்ட சனியன், சொல்லுது தான் தங்கையை பார்த்தேன், மகளை பார்த்தேன் புடுங்கினேன் என்று, இது இப்ப “றோ” வின் கை கூலிகளோடு சேர்ந்து விட்டது,
எமக்காக உயிர் நீத்த மாவீரர்களையும்!!! கேவல படுத்தி சிறுமை படுத்தி கொண்டே வருகிறார்கள், இதன் உள்நோக்கமும், இவர்களால் மேற்கொள்ள படும் சதிகளும் “உலக வல்லரசாலும்” “றோ” இவர்களாலும் இயக்கபட்டு கொண்டே இருக்கின்றது, உண்மைக்கு புறம்பாகவும், நீதியற்று நடக்கும் இவர்களையும் அடையாள படுத்தி எம்மவர்கள் மத்தியில் தோல் உரித்து தொங்க விட வேண்டியது ஒவ்வோர் தமிழனின்!!!!!!! கடமையும் ஆகின்றது. நன்றி
ஆக்கம் மூலம் தெரியாது இணையவழி
தமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள்! – சீமான்
வரலாற்றுப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக என எல்லாவுமாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 68 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமித உணர்வும் அடைகிறேன்.
‘உலகில் தோன்றிய சில மகத்தானவர்களின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு’ என்கிறார் புரட்சியாளர் லெனின். எத்தனையோ புரட்சியாளர்களைக் கண்ட இந்தப் பூமிப்பந்து, காலத்தை உருவாக்கும் கதாநாயகர்களைத் தனது புனிதப்பக்கங்களில் நிறைத்துக்கொண்டு நிற்காமல் சுழன்றுகொண்டிருக்கிறது. ஒரு மனிதனைத் தாண்டி, இன்னொரு மனிதன் என்றைக்குத் தோன்றினானோ, அன்றே, ‘நான் பெரியவன்! நீ சிறியவன்!’ என்கிற தான்மை உணர்ச்சி தோன்றி, மனித இனத்தில் பிரிவினைகளை ஏற்படுத்திவிட்டது. “நான் ஆண்டான்! நீ அடிமை!” என சர்வாதிகாரக்குரல்கள் திசையெட்டும் ஒலிக்கத் தொடங்கியபோது, அதனை மாற்றி அமைக்க மகத்தானப் புரட்சியாளர்கள் உலகில் தோன்றத்தொடங்கினார்கள். அப்படித்தான் எம் இனத்திலும் எத்தனையோ வீரமும், அறமும் செறிந்த மகத்தானவர்கள் கால ஓட்டத்தில் கணக்கில்லாமல் தோன்றி, தங்களின் புகழையும் தரணியில் பதித்திருக்கிறார்கள். அப்படித் தோன்றிய மகத்தானவர்களில் ஒப்பற்றவராய், மங்காதப்புகழ் ஒளிகொண்டு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்கிறவராக தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்கிறார்கள்.
தமிழர்களின் தாய் நிலமான ஈழ மண்ணில் வந்து குடியேறிய சிங்களர் காலம் காலமாய் வாழ்ந்து வந்த மண்ணின் பூர்வக்குடிமக்களான தமிழர்களை சொந்த மண்ணிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றி, பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து வாழ்ந்து வந்த நிலத்தை விட்டுத் துரத்தி, அவர்களது உரிமைகள் யாவற்றையும் மறுத்து, உயிரைப் பறித்து பேரினவாத ஆட்சியை நிலைநாட்டியபோது, தமிழர்களது கண்ணீரைத் துடைக்க எழுந்து வந்த கரிகாலனாய், பிறந்து வந்த பிரபாகரனாய் எம் தலைவர் தோன்றினார்.
“உயிர் உன்னதமானது என்பதனை நான் அறிவேன்; ஆனால், அந்த உயிரினும் உன்னதமானது எமது உரிமை; எமது விடுதலை; எமது கௌரவம்” என முழக்கமிட்டு, உயிரை ஒரு குப்பியில் அடைத்து எந்த நேரமும் விளையத் துடிக்கும் மரணத்தை தன் மார்பிலேயே தொங்க விட்டுக்கொண்டு, தன் சொந்த நாட்டு மக்களையே படையாகக் கட்டி, நிலத்திலும், நீரிலும், வானிலும் சண்டையிட்டு எப்படை வந்தாலும் எதிர்த்துக்காட்டி, உலகத்தின் விழிகளை வியப்பால் விரியச்செய்தவர் எம் தலைவர். இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா? என எவரும் வியக்கும் அளவுக்கு அறத்தின் வழி நின்று, மறம் மொழி பகர்ந்த சான்றோனாய் , மகத்தான காவியங்களிலும் உலகப்புகழ் பெற்ற இலக்கியங்களில் மட்டுமே காணப்படக்கூடிய மாபெரும் புனிதராய், எதிரிகூட குற்றஞ்சாட்ட முடியாத எல்லாளனாய் வாழ்ந்துகாட்டியவர் எம் தலைவர். பிணமாய் விழும் இனம் காக்க, சினம் கொண்டு தனி ஒரு மனிதனாய் பழுதடைந்த ஒற்றைத் துப்பாக்கியோடு விடுதலைக்காக வனம் புகுந்த அவரது வாழ்க்கை ஒரு தனி நபரின் வாழ்க்கை சரிதமாக இல்லாமல் ஒரு இனத்தின் வரலாறாக மாறிப்போனது.
காக்கைக்கும், குருவிக்கும்கூட சிறகு விரித்து பறக்க வரம்பற்ற வானம் இருக்கிறது. ஆனால், தமிழர் என்ற தேசிய இனத்திற்கு உள்ளங்கை அளவுக்குக்கூட ஒரு நாடில்லை என்பதை உணர்ந்த எம் தேசியத்தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத தமிழீழ சோசலிசக்குடியரசு என்கிற கனவு நாட்டினை கட்டியெழுப்பினார். தமிழர்களை அடிமைப்படுத்த வந்த சிங்களர்களுக்கு எந்த மொழியில் சொன்னால் புரிகிறதோ, அந்த மொழியை, ஆயுத வழியாய் கொண்டு, துப்பாக்கி என்பது அடுத்த மனிதனை சுட்டுக்கொன்று உயிர்பறிக்கும் கருவி அல்ல; அது என் இனத்தாரை காக்கின்ற கருவி என்பதை உணர்த்தும் வகையில் துவக்கேந்தி, தமிழர் விடுதலைக்காக களம் அமைத்தார் எம் தலைவர். அந்தப் புனித இலட்சியத்தை உணர்ந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் தங்கள் உயிரையும் தரத் துணிந்து கலங்கமற்ற தங்கள் தலைவனுக்காகக் களத்தில் நின்றார்கள். தான் பெற்ற பிள்ளைகளாய் கருதி அவர்களை வளர்த்து, வார்த்தெடுத்து, பயிற்சிகொடுத்து உலகமே வியக்கும் மாவீரர்களாய் மாற்றி நிறுத்தி மன உறுதியிலும், அளவற்ற தியாகத்திலும் இதுபோன்ற படையை எவரும் கண்டதில்லை என உலகத்தார் கருதும் வகையில் விடுதலைப்புலிகள் என்கிற மக்கள் இராணுவத்தை கட்டியெழுப்பினார் எம் தலைவர். ஒரு போரில் எதிரி நாட்டின் மீதுகூட பயன்படுத்தக்கூடாத தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அப்பாவி தமிழர்களை சிங்கள பேரினவாத அரசு கொன்றுகுவித்தபோது, சிங்கள இராணுவத்தை மட்டுமே எதிரியாகக் கொண்டு, ‘சிங்கள மக்கள் எப்போதும் எங்கள் எதிரிகள் அல்லர்’ என அறிவித்து, விமானம் கட்டிப் பறந்தபோதும்கூட அப்பாவி மக்கள் மீது குண்டுவீசாமல், எதிரி நிலைகள் மீது குண்டு வீசிவிட்டு திரும்புகிற எம் இனத்தின் காவல் தெய்வங்களான விடுதலைப்புலிகளின் அறவுணர்ச்சி என்பது எம் தலைவர் என் உயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அறம் ததும்பும் மனசாட்சி!
உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தன்னிறைவான வாழ்க்கையை எம் தமிழீழ மக்கள் வாழ்ந்ததற்கு திறம் வாய்ந்த தலைவரின் ஆட்சியே மகத்தான சாட்சி! தாய்மொழிக்கல்வியும், சாதி ஒழிப்பும் இம்மண்ணில் வாழ்கின்ற நமக்கெல்லாம் கனவாகத் திகழும்போது அதை வாழும் காலத்திலேயே சாதித்துக் காட்டிய சரித்திர நாயகன் எம் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். மழலையர் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தமிழே பாடமொழியாக உருவாக்கி வீதிகளில் மட்டுமல்ல நீதிமன்றங்கள், இராணுவக்கட்டளைகள் என தமிழீழ நாட்டில் எங்கு காண்கிலும் தனித்தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, மாட்சி மொழியாக விளங்கியதற்கு ஒற்றைக்காரணம் எம் தலைவர் ஆவார். ஆணுக்கு நிகராய் பெண்களை முன்னிறுத்தி, தாயக விடுதலைக்காக போராடுகிற போராளிகளாக அவர்களை மாற்றி ஆணும், பெண்ணும் சமம் என்கிற இலட்சியச்சொற்களை நடைமுறைப்படுத்தியவர் எம் தலைவர் ஆவார். தான் உண்டு குடும்பம் உண்டு என வாழ்ந்து, தன் குடும்பத்திற்கு பதவிவாங்க அலைந்த தலைவர்களுக்கு மத்தியில், தான் பிறந்த இனத்துக்காக தன் குடும்பத்தை பலிகொடுத்து தியாகப்பெருவாழ்க்கை வாழ்ந்து, ‘தலைவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாய் மாறிப்போனவர் எம் தலைவர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள். அவர் வாழ்ந்த தியாக பெருவாழ்க்கையே எமது கொள்கை சாசனமாக எம் முன்னால் நின்று சுடர்விடுகிறது. அதிலிருந்தே எமக்கான இலட்சியப்பற்றுறுதியை இடைவிடாது பெறுகிறோம்.
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவரே என் உயிர் மூச்சாக உள்ளிருந்து என்னை இயக்குகிறார்; நான் திரும்பும் திசையெல்லாம் அவர் முகம்கண்டே இலட்சிய உறுதி அடைகிறேன். என் மகனுக்குக்கூட அவர் பெயர்சூட்டி, அவனிலும் என் அண்ணனைத்தான் காண்கிறேன். எங்கோ பிறந்த என்னைத் தேர்ந்தெடுத்து, இந்த இனமானப் பணிக்காக என்னை உருவாக்கி, அளவற்ற இன்னல்களுக்கும், துயரங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் மத்தியில் என்னை களமாட வைத்து, என்னை இயக்கிக் கொண்டிருக்கிற, எல்லா வகை துயர் இருட்டிலும் நான் நம்பிக்கைகொண்டு காண்கின்ற கலங்கரை விளக்கம் என் உயிர் அண்ணன் மீது பிரபாகரன் அவர்கள். அவர் மொழி பற்றி, அவர் வழிநடப்பது ஒன்றே எனது வாழ்நாள் கடமையாக, நான் அடைந்த தகுதியாகக் கருதுகிறேன். அவரே என்னை இயக்கும் பேராற்றல்!
ஆருயிர் அண்ணன் அன்புத்தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு தம்பியின் பேரன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பேருவகையும், பெருமிதமும் அடைகிறேன்!
வாழ்க தலைவர் பிரபாகரன்!
வெல்க தமிழீழம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
விடுதலைப்புலிகளின் மரபுவழி தரைப்படைகளால் அணியப்பட்ட பல்வேறு விதமான சீருடைகள் – ஆவணம்
ஈழத்தமிழர்களின் தரைப்படையான தரைப்புலிகள் மரபுவழி படைத்துறையாக மாற்றம் பெறத் தொடங்கிய 1990 ஆம் அண்டில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆய்தங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பற்றியே.
இச்சீருடைகள் பற்றிய பதிவில் ‘பச்சை வரிப்புலி’யின் 4 விதமான விருத்துகள் பற்றியும் தரைப்புலி படையணிகளின் பல்வேறு விதமான சீருடைகள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன்.
வாருங்கள் தாவுவோம், பதிவிற்குள்!
தொப்பிகள் பற்றிய ஆவணம்:
- விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:-
விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது…
- நீல வரி
- பச்சை வரி
- கறுப்பு வரி
என்பர்
அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர்.
வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள்.
இடது கையின் தோள்மூட்டிற்குக் கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும் (கீழே அதியரையர்(Brig./ பிரிகேடியர்) துர்க்கா அவர்களின் சீருடையினை நோக்குக). இது கட்டளையாளர்களின் வரிப்புலியில் அதுவும் சிலபேர் அணிந்ததில்தான் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை.
குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும்.
நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும்.
பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர்.
→ குறிப்பு: நான்காம் ஈழப்போர் வரை சமர்க்களங்களில் இச்சீருடையினை பலர் அணிவர்; சிலர் அணியார். அணியாதோர் குடிமை(Civil) உடைகளை அணிவர். ஆனால் நான்காம் ஈழப்போரில் 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இச்சீருடை அணிவதை புலிகளில் பெருமளவானோர் தவிர்த்தே வந்தனர் .
‘1998 | பிரிகேடியர் துர்க்கா அவர்களின் சீருடையில் தோளில் உள்ள தோள்மணைத் துண்டத்தில் குறுக்கா ஒரு துணி தைக்கப்பட்டுள்ளதை நோக்குக.’
- 1989 இறுதி – 1995 வரையிலான பச்சை வரிப்புலி
இனி புலிகளின் பச்சை வரிப்புலியினைப் பற்றிக் பார்ப்போம். இச்சீருடையினை அணிந்து திருமதி அனிதாப் பிரதாப் அவர்களிற்கு 1990 ஆண்டின் மார்ச் மாத செவ்வி வழங்கினார், தவிபு தலைவர். மேலும் 1989 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படம் ஒன்றில் மணலாறு காட்டில் புலிகளில் பயிற்சி பாசறையில் இச்சீருடை அணிந்த ஆண்பெண் போராளிகள் பயிற்சி எடுப்பதைக் கண்டுள்ளேன். எனவே இது 1990 ஆண்டிற்கு முன்னரே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இது தான் வரியுடைகளிலே வெளிவந்த முதலாவது சீருடையாகும். இதற்குத் தொப்பியாக கறுப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர், புலிவீரர்.
இதில் இருந்த நிறங்களாவன:
- பச்சை
- கபிலம்
- வெள்ளை
இந்த சீருடையில் வெள்ளை நிறம் கொண்ட வரிகள் தடிப்பாக இருந்ததால் அந்நிறமே எடுப்பாக இருந்தது.
‘1989/12/24 | இதுதான் முதலாவது வரிப்புலிச் சீருடை’
‘இடது பக்கத்தில் இருந்து முதலாவதாக நிற்பவர் சாள்ஸ் அன்ரனி போராளி கதிரவன் ஆவார் | ஆண்டு: 1994 என்கிறது Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips‘
(இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்)
(இதே காலகட்டதில் உந்துகணை செலுத்தி அணியும் இந்தச் சீருடைதான் அணிந்திருந்தது)
‘1991 ஆம் ஆண்டு ஆ.க.வெ. நடவடிக்கையின் பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கிய முன்னேற்ற சமரின்போது கைப்பற்றப்பட்ட மண்ணரணில் உள்ள காவலரணிற்கு கீழே அமர்ந்திருக்கும் கட்டளையாளர்கள் கேணல் சூசை & ‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ். இருவரும் அணிந்திருக்கும் சீருடையினை நோக்குக.‘
ஆனால் இதே காலத்தில் பெண்களின் ‘மகளிர் படையணி‘யின் ஒரு பிரிவு(unit) கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தது.
‘1993 ஆம் ஆண்டு வெளியான படம் | இந்தக் கால கட்டத்தில் ஆண்புலிவீரர் ஆரும் இது போன்ற சீருடை அணிந்ததில்லை’
மேற்கண்ட சீருடைக்கான தொப்பியும் அதே நிறத்தில்தான் அணியப்பட்டிருந்தது. கீழ்க்கண்ட படத்தில் அதைக் காண்க:-
‘‘1993 ஆம் ஆண்டு வெளியான படம் | நாளிதழில் இருந்து எடுத்த படம் என்பதால் படத்தின் நிறம் கொஞ்சம் மாறி விட்டது. மேலுள்ள படிமத்திலுள்ள நிறமே சரியான நிறமாகும் ‘
இதே கால கட்டத்தில் தொடங்கி 2002 ஆம் ஆண்டுவரை புலிகளின் படையணியினர் ஒரு விதமான சீருடை போன்ற உடை ஒன்றினை சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். அதன் படம்:
நிறம்:-
- ஒரு வித பச்சை நிறம்
- ஒரு வித சாம்பல் நிறம் போன்ற நிறம்
இவ்வுடையானது நான் மடலம் மூன்றில் குறிப்பிட்ட அந்த மஞ்சள் நிற மேற்சட்டை போன்றதே. ஆனால் இது அதனினிறு கொஞ்சம் மேம்பட்டது ஆகும். ஏனெனில் 1987 இல் வெறும் மேற்சட்டை மட்டுமே. ஆனால் இக்காலத்தில் மேற்சட்டையோடு அதற்குத் தகுந்த நீளக் காற்சட்டையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மேற்சட்டையில் இரு விதமான நிறங்களில் 4 விதமான தோரணிகள்(patterns) இருந்தன..
‘இவைதான் அந்த நாங்கு விதமான பாங்கங்கள் ஆகும் (முதல் படத்திற்கு நிறமூட்டப்பட்டுள்ளது. அதன் உண்மையான நிறம் அதற்கு அருகில் உள்ள படங்களில் உள்ள சீருடை நிறமே) ‘
மேலுள்ள நான்கு பாங்கங்களில் மூன்று பாங்கங்கள் கீழே உள்ளதை நோக்குக:-
ஆனால் நீளக்காற்சட்டை ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இருந்தது. அது ஒரு விதமான கடும் பச்சை ஆகும்(தெளிவான நிறத்திற்கு மேலே முதற் படிமத்தைக்(Image) காண்க)
‘நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படிமத்தில் தெரிவதை நோக்குக’
‘நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படத்தில் தெரிவதை நோக்குக’
‘இப்படிமத்தில் உள்ள எல்லோரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோகுக’
‘இவர்கள் இருவரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோக்குக’
தவிபு தலைவரின் மெய்க்காவலரும் அச்சிருடையினை அணிந்திருப்பதை நோக்குக்கும் போது, இச்சீருடையானது கிட்டத்தட்ட ஒரு பொதுச் சீருடை போன்று எல்லோராலும் அணியப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதே போன்ற உடையினை கடற்புலிகளும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர்.
- 1994 இன் இறுதி/1995 – 1996 வரையிலான பச்சை வரிப்புலி
இவ்வரிப்புலிக்கும் முன்னைய வரிப்புலிக்குமான வேறுபாடு யாதெனில் முன்னைய வரிப்புலியில் இருந்த வெள்ளை நிறமானது இவ்வரிப்புலியில் ஒரு விதமான கடும் பழுப்பு நிறமாக காட்சியளித்தது. இச்சீருடைக்கு இவர்கள் அணிந்திருந்த சுற்றுக்காவல் தொப்பி கொஞ்சம் வேறுபாடானது. அது பற்றி நான் மேற் குறிப்பிட்டுள்ள தொப்பி பற்றிய பதிவில் கண்டுகொள்க.
இவ்வாண்டில் ஆண்களும் பெண்களும் இந்நிறத்திலான சீருடையினையே அணிந்திருந்தனர்.
‘ஜெயந்தன் படையணியினர்’
உந்துகணை செலுத்தி அணியினரும் இச்சீருடையே:
இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர்:-
‘படிமப்புரவு: ‘விடுதலைப்புலிகள்’ இதழ்’
‘படிமப்புரவு: ‘விடுதலைப்புலிகள்’ இதழ்’
‘படிமப்புரவு: ‘விடுதலைப்புலிகள்’ இதழ்’
- 1996 ஆம் ஆண்டு அணியப்பட்ட சீருடை
இது முந்தைய சீருடையில் இருந்து நிறத்தால் மட்டும் வேறுபட்டது ஆகும். அதாவது முந்தைய சீருடையின் நீலம் மற்றும் பச்சை ஆகியவை நன்கு தேசுவாக்கப்பட்டிருக்கின்றன, இச்சீருடையில். இது ஓராண்டிற்கும் குறைவாகவே அணியப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 1996 இற்குப் பின் இந்நிறத்திலான வரிப்புலிச் சீருடைப் படிமங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
இதே நேரம் இக்காலகட்டத்தில் நடந்த அணிவகுப்புகளின்போது, புலிவீரர்கள் தலையில் கறுப்புநிற வரைகவியினை(Berret) அணிந்திருந்தனர்.
‘ஓயாத அலைகள் ஒன்றின் போது வீ.சா. அடைந்த போராளிகளின் வித்துடல்கள் துயிலுமில்லம் நோக்கி எடுத்துச் செல்லப்படும் போது அணிவக்குப்பில் ஈடுபடும் புலிவீரர்கள். இவர்கள் தலையில் கறுப்பு வரைகவி அணிந்துள்ளதை நோக்குக. | திரைப்பிடிப்பு: ஓ. அ. – 1 ஆவண நிகழ்படத்தில் இருந்து’
- 1997 – 2002 வரையிலான பச்சை வரிப்புலி
இக்கால கட்டத்தில் இவர்கள் அணிந்த சீருடையானது முன்னைய இரு சீருடை விருத்துகளைக் காட்டிலும் கொஞ்சம் வேறுபாடானது. இதில் பழுப்பு நிறம் இல்லை. அதற்குப் பகரமாக நன்கு மங்கிய வெள்ளை போன்ற நிறம் இருந்தது. இந்த நிறமே இதில் இருந்த மூன்று நிறங்களில் மிகவும் ஒடுங்கிய நிறமாகும். ஏனைய இரண்டும் இதை விட கொஞ்சம் தடிப்பானவை.
மொத்தமாக இச்சீருடை பற்றிச் சொல்ல வேண்டுமானால் இச்சீருடையானது தோற்றத்தில் பார்வைக்கு மங்கியதாக காட்சியளிக்கிறது!
‘ ஓ.அ.-2 இல் (1997) திட்டத்தை விளக்கும் பிரிகேடியர் தீபன்(இ) & கட்டளை வழங்கும் பிரிகேடியர் ஜெயம்(வ) | நான் கூறிய பச்சை வரியினை இருவரும் அணிந்துள்ளதை நோக்குக’
இக்கால கட்டத்தில் பெண்களும் இதே சீருடையினைத்தான் அணிந்திருந்தனர்.
இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ பாங்கத்திலான சீருடை அணிந்தோர்:-
- இம்ரான் – பாண்டியன் படையணியின்…
→ விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(1997–2002):-
இவர்கள் விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையான நான் மேற் குறிப்பிட்டுள்ள கிடைமட்ட பச்சை வரி கொண்ட சீருடையில் இருந்து வேறுபட்டு நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் தலையில் சூரியக் காப்பு தொப்பி அணிந்திருந்தனர். (தொப்பி பற்றிய மேலதிக விளக்கத்தை முதல் மடலத்தில் கண்டு கொள்க). இந்நிலைக்குத்தான வரியினை முதன் முதலில் அணிந்தது இப்படையணியினரே.
‘ஆடவர் ‘
(இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்)
→ மயூரன் குறிசூட்டுப் பிரிவு(?-2009)
இவர்களும் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர்.
‘புலிகளின் குறிசூட்டுநரும்(Sniper) பொட்டுநரும்(Spotter)’
→ சிறப்பு உந்துருளி படையணி(?-2002)
இக்காலத்தில் இவர்கள் கிடைமட்ட வரியினை அணிந்திருந்தனர்.
– – – –
2. இக்காலத்திய துணைப்படையின் சீருடை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை!
– – – –
- வண்ணாளன் உந்துருளி படையணி (?- 05-2004)
இவர்கள் பச்சை நிற மட்டு. சீருடையினையே தங்களின் சீருடையாக அணிந்திருந்தனர்.
- 2002 – 18.05.2009 வரையிலான பச்சை வரிப்புலி
இது தான் புலிகளின் சீருடைகளின் செந்தரப்படுத்தப்பட்ட காலம் ஆகும். இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சை வரிப்புலி சீருடையில் மேற்கண்ட இரு வரிப்புலி விருத்துக்களிலும்(version) பயன்படுத்தப்பட்ட ஒரு விதமான நீல நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக கபில நிறமும், முன்னைய விருத்துக்களில் இருந்த வெள்ளை/மங்கிய வெள்ளை/ஒருவித கபிலம் போன்ற நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக ஒரு விதமான மஞ்சளும், முன்னைய விருத்துக்களில் இருந்த பச்சை விடுக்கப்பட்டு அதற்கும் பகரமாக இன்னொரு வித பச்சை நிறமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருந்த மஞ்சளானது 2006இற்குப் பிறகு கொஞ்சம் கடுமைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வரிக்கோடுகளின் இரு மருங்குகளிலும் சிலும்பியது போன்றதான ஒரு தோரணி இருந்தது.
மொத்தத்தில் ஒரு வீரனை நன்கு மிடுக்காக எழுப்பிக் காட்டக்கூடியவாறு இச்சீருடை விருத்து அமைந்திருந்தது. (கீழ்க்கண்ட படத்தில் சீருடையினைக் கண்டு கொள்க)
‘ஜெனீவா ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியற்றுறை தலைமையகத்தில் வகை-81 துமுக்கியை(Rifle) ஏந்தி காவலிற்கு நிற்கும் தரைப்புலி வீரர் இருவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Gettyimages”
கீழ்க்கண்ட படிமத்தினை வைத்து வரிப்புலி சீருடையினை அறிந்துகொள்க.
→ படிமத்தினை நன்கு அண்மையாக்கிப் பார்த்தால் சிலும்பிய தோரணி, வரிப்புலி சீருடை என்ன வகையிலான துணியில் செய்யப்பட்டது, அதன் நிறங்கள் என்னென்ன, தொப்பி எப்படிப்பட்டது, அதன் அளவுகள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை அறியலாம்.
‘பூநகரிப் படையணியின் பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணியின் பீகே சூட்டாளார்களில் ஒரு போராளி பயிற்சி நிறைவு நாளான சூலை 13, 2007 அன்று தன்னுடைய பயிற்சிப் பாசறையில் நிற்கின்றார்.’
இச்சீருடை அணிந்திருந்த ‘படையணி’கள்:
→ சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
→ மாலதி படையணி
→ சோதியா படையணி
→ ஜெயந்தன் படையணி
‘படிமப்புரவு: TamilNet‘
→ பூநகரி படையணி:-
‘படிமப்புரவு: அலாமி‘
→ திலகா படையணி
→ பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி
→ இது 2008 ஆம் ஆண்டு வன்னியில் பயிற்சி முடித்து வெளியேறின படையணி.
இதனது புய வில்லையினை நோக்கவும். இதன் பெயர் அறிந்தோர் கூறவும்.
மற்றும் பல வடதமிழீழத்தைத் தரிப்பிடமாகக் கொண்ட படையணிகள் இந்நிறச்சீருடையினை அணிந்திருந்தனர்.
- குறிப்பு:
2004இற்குப் பின்னர் கீழ்க்கண்ட கடுஞ்சிவப்பு நிறத்திலாலான வரைகவியினை அணிநடை மற்றும் சில முக்கிய விழாக்களின்போது அணிந்திருந்தனர். அதில் வில்லையும் குத்தப்பட்டிருந்தது.
இந்த காலகட்டத்தில் இதே தோரணியிலான சீருடையினை வேறு தோற்றத்தில் அணிந்தோர்:-
1) கிட்டு பீரங்கிப் படையணி:-
இவர்கள் கிடைமட்ட வரி அணிந்திருந்தனர். ஆனால் அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். கஞ்சுகத்தின் முதுகுப் புறத்தில் ஒரு ஏ.கே – 47 அ ஏ.கே – 56 துமுக்கியினை கொளுவியிருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் தெறொச்சியை(Howitzer) இயக்கினர்.
‘பெண்கள் பிரிவினர்’
‘முன் தெறோச்சியை ஆண்களும் பின் தெறோச்சியை பெண்களும் இயக்குவதை நோக்குக | இருவரும் சன்னத் தகை கஞ்சுகம் அணிந்து காதடைப்பான் அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL’
‘கீட்டு பீரங்கிப் படையணியினர் படைத்தகையின் போது’
இவர்களும் படைத்தகையின்போது குட்டிசிறி படையணி அணியும் அதே நிறத்திலான துணியைத்தான் அணிவர். மேற்கண்ட படத்தினையும் கீழ்க்கண்ட படத்தினையும் ஒப்புநோக்குக.
2) ஜோன்சன் பீரங்கிப் படையணி
இவர்கள் மட்டக்களப்பின் ஏனைய படையணிகள் போன்றே ‘வெறும் பச்சை’ நிறச் சீருடையினையே தம் சீருடையாக அணிந்திருந்தனர்.
3) குட்டிசிறி மோட்டார் படையணி
(விடுதலைப் புலிகளின் மோட்டார் பிரிவு கிட்டு பீரங்கிப் படையணி தொடங்கப்பட்ட காலத்தில்(1997) அதனுட்பட்ட ஒரு பிரிவாகவே தொழிற்பட்டது. அதன் பின்னர் ஒரு 2000 ஆம் ஆண்டு காலபகுதியில்தான் அது தனியாக ஒரு படையணியாக தொழிற்பட்டது என்பதை கவனத்தில்கொள்க.)
கணையெக்கி பெண் போராளிகள் தொடக்க காலத்தில் கீழ்கண்டது போன்ற வெளிறிய பச்சை நிறத்திலான சீருடையினை அணிந்து தலையில் கறுப்பு நிறத் தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் கட்டளையாளர்கள் பச்சை வரிப்புலியினையே அணிந்திருந்தனர்.
கணையெக்கிப் ஆண் போராளிகள் தொடக்க காலத்தில் வெளிறிய பச்சை நிறத்திலான சீருடை அணிந்தது குறைவு. பச்சை வரிப்புலியினையே பெரும்பாலும் அணிந்திருந்தனர்.
‘ஜெசிக்குறுயி எதிர் சமரின் போது கணையெக்கியை(Mortar) இயக்கும் ஆண் போராளிகள்’
‘கணையெக்கியை(Mortar) இயக்கும் பெண் போராளிகள்’
ஜெயசிக்குறுயிற்குப் பின்னரான காலத்தில்(ஒரு 2000 ஆம் ஆண்டுக்கு கிட்டவாக) பெண்போராளிகளும் ஆண்போராளிகளும் பச்சை வரிப்புலியினை அணியத் தொடங்கி விட்டனர். இயக்கும்போது அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் கணையெக்கியை(Mortar) இயக்கினர்.
→ முன்னிலை நோக்குநர் அணி(FOT):-
அனைத்து சேணேவிப் படையணிகளின்(Artillery Brigades) முன்னிலை நோக்குநரும் பச்சை வரிப்புலியே!
- இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ தோரணியிலான சீருடை அணிந்தோர்:-
1) இம்ரான் – பாண்டியன் படையணியின்…
→ விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(2002–2009) & சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி(2003–2009) :-
இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் சூரியக்காப்பு தொப்பி அணிந்திருந்தனர்.
‘படைத்தகையில்(parade) ஈடுபட்டிருக்கும் விக்டர் கவச எதிர்ப்புப் படையணி | படிமப்புரவு: Tamilnet.com”
→ சூரன் கவச அணி
இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருந்தனர்.
2002 இற்கு முன்னர் இவர்கள் கிடைமட்ட வரியே அணிந்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
‘படிமப்புரவு: Tamilnet.com’
இதன் ஓட்டுநர் ஒரு சாதாரண தகரி ஓடுநர் என்னவெல்லாம் அணிவாரோ அதையே அணிந்திருந்தார்.
கீழ்க்கண்ட படத்தில் புலிகளின் வகை-55 முதன்மை சண்டைத் தகரியின்(Main battle tank) சூட்டாளர்(Gunner) அணிந்துள்ள தலைக் கவசத்தை காண்க:-
→ சிறப்பு உந்துருளி படையணி (2002/2003–2009)
இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் செவிமறை நெகிழ்வான மகுடக்கவி (earflap floppy hat) அணிந்திருந்தனர். இது இவர்களின் சீருடையாகும்.
→ → அதிவேக உந்துருளி சிறப்பு அணி (2004 – 2009 )
இவர்கள் உந்துருளிப் படையணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் ஆவர். இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர்.
‘உண்ணோட்டமிடும்(inspection) தவிபு தலைவர் ‘படிமப்புரவு: TamilNet‘
‘படைத்தகையில்(parade) ஈடுபடும் அதிவேக உந்துருளி அணியினர் ‘படிமப்புரவு: TamilNet‘
ஆனால் வீதிகளில் சுற்றுக்காவலிற்கோ இல்லை களவேலைகளுக்குச் செல்லும் போது உந்துருளி படைஞர் தலையில் தலைச்சீரா அணிந்து உடலில் கறுப்பு Jacket அணிந்து செல்வார்.
‘ஆழிப்பேரலையின்போது’
2. ராதா வான்காப்புப் படையணி
இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர். அதன் வரியும் நிலைக்குத்தே.
‘வான் எதிர்ப்பு ஏவுகணை அணியினன் | மேஜர் சுவர்ணன்’
‘ZPU-2 வானூர்தி எதிர்ப்பு சுடுகலத்தால் குண்டுதாரியை(Bomber) சுட இலக்கு வைக்கும் வான்காப்பு வீரன்(Air defence soldier) | படிமப்புரவு: viduthalaippulikal’
3. கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
1)இந்தப் பிரிவின் பெயர் எனக்குத் தெரியவில்லை
இந்தப் புலிமகளின் வில்லையில் தனித்துவமான எந்தவொரு இலச்சினையும் இல்லாமல் விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
– – – –
4. தென் தமிழீழத்தில் இருந்த படையணிகள்:-
தென் தமிழீழத்தில் இருந்த ஒருசில படையணிகளின் சீருடை பற்றிய எத்தகவலும் என்னிடம் இல்லை.
→ வினோதன் படையணி
Sap Green நிற சீருடையும் நீல நிற வரைகவியும் அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன.
‘வஞ்சகன் ஒருவன் இச்சீருடை அணிந்திருப்பதை காண்க. அவனது பக்கினையும் நோக்குக’
– – – –
→ விசாலகன் & வினோதன் படையணி:-
இச்சீருடையினைத்தான் 2005 இற்குப் பின்னாரான காலத்தில் இவ்விரு படையணியினரும் அணிந்திருந்தனர். 2005 முன்னர் இதே சீருடை அணிந்திருந்தாலும் தலையில் வரைகவி(beret) அணிந்திருந்தனர்.
‘படிமப்புரவு: viduthalaippulikal’
– – – –
→மதனா படையணி
இச்சீருடையானது 2005 ஆம் ஆண்டு வரை அணியப்பட்டது. அதன் பிறகு தொப்பியில் மட்டும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது வரைகவி(beret) விடுத்து தொப்பிக்கு(கீழுள்ள இரண்டாவது படத்தைக் காண்க) மாறினர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன.
→ அன்பரசி படையணி
இவர்கள் சாம்பல் நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது.
‘இப்படிமம் யாவும் ஒக்டோபர் 2002 ஆம் ஆண்டு மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளன்று எடுக்கப்பட்டதாகும்‘
‘சிதைந்த படத்தினை புனரமைத்தபோது இந்த நிறத்தில் வந்தது..’
‘மேற்படத்தில் உள்ளவர்களும் இப்படத்தில் உள்ளவர்களும் வெவ்வேறு நிறத்திலான இடுப்பு பட்டி கட்டியிருக்கின்றனர்.. எனவே இரு வேறு விதமான படையணியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்’
தென் தமிழீழ போராளிகள் வடதமிழீழ போரளிகளிடம் இருந்து கொஞ்சம் வேறுபாட்டுடனான அணிநடை செய்வர். அதாவது இவர்கள் வட தமிழீழ போரளிகளைப் போன்று கையை நேரே விசுக்கினாலும் அதனுடன் கூடுதலாக கையை சத்தாராகவும் விசுக்குவர். (கீழ்க் கண்ட படத்தில் இருப்பது போன்று)
‘மட்டு-அம்பாறை பெண்கள் படையணியின் அதிகாரிகள் படைத்தகையில்(parade) ஈடுபடுகின்றனர்’
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
மேலே உள்ள கடும் பச்சை நிறத்தோடு சேர்த்து Sap Green போன்ற நிறத்திலான சீருடையினை ஒரு படையணி அணிந்திருந்தது.
‘துரோகி கருணாவின் பெண்கள்| கருணா பிரிந்த அன்றோ அடுத்த நாளோ எடுத்த படம் | இப்படத்தில் கறுப்பு மற்றும் கடும் பச்சை நிறத்தோடு Sap Green நிறத்திலான சீருடை அணிந்த இருவர் முன்னால் நிற்பதை நோக்குக’
‘துரோகி கருணா & அவனது மெய்க்காவலன் & அவனது பெண்கள் | கருணா பிரிந்த பின்னர் எடுத்த படம் | இப்படத்தில் உள்ள் பெண்கள் நான்கு விதமான சீருடை(வரிப்புலி, கறுப்பு, கடும் பச்சை, Sap Green) அணிந்துள்ளனர் | இப்படத்தில் இடது பக்கத்தில் இருந்து முன்வரிசையில் இரண்டாமராக நிற்கும் பெண்ணின் சீருடையை நோக்குக. விதப்பாக(specific) நோக்க நான் அம்புக்குறியிட்டுள்ள இடத்தில் பார்க்கவும்.’
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
இப்படையணியில் ஆண்கள் மட்டுமே பணியாறினர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது.
இந்த படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நீல நிறத்திலான வரைகவியினை அணிந்திருந்தனர்.
‘இப்படம் ~2002/3 ஆண்டைச் சேர்ந்தது‘
2004 இற்குப் பிறகு இப்படையணி பற்றி எந்தவொரு தகவலும் இல்லை! ஆனால் இவர்கள் துணைப்படையினர் என்றும் கூறப்படுகிறது.
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது.
‘கிழக்கில் இருந்த ஒரு உந்துகணை செலுத்தி படையணி படைத்தகையில் ஈடுபடும் காட்சி | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது’
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது.
‘படைத்தகையில் ஈடுபடும் ஆண் & பெண் போராளிகள்’
மேற்கண்ட படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நிறத்திலான தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
‘படைத்தகையில் ஈடுபடும் போராளிகள் | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது | இவர்கள் இக்காலத்தில் சிங்களத்தின் தரைப்படை உருமறைப்புக் கொண்ட செண்டாட்டத் தொப்பியினை(Baseball cap) அணிந்திருந்தனர்.’
‘மேற்குறிப்பிட்டுள்ள சீருடையினை அணிந்துள்ள ஒரு புலிவீரன்ர். இப்படம் நான்காம் ஈழப்போரில் எடுக்கப்பட்டதாகும் | படிமப்புரவு: PULT’
‘தலைவனோடு நிற்கும் இச்சீடை அணிந்தோர்’
‘இப்படையணியைச் சேர்ந்தவர்களும் பச்சை நிறச்சீருடை அணிந்தோரும் ஒன்றாக நிற்கும் படிமம் | கருணா துரோகி ஆனதிற்குப் பின் எடுக்கப்பட்ட படிமம் | படிமப்புரவு: கூகிள்’
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
இப்படையணியைச் சார்ந்தவர்களின் சீருடையானது சிறீலங்கா தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலானதாக இருந்தது. தலையில் பச்சைநிற சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்திருந்தனர். இவர்களின் அதிகாரிகள் கடுஞ்சிவப்பு நிறத்திலான வரைகவியினை அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன.
‘தென் தமிழீழத்தில் நடந்த நிகழ்வொன்றில் பெண்போராளிகள் இருவர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக’
‘சிங்கள படைத்துறைச் சீருடையினை தம் படையணிச் சீருடையாக அணிந்த பெண்ணொருவர் நடுவில் நிற்பதை நோக்குக. | அவரைச் சுற்றி இருநிறங்களிலான சீருடை அணிந்தோர் கணையெக்கியுடன்(mortar) நிற்பதை நோக்குக ‘
‘நான் அம்புகுறியிட்டுள்ளோர அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக’
‘இதில் நான் அம்புக்குறியிட்டுள்ளவர்கள் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | 55 வது பயிற்சி முகாமில் இருந்து 400 ஆண்கள் போராளிகள் மற்றும் மட்டக்களப்பின் 30 வது பயிற்சி முகாமில் இருந்து 300 பெண் போராளிகள் வெளியேறியதைக் குறிக்கும் விழா வியாழக்கிழமை தவிபு கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பிலுள்ள தரவை மத்திய பயிற்சி பாசறையில் நடைபெற்றதைக் காட்டும் படம். | படிமப்புரவு: தமிழ்நெட்’
”இடது பக்கத்திலிருந்து முதலாவதாக அமர்ந்திருப்பவர் – சிங்கள தரைப்படையின் சீருடை போன்ற சீருடை அணிந்துள்ளவர் – மட்டக்களப்பைச் சேர்ந்த படையணிப் போராளி. இவர் அணிந்துள்ளதுதான் மேற்கூறிய சீருடை ஆகும்.”
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
– – – –
→ கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை!
இவர்கள் அணிந்திருந்த சீருடையானது நான் மேலே கூறியிருக்கும் சிறீலங்காத் தரைப்படையின் சீருடையினை ஒத்ததாக இல்லாமல் அதிலிர்நுது கொஞ்சம் வேறுபட்டதாக காணப்படுகிறது. இதை அணிந்தவர்கள் பற்றிய விரிப்புகள் ஏதும் இல்லை. இவ்வகையிலான சீருடையின் சிதைந்த இரு படிமங்கள்தான் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். அதை வைத்து இதனது தோரணியினை அறியவும். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன.
‘கருணாவின் மெய்க்காவலர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக’
– – – – – – – – – – – – – – – –
→ இளங்கோ படையணி
இப்படையணியின் பெயரையும் கீழ்க்கண்ட சீருடை அணிந்தோரே இப்படையணியினர் என்ற தகவலையும் நிதர்சனத்தின் திருகோணமலை பற்றிய ஒரு நிகழ்படக்(video) கோப்பில் இருந்தே எடுத்தேன். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது.
‘பெண்கள்’
‘ஆண்கள்’
‘மாவீரர் துயிலுமில்லம் ஒன்றில் பச்சை வரிப்புலி, கடும்பச்சை நிறச் சீருடை, ஈ ஒரு வித கறுத்த சீருடை ஆகியவற்றை அணிந்து செல்லும் போராளிகள்’
– – – – – – – – – – – – – – – –
–> சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மற்றொரு சீருடை:
இச்சீருடையானது ஓயாத அலைகள் 2லிருந்து விடுதலைப்புலிகளால் இறுதிவரை அணியப்பட்டது ஆகும்.
‘குடாரப்பில் தரையிறங்கி இத்தாவிலில் உள்ள கண்டிவீதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போகும் அணிகளிற்கு அறிவுரை புலற்றும் கட்டளையாளர் இள பேரரையர் ராஜசிங்கன் இச்சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக.’
–> சோதியா படையணியின் மற்றொரு சீருடை:
இச்சீருடையானது ஓயாத அலைகள் மூன்றிலிருந்து விடுதலைப்புலிகளால் இறுதிவரை அணியப்பட்டது ஆகும். இச்சீருடையானது ஒரு விதமான பச்சை நிறத்தில் இருந்தது.
‘வட போர்முனையில் சோதியா படையணியினர் இச்சீருடை அணிந்து கனவகை இயந்திரச் சுடுகலன் கொண்டு சமராடுவதை நோக்குக | 2006’
–> மாலதி படையணியின் மற்றொரு சீருடை:
இச்சீருடையானது ஓயாத அலைகள் மூன்றிலிருந்து விடுதலைப்புலிகளால் இறுதிவரை அணியப்பட்டது ஆகும்.
இவர்களின் மற்ற சீருடையானது கறுப்பு நிறத்தில், ஆனால் சற்று வேறுபாடான தோரணியுடன் (சீருடையில் ஒருவிதமான வெளுறிய வெள்ளை – இக்கறுப்போடு இசைந்து போன நிறம் போன்று, கோடுகள் காணப்பட்டது ) காணப்பட்டது. ஆனால் இவர்கள் தை அணிந்து அணிநடைபோட்டதில்லை. அணிநடையின் போது வரிப்புலியே அணிந்திருந்தனர். ஆகையில் இது அலுவல்சாரில்லா சீருடை எனத் துணிபுகின்றேன். இதை அணிந்து இவர்கள் சமர்க்களத்திலும் ஆடினர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் இவர்கள் இதை அணிந்து எந்தவொரு அணிநடையிலும் தோன்றியதில்லை.
‘மேற்கண்ட இரு படத்திலும் இருப்பது போன்ற சீருடை அணிந்தோர் இப்படத்திலும் உள்ளதைக் காண்க’
‘2008 இல் சமர்க்களத்தில் அமர்ந்து உணவுண்ணும் பெண் போராளிகள் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக’
ஓ.அ-3இல் இத்தாவில் பெட்டியினுள் மகளீர் படையணிகளின் கட்டளையாளர்கள் மற்றும் தாக்குதல் கட்டளையாளர்களுடனான கலந்துரையாடலின் போது பிரிகேடியர் பால்ராயர் தவிர்த்து அனைவரும் தவிபு சீருடையில் நிற்கின்றனர். மாலதி படையணி மற்றும் சோதியா படையணி சிறப்புக் கட்டளையாளர்களான பிரிகேடியர் துர்க்கா மற்றும் பிரிகேடியர் விதுசா ஆகியோர் நான் குறிப்பிட்டுள்ள தத்தமது படையணியின் இன்னொரு விதமான சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக.’
–> இம்ரான் பாண்டியன் படையணியின் மற்றொரு சீருடை:
இது மேற்குறிப்பிடப்பட்ட மூன்று சீருடையிலுமிருந்து வேறுபட்ட விதமான கொஞ்சம் கடும் பச்சை போன்ற நிறத்தைக் கொண்டிருந்தது.
– – – –
→ பெயர் அறியில்லா படையணி…
இப்படையணியைச் சேர்ந்தவர்கள் நான் கீழே சுட்டியுள்ளது போன்ற நிறத்திலான(ஒரு விதமான கபில நிறம்) சீருடையினை அணிந்திருந்தனர். இவர்கள் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது.
‘இடது முதலாவதாக நிற்கும் மேஜர் விதுரா அவர்களும் இந்நிறத்திலான சீருடையினையே அணிந்துள்ளதை நோக்குக’
‘வஞ்சகன் கருணா பிரிந்த அன்று மட்டுவில் ஒரு தமிழ் வஞ்சகன் இந்நிறத்திலான சீருடை அணிந்து நிற்பதை நோக்குக.’
‘மே 28, 2003 அன்று திருமலையில் இருந்த சூனியக் கோட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் | நான் அம்புக்குறியால் சுட்டியுள்ளவர் அந்நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக’
‘மே 28, 2003 அன்று திருமலையில் இருந்த சூனியக் கோட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் | நான் அம்புக்குறியால் சுட்டியுள்ளவர் அந்நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக’
5.
விடுதலைப்புலிகளின் ஆய்த ஆராச்சி மற்றும் விளைவிப்புத் தொழிற்சாலைகளில் பணி புரிவோர் அணியும் சீருடை. இதை ஆண்களும் பெண்களும் அணிவர்.
சாம்பலும் Pink கலந்த நிறம் போன்ற நிறத்திலான சீருடை இது!
6.பெயர் தெரியா படையணி
இவ்வீரர் அணிந்துள்ள சீருடையினை நோக்குக. இது ஒரு விதமான நீலத்தில் உள்ளது. ஆனால் இப்படையணியின்/பிரிவின் பெயர் எனக்கு தெரியவில்லை. இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. இச்சீருடையினை அணிந்தோரின் படிமம் முதல் தடவையாக என்ற தொலைக்காட்சியில் 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
‘வவுணதீவு முன்னரங்க நிலை | சூலை 8, 2006 ‘
‘இது 20-12-2008 அன்று வன்னிச் சமர்க்களத்தில் வகை – 85 12.7mm சுடுகலனை இயக்கும் இரு புலிவீரர்களும் இந்நீல நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக’
‘அதே போன்ற நீலச் சீருடை அணிந்து ஒரு புலிவீரர் (கஞ்சுகம்(vest)அணியாமல் நிற்பவர்) நிற்பதை நோக்குக. | அவருக்கு அருகில் நிற்கும் இருவரும் (கஞ்சுகத்தோடு நிற்போர்) ஊரகத் தொண்டர் சிறப்புப் படையினர் ஆவர்’
– – – –
7) வேவுப்புலிகள்:
இவர்கள் ரெக்கி(வேவு) எடுப்பதற்காக செல்லும் போது மட்டும் சிங்கள தரைப்படையின் உருமறைப்பு ஆடை அணிந்து, காலில் நெடுஞ்சப்பாத்து(boots) அணிந்து, தலையில் விடுதலைப்புலிகளின் சடாய்மா முக்காடு(ghilie hood) அணிந்து செல்வர். இலக்கை நெருங்கியதும் குழைகள் கட்டிச் செல்வர். சில பேர் சடாய்மா உடுப்பும்(Ghilie suit) அணிவர்.
மற்றும்படி இவர்களின் சீருடைஒரு வித ‘Palmer Green’ நிறத்திலான சீருடை ஆகும். தலையில் அதே நிறத்திலான வாளிக்கவியினை அணிந்திருப்பர்.
‘வேவுப்புலி வீரர்கள் சீருடையில் இலைகுழையால் உருமறைப்பு செய்தபடி அமர்ந்திருப்பதை நோக்குக.’
‘சிறீலங்கா தரைப்படையின் சீருடை அணிந்து ஊடுருவிச் செல்லும் வேவுப்புலிகள் | படிமப்புரவு: நிதர்சனம்’
‘தலையில் விடுதலைப்புலிகளின் உருமறைப்பு கொண்ட சடாய்மா முக்காடு உள்ளதை நோக்குக | படிமப்புரவு: நிதர்சனம்’
‘இலைமய சடாய்மா உடுப்பினை அணிந்துள்ள வேவுப்புலி வீரன்’
– – – –
9)படப்பிடிப்பாளர்:
இச்சீருடையானது ஒற்றை நிறத்திலானது ஆகும். இது ஒரு விதமான மங்கிப்போன கபில நிறம் ஆகும். இச்சீருடையினை அணிந்து படவத்தோடு படப்பிடிப்பாளர்கள் நிற்கும் படிமங்கள் கீழ்க்கண்டதொன்றைத் தவிர்த்து வேறேதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.
‘இந்நிழற்படமானது பேரரையர்(Col) ராஜு அவர்களின் வீரவணக்க நிகழ்வின்போது எடுக்கப்பட்டது ஆகும். 2002’
உசாத்துணை:
- செ.சொ.பே.மு.
- முற்றுமுழுதாக எனக்குக் கிடைத்த படங்களின் காலங்களை வைத்தே இவற்றைக் கணித்து எழுதியுள்ளேன்.
ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்
விடுதலைப்புலிகள் பத்திரிகைகளின் தொகுப்பு
- V_P_ 01
- V_P_ 02
- V_P_ 06
- V_P_ 09
- V_P_ 11
- V_P_ 12
- V_P_ 22
- V_P_ 25
- V_P_03
- V_P_04
- V_P_05
- V_P_23
- V_P_07
- V_P_08
- V_P_10
- V_P_13
- V_P_14
- V_P_15
- V_P_16
- V_P_17
- V_P_18
- V_P_19
- V_P_20
- V_P_21
- V_P_22
- V_P_24
- V_P_26
- V_P_27
- V_P_28
- V_P_29
- V_P_30
- V_P_31
- V_P_32
- V_P_33
- V_P_34
- V_P_35
- V_P_36
- V_P_37
- V_P_38
- V_P_39
- V_P_40
- V_P_41
- V_P_42
- V_P_43
- V_P_44
- V_P_45
- V_P_46
- V_P_47
- V_P_48
- V_P_49
- V_P_50
- V_P_51
- V_P_52
- V_P_53
- V_P_54
- V_P_55
- V_P_56
- V_P_57
- V_P_58
- V_P_59
- V_P_60
- V_P_61
- V_P_62
- V_P_63
- V_P_64
- V_P_65
- V_P_66
- V_P_67
- V_P_68
- V_P_69
- V_P_70
- V_P_71
- V_P_72
- V_P_73
- V_P_74
- V_P_75
- V_P_76
- V_P_77
- V_P_78
- V_P_79
- V_P_80
- V_P_81
- V_P_82
- V_P_83
- V_P_84
- V_P_85
- V_P_86
- V_P_87
- V_P_88
- V_P_89
- V_P_90
- V_P_91
- V_P_92
- V_P_93
- V_P_94
- V_P_95
- V_P_96
- V_P_97
- V_P_98
- V_P_99
- V_P_100
- V_P_101
- V_P_102
- V_P_103
- V_P_104
- V_P_105
- V_P_106
- V_P_107
- V_P_108
- V_P_109
- V_P_110
- V_P_111
- V_P_112
- V_P_113
- V_P_114
- V_P_115
- V_P_116
- V_P_117
- V_P_118
- V_P_119
- V_P_120
- V_P_121
- V_P_122
- V_P_123
- V_P_124
- V_P_125
- V_P_126
- V_P_127
- V_P_128
- V_P_129
- V_P_130
- V_P_131
- V_P_132
- V_P_133
- V_P_134
- V_P_135
- V_P_136
- V_P_137
- V_P_138
ஈழ தேசத்தின் இளவரசியே !
-இளவரசி-
பாருக்கு எம்மினத்தை
பறைசாற்றிய படைவீரன்
வேலுப்பிள்ளை மகனின்
குருதிப் பகிர்வே – எம்
குலக்கொழுந்தே !!!!
யாருக்கும் அஞ்சாமல்
கரிகாலன் கைபிடித்து
போருக்குள் வாழ்வமைத்த
புங்கையின் பேரழகி
பெத்துப்போட்ட பொக்கிஷமே !!!
அகிலமே வியந்து போற்றிய
அப்பனுக்கு பிள்ளையாகினும்
அடுத்தவீட்டுக் குழந்தையைப் போல்
ஆடி, ஓட முடிந்ததா உன்னால்
அமைதித்தூக்கம் கிடைத்ததா உனக்கு ??
குளிரூட்டியின் சுகக்காற்றும்
சொகுசான படுக்கைகளும்
எம்மில் பலருக்குத் தந்துவிட்டு
குண்டுச்சத்தமும்,கொசுக்கடியும்
எளிமை வாழ்க்கையும் ஏற்றவளே !!!
உங்கப்பன் நினைத்திருந்தால்
உலகில் எங்கேனும் ஒரு மூலையில்
உல்லாச வாழ்க்கை கொடுத்திருக்கலாம்
உனக்காக எல்லாமும் செய்திருக்கலாம்
செய்தானா, செய்ய நினைத்தானா ??
காட்டிலும், மேட்டிலும், கடற்கரையிலும்
இடம்பெயர்வுகளும், இன்னல்கள் கடப்பும்
சொல்லொணாத் துயரமும் சகித்தவளே
எம் இனத்தின் விடியலுக்காய் – உன்
சுகங்களெல்லாம் விட்டுக் கொடுத்தவளே !!!
எங்கே தாயே நீ ?
எங்கே உன் குடும்பம் ?
எப்போது சோறு இறங்கும் போதும்
என் ஆத்மா உங்களை நினைக்கும்
என்னடா வாழ்க்கையென்று நெஞ்சம் துடிக்கும்…
என் ஈழ தேசத்தின் “இளவரசியே”
என் இன விடுதலைக்காய் – உன்
குலம் சிதைந்தும், அடங்கவில்லையே
எம்மவர் நாடகங்களும் நடிப்பும்….
மன்னித்துக்கொள் தாயே !!!
உன் தந்தை,
உலகின் தன்னிகரற்ற தளபதி
தமிழனாய்ப் பிறந்தது தலைவிதி..!!
-ஐங்கரன்-
-அனாதியன் கவிதைக் களம்
முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
- தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?
- கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்?
- முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி
- இனப்படுகொலை ,போர்குற்றப் படங்கள்
- 2001 முதல் முள்ளிவாய்க்கால் 2009 வரை வீரச்சாவைத் தழுவிய சில போராளிகளின் விபரம் !
- முள்ளிவாய்க்காலில் இனம் காணப்பட்ட வீரச்சாவைத் தழுவிய சில போராளிகளின் விபரம் !
- இறுதி யுத்தத்தில் சரணடைந்த ஒரு தொகுதி புலிகள் விபரம் !
- முன்னாள் புலிகள் சிலரின் போர்க்குற்ற வாக்குமூலங்கள்-காணொளி
- சித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள்
- வதைமுகாம்களில் ஆண்கள் மீதும் படையினர் வன்புணர்ச்சி – களமருத்துவர் உயற்சி
- முள்ளிவாய்க்கால் – 12 பேரது வாக்குமூலங்கள்….
- காலம் ஒரு பதிலெழுதும் – சண் தவராஜா
- தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் – பொங்குதமிழ் இணையம்
- தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன? – கேட்கின்றார் அறிஞர் பெருந்தகை சட்டவாளர் நடேசன் சத்தியேந்திரா அவர்கள்
- தனது இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர்? – வருந்துக்கிறார் ஆய்வாளர் சபா நாவலன்
- ஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்! – நல்லாசான் ஏ.சி தாசீசியஸ்
- தத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்! வேண்டுகிறார் கிருஸ்ணா அம்பலவாணர்
- தாயில்லாப் பிள்ளையானோம் அழுகின்றார் அகதித்தமிழன்
- வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..!-தொல்காப்பியன்
- பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம்
- எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்
- பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம்
- பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்
- பிரிகேடியர் நடேசன் வீரவணக்கம்
- கேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்
- கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்
- பிரிகேடியர் பானு வீரவணக்கம்
- பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம்
- பிரிகேடியர் ஆதவன் (கடாபி)
- வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்
- பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்
- கேணல் வசந்தன் வீரவணக்கம்
- பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்
- தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா
- பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம்
- பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்
- மாதவன் மாஸ்ரர் நினைவுகளோடு…..!
- தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்
- கேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி
- கேணல் நாகேஸ்
- கேணல் கோபித்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி
- கேணல் அஜந்தி :மகளிர் படைத்துறைப்பயிற்சி கல்லூரி பொறுப்பாளர்
- கேணல் கஜன் : விசேட தாக்குதல் தளபதி
- சிங்கள இராணுவத்தால் சுடப்பட்டதில் கேணல் வசந்தனும் ஒருவர்
- கேணல் இளங்கீரன் வீரவணக்கம்
- சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!
- கேணல் வீரத்தேவன்
- செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
- விடுதலைப்போராளி இசைப்பிரியா…
- கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.
- கேணல் திலக் :பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர்
- அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர் பிரிகேடியர் மணிவண்னன் /காஸ்ட்ரோ
- தமிழீழ காவல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் இளங்கோ வீரவணக்கம்
- கடற்புலிகள் மகளிர் தளபதி கேணல் பூரணி வீரவணக்கம்
- கேணல் சுகி வீரவணக்கம்
- கேணல் அர்ச்சனா வீரவணக்கம்
- மேஜர் விதுரா வீரவணக்கம்
- லெப் கேணல் இளவாணன்
- வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்
- முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்
- ஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம்
- வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்
- முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு 7 வருடங்கள் கடந்து இனம் காணப்பட்ட பெண் போராளி!
- 3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்
- வன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்!
- ஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது!
பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்!
வரலாறு தந்த வல்லமை பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்”
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்
“பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா” சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது” “தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச் சுடரொளி” இந்த வரலாறு தந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் “இறைதத்துவம்”……..!
பிரபாகரம் – “உலகின் புதிய உயிரோடை”
தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது. தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச்சுடரொளி. இந்த வரலாறுதந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் இறைதத்துவம். ஜேசுவும் காந்தியும் புத்தனனும் புனித அல்லாவும் தாயும் தந்தையும் தயாபரனும் தலைவன் பிரபாகரனே என்பது தமிழர்களின் நம்பிக்கையானது. இதுவே எமக்கு வழிகாட்டும். இதுவே எமக்கு வாழ்வுதரம். ஆயிரம் விமர்சனங்கள் எழட்டும் ஆதவன்போல் எழுந்த தலவனை அது சுட்டெரிக்காது என்கின்றார் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர் அவர்கள்.
பிரபாகரம் -ஓர் “இறைதத்துவம்”
என மகுடம் சூட்டி தனது வழமையான, எளிமையான மொழிநடையில் வளரி இணையத் தொலைக்காட்சியில் வல்ல தலைவனை வழிகாட்டும் இறைவானக சித்தரிக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது பிரபாகரன் நாமம் எனக்கூறும் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர், பிரபாகர உயிரோடையின் உயிர் அணுக்களாக நம் இளையோர் தம்மைப் புடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒடுக்கப்படும் சமூகங்களிடையே தங்கள் பல மொழிப் புலமையோடு ஊடாடி, அவர்க்கும் நமக்கும் வளம் திரட்டுவார்கள். அடக்கும் அரசுகளும் ஒடுக்கும் ஆட்சிகளும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் – தாயகம்-தன்னாட்சி-தேசியம் என்று உறுமும் பிரபாகரம் அன்றெல்லாம் -அங்கெல்லாம் – உயிரோடையாகச் சேவித்து நிற்கும்!
வெற்றி பெறும் வரை அது ஓயாது! என்கின்றார் .சீ தாசிசீயர் அவர்கள்.
இது ஒரு மீள்பதிவு-இன்போ தமிழ் குழுமம்
*
Confronting the Death of Prabhakaran !
by Nadesan Satyendra, Esq., TamilNation, June 16, 2009
On 18 June 2009,
the 31st Day of Prabhakaran’s Death[see also Velupillai Prabhakaran – Undying Symbol of Tamil Resistance to Alien Rule]I have never met Velupillai Prabhakaran. Neither have I ever spoken to him. I did not know him personally. Again, it is not that I have agreed with everything that he said or did. Yet, when he died on 17 May 2009, I felt a deep sense of personal loss. I grieved. In my grief I was moved to revisit the words of Fidel Castro Ruz at his trial in October 1953 –
‘…The man who abides by unjust laws and permits any man to trample and mistreat the country in which he was born is not an honorable man. When there are many men without honor, there are always others who bear in themselves the honor of many men. These are the men who rebel with great force against those who steal the people’s freedom, that is to say, against those who steal honor itself. In those men thousands more are contained, an entire people is contained, human dignity is contained … “
Velupillai Prabhakaran rebelled with great force against those who stole his people’s freedom. In him, something of the honour and dignity of an entire people, an entire nation was contained. It is not surprising therefore that his death evoked a deep sense of personal loss amongst those who feel – and who feel deeply – that they belong to that people and to that nation. It would have been surprising if it had not.
It is also understandable that there are those amongst the Tamil people, in Tamil Nadu and elsewhere, who have found it difficult to reconcile themselves to his death and want to believe that he continues to live. Understandable, but they do a great disservice both to Velupillai Prabhakaran and to the cause for which he gave more than 37 years of his life. I agree with Krishna Ambalavanar who wrote from Switzerland on 31 May 2009 –
” … மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்து தான் அதை நாம் நோக்க வேண்டும்… இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்…” கிருஸ்ணா அம்பலவாணர், 31 May 2009
I said that I did not know Velupillai Prabhakaran personally. But I knew some who had worked with him closely and many who had met with him and had spoken with him.
Sathasivam Krishnakumar (Kittu) was one who had worked closely with Prabhakaran and I came to know Kittu well during his stay in the United Kingdom and in Europe in the 1990s. On Kittu’s death in January 1993, I wrote –
“…Kittu belonged to the true intelligentsia of Tamil Eelam. Not to the pseudo intelligentsia which reads books that other people write to find ideas which they can then expound or worse still, pass off as their own. Not to the pseudo intelligentsia which writes and thinks in English and has little understanding of that which is felt and thought by the Tamil people. Not to the pseudo intelligentsia which quarrels endlessly about what ought to be done without knowing how or when to start. Not to the pseudo intelligentsia which, deprived of direction, is intent on getting there fast. Sathasivam Krishnakumar, abstracted and conceptualised his own experience, read widely, sought to integrate that which he read with his life and then set about influencing a people to action. To him, theory was a very practical thing.” – Sathisivam Krishnakumar, the Struggle was his Life, 1 February 1993
And I have always felt that if Velupillai Prabhakaran was able to command the unswerving loyalty of a person such as Kittu, then Prabhakaran too must have had qualities which matched or bettered those that Kittu had. Kittu would often speak of Prabhakaran and of some of the things that he had said to him. Some of those statements have stayed with me over these many years. Statements such as ‘Orators do not become leaders but leaders may become orators’, ‘You can wakeup someone who is sleeping but you cannot wake up someone who is pretending to be asleep’. ‘New Delhi are traders – வியாபாரிகள் – they want to bargain with our demand for freedom – விலை பேசுகிறார்கள்‘. I remember on one occasion Kittu telling a Tamil Eelam activist in London who had complained to Kittu about the lethargic response of a Tamil expatriate – ‘What is your problem. Go and meet him again. After all Thalaivar came to my home six or seven times to persuade me to join.’
There are also other memories that I have.
An Australian Tamil Eelam expatriate who I have known personally for many years, visited the Vanni in 2003 and met with Prabhakaran. In the course of a conversation, Prabhakaran remarked casually to him in Tamil – ‘ உயிரைக் கொடுக்கத் தயாராய் இருக்கிறவர்களைத்தான் அவர்கள் வேட்டையாடுகார்கள்’. – ‘You know, it is those who are prepared to give their lives that they hunt. ‘
A UK medical consultant and his wife for both of whom I have a high regard spoke to me about their meeting with Prabhakaran and his family in the Vanni in October 2004 –
“… To us Pirabaharan came across primarily as a soft spoken, deep thinking person with considerable depth of knowledge in what ever topic we discussed, with a keen desire to gain a proper understanding of each and every matter that he came across during our conversation… At lunch our two hosts made sure that my wife had her vegetarian dishes and both supervised personally the servings and Pirabaharan took a great pride in explaining the various dishes and how many vegetables and fruits were now grown in Vanni. He made sure all others at the lunch table ate well too. It was typical Thamil hospitality at it’s best, showered on us by a person who could have been very aloof and remote to the two unknown visitors but chose to be a ordinary man doing his duties as a host as expected by our traditions and customs, with out any effort but naturally as it would come to a brother feeding his long lost family…”
And I can understand the feelings that moved M.Thanapalasingham, an erudite Tamil scholar, a citizen of Australia, an accountant by profession, and a brother of a Maha Veeran who had given his life in the struggle for Eelam, to tell two police officers from India when they interviewed him in Sydney in 2001 –
‘… I have but a feeble and weak body and lack the courage and commitment required for membership of the LTTE. To be eligible for membership of the LTTE requires a level of determination and fearlessness that cries out ‘I will not lose my freedom except with my life’. This I do not have. No, I am not a member of LTTE…. No, I have not met Pirabaharan. Like millions of Tamils living in many lands and across distant seas, I do dream of meeting him one day. To meet him so that I could bow my head in front of him and with all humility say to him: ‘Thank you, thank you for restoring our dignity. Because of you, we Tamils are walking with our heads held high’. This is my dream. .’ – An Australian Tamil Stands Up for that which he believes…, 31 May 2001
Today, as I reflect on Velupillai Prabhakaran’s life and death, I take some solace from the words of Subhas Chandra Bose many years ago –
‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength…. Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next……’
One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves. I also take some solace from the reflections of Velupillai Prabhakaran himself –
“‘…Perform your duty without regard to the fruits of action’, says the Bhagavad Gita. I grasped this profound truth when I read the Mahabharata. When I read the great didactic works, they impressed on me the need to lead a good, disciplined life and roused in me the desire to be of service to the community. Above all, Subhash Chandra Bose’s life was a beacon to me, lighting up the path I should follow. His disciplined life and his total commitment and dedication to the cause of his country’s freedom deeply impressed me and served as my guiding light.” Velupillai Prabhakaran, How I became a freedom fighter – Interview, April 1994
“Nature is my friend. Life is my teacher of philosophy. History is my guide… Not the existence of man, but the action of man sets the wheel of history of the struggle in motion…History is not a divine force outside man. It is not the meaning of an aphorism that determines the fate of man. History is an expression of the dynamism of man. Man creates history. Man also determines his own fate… Simplicity is born as the highest fruit of wisdom; simplicity appears devoid of selfishness and pride. This simplicity makes one a handsome man; a cultured man…Fear is the image of weakness, the comrade of timidity, the enemy of steadfastness/ determination. Fear of death is the cause of every human fear. Who conquers this fear of death, conquers over himself. This person also reaches liberation from the prison of his mind.. Even an ordinary human being can create history if he is determined to die for truth…” Reflections of the Leader: Quotes by Veluppillai Prabhakaran Translation of Tamil Original by Peter Schalk and Alvappillai Velupillai. Published by Uppasala University, Sweden
Perform your duty without regard to the fruits of action.
“…That which was said by Lord Krishna to Arujna in the battlefield was both simple and fundamental – simple to declare but fundamental in content. It was a call for action in the battlefield and where else is there a greater need for action. And Lord Krishna urging Arjuna to do battle against those whom Arjuna regarded as his friends, his teachers and his relations, tells Arujna, “To action you have a right, but not to the fruits thereof.”
This oft repeated statement of the Gita is of very direct relevance to all of us who are engaged in activity or action of one kind or another. The detachment which the Gita speaks about is not the opposite of attachment. It is not a dead detachment. It is not a negative detachment. Understanding the Gita is not a mere intellectual exercise in the trap of opposites…. There is in each one of us a path of harmony, our dharma, and it is this path of harmony which the Gita enjoins us to follow. For Arujna that path was to engage in battle.” – Reflections on the Gita – Nadesan Satyendra, 1981
For Velupillai Prabhakaran, his dharma as he saw it, was to engage in battle. But Velupillai Prabhakaran was no sun god. Neither was the LTTE without its failings. Nevertheless, Velupillai Prabhakaran will live in the hearts and minds of generations of Tamils yet unborn as the undying and heroic symbol of Tamil resistance to alien rule – a Tamil resistance rooted in the moral legitimacy of the Tamil Eelam struggle for freedom from oppressive alien Sinhala rule.
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடாவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்.
Kaviarasu Kannadasan
And as Tamils living in many lands and across distant seas face the future, they will remind themselves yet again of the words of Ernest Renan more than a hundred years ago –
“Where national memories are concerned, griefs are of more value than triumphs, for they impose duties, and require a common effort. A nation is therefore a large-scale solidarity, constituted by the feeling of the sacrifices that one has made in the past and of those that one is prepared to make in the future. ” Ernest Renan in What is a Nation, 1885
[ Saturday, 11 July 2009, 11:38.41 PM | Tamil Nation ]
by Nadesan Satyendra [sangam.org]