மாவீரர் நாள்

மாவீரர் கல்லறை மீது உறுதி செய்கின்றோம் ! #வீரவணக்கம் #காணொளிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்நாள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerarday #Tamil #Eelam

Posted on

மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்




மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்













Prabhakaran a Leader for all Season front

தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்

தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008

தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள்
**

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்

“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை

மாவீரர் கல்லறை மீது உறுதி செய்கின்றோம் ! #வீரவணக்கம் #காணொளிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்நாள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerarday #Tamil #Eelam

Posted on



மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்

 













Prabhakaran a Leader for all Season front

தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்

தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan
தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures
Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்

தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரைகள் 1989 – 2008

தேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள்
**

வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்

“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை

பிரபாகரன் தமிழ் ஆயுதம் புதிய பாடல் -காணொளி !

Posted on

ஆறு நாட்களில் 53000 பார்வையாளர்களை கவர்ந்த பாடல்
ரம்யாவின் இனிய குரலில் தலைவன்
பெருமை சொல்லும் பாடல்
இசை: இசைப்பிரியன்
வரிகள்:கலைப்பரிதி
படைப்பு: யுகம் கலையகம்
பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் !

Posted on

   1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை….

மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்

மேலும் பார்க்க ……………

**

**

**

தமிழ்த் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து அகண்ட தமிழ் இராட்சியம் அமைப்போம் !

மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை !

Posted on

இறுதி யுத்தத்தில் நந்திக்கடலில் என்றுமில்லாத பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் என்று சிலர் நினைக்கலாம்.  ஒரு தத்துவ மேதையாக அவரைப் பார்த்தால் அவரின் சிந்தனையைத் தெளிவாக உணரலாம்:

“எப்பொழுதும் போல நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன்நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்“.

நாம் நம் கடமையைச் செய்கிறோமா என்பதுதான் ஒவ்வொரு தமிழரும் இந்த  மாவீரர் நாளில் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான முதற்படி.

ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்;  ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும்  அபூர்வம்.  ஆனால்  சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை  ஆண்ட மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) அதுபோன்ற ஒரு தத்துவ மேதை [1]. அவரின் ஆட்சி காலம் ரோமாபுரிப் பேரரசின் பொற்காலமாகக்  கருதப்படுகிறது.

தமிழர் வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி அழியாத் தத்துவங்களையும்  காப்பியங்களையும்  படைத்தாலும், எந்த ஒரு அரசனும் அவ்வாறு படைத்ததாக வரலாறு இல்லை. அவ்வாறான தத்துவ அரசன் (philosopher king) என்ற பட்டம் ஒருவருக்கு அளிக்கப்படக்கூடியத் தகுதி இருக்கிறதென்றால், அது பிரபாகரன் அவர்கள் மட்டுமே. அரேலியசின் [1] நூலைப் படிக்கும்பொழுதுதான் எவ்வளவு தூரம் அரேலியசும் பிரபாகரனும் ஒரே பண்புகளைக் கொண்டிருந்தார்கள் என்று விளங்குகிறது.   உதாரணமாக  அடக்கம்,  ஒழுக்கம்,  வீரம்,  பயனில சொல்லாமை, கடமையைக்  கண்ணாகக் கருதுதல், இறப்பைத் தூசுபோலக் கருதுதல், அன்பு, குடும்பம், வாழ்க்கைத் துணை, இயற்கையை ஒன்றி  வாழ்தல், இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் பக்குவம், அறம் போற்றுதல், மூடநம்பிக்கையை வெறுத்தல், அமைதி, பற்றற்று இருத்தல், எளிமை, நேர்மை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமை, சிந்தித்து செயலாற்றல், இன்பத்தைவிட ஒழுக்கத்திற்கு முதன்மை, புலன்களை அடக்குதல், எதற்கும் கலங்காத அமைதி, மேடை அடுக்குமொழி பேச்சுக்களில் பங்குகொள்ளாமை,  அனைவரிடமும் எளிமையாகப் பழகுதல், காலத்தை வீணடிக்காமை, நீதி தவறாமை,  ஒருவரின் செயலுக்கேற்ற பரிசையோ தண்டனையோ உடனுக்குடன் வழங்குதல், புகழ்ச்சியை வெறுத்தல், கூர்ந்து கவனித்தல், தூரநோக்கான பார்வை,  தெளிந்த சிந்தனை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் செய்யவேண்டியதைச் செய்தல், தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அரேலியசின்   தத்துவம் என்பது:  இந்த பிரபஞ்சத்தின் முடிவிலா கால அளவில்  நமது வாழ்க்கை என்பது கண் இமைக்கும் நொடிப்பொழுதே. இதில் ஒருவர் இருபது வயதில் இறக்கிறாரா அல்லது நூறு வயதில் இறக்கிறாரா என்பதில் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகப்  பயன்படுத்தி இருக்கிறாரா என்பதே முக்கியம். அவ்வாறான அர்த்தமுள்ள வாழ்க்கையை எந்த எதிர்ப்பிற்கும் பயப்படாமல்,  ஒழுக்கத்துடன்   தனது கடமையைத் தவறாமல் பின்பற்றுவதன்  மூலமே  அடைய முடியும்,  மாறாக  புலன்களின் `வழியாக இன்பத்தை நாடுவதன் மூலம் அல்ல.

“If you apply yourself to the task before you, following the right reason seriously, vigorously, calmly, without allowing anything else to distract you, but keeping your divine part pure, as if you might be bound to give it back immediately; if you hold this, expecting nothing, fearing nothing, but satisfied with your present activities according to nature, and with heroic truth in every word and sound which you utter, you will live happily. And there is no man who is able to prevent this.” [1]

“Never value anything as profitable that compels you to break your promise, to lose your self-respect, to hate any man, to suspect, to curse, to act the hypocrite, to desire anything that needs walls and curtains.”  [1]

பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை இத்தத்துவத்திலிருந்து  பெரிதாக வேறுபட்டது அல்ல.  இவ்வுலகில்  மாற்றங்கள் சூறாவளிபோல நிகழ்வது. தத்துவ பிடிப்பு இல்லாத ஒருவரால் நீண்டகாலம் ஒரு திசையில் பயணிக்கமுடியாது.

அரேலியசு  தனது வாழ்க்கைத் தத்துவங்களை தனது சுய குறிப்புக்காக எழுதினார்.  பின்பு அது அவரின் இறப்புக்குப் பின்னர் நூலாக மற்றவர்களால் வெளியிடப்பட்டது. இன்று அது ஒரு தலைசிறந்த தத்துவநூலாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.  பிரபாகரன் அவர்கள் அரேலியசைப்  போன்று அடக்கமானவர். அரேலியசு தனது தத்துவங்களைத் தானாக முன்வந்து நூலாக வெளியிடாதபொழுது, பிரபாகரனும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒன்றை  உறுதியாகக் கூற முடியும்:  பிரபாகரன் அவர்கள் இறுக்கமான பிடிப்பு கொண்ட தத்துவ மேதை.  அவரை எதைக்கொண்டும் மாற்ற முடியாது.

பிரபாகரன் அவர்கள் ஒரு தலைவராக உலகம் வியக்கும் சாதனைகள் புரிந்தவர் என்றாலும், வாழ்க்கையில்  அவர் ஒரு துறவியே. அவரை எளிதாக திருவள்ளுவர், வள்ளலார் ஆகியோர் வரிசையிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

“Nearly two millennia after Marcus set down his thoughts, they speak with undiminished eloquence, giving us pause to wonder a man who stood at the pinnacle of worldly power yet preserved the inner life of a saint.” [1]

ஒரு நாட்டின் ஒழுக்கம் தனி மனித ஒழுக்கத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒழுக்கமில்லாத மக்கள் ஒழுக்கமான நாட்டை எதிர் பார்ப்பது என்பது கானல் நீரே. புலிகளின் ஈழம் உலகில் மிகச்சிறியது என்றாலும், உலகில் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளைப் படைத்தனர். அந்த வெற்றிகளின் ஊற்று இந்த தனிமனித ஒழுக்கத்திலிருந்தே பிறந்தது.

Civic virtue is a mirage unless anchored in the inner virtue of each citizen [1]

பெரும்பாலான மாவீரர்கள்  முப்பது வயதுக்குள் விதையாயினும், அவர்கள் சாதித்தது ஆயிரம் ஆண்டுகளானாலும் நினைவு கூறப்படும். அவர்கள் வாழ்ந்தது நிறைவான அர்த்தமுள்ள வாழ்க்கை.

ஒரு நாட்டின்  பொற்காலம் என்பது செல்வச்சிறப்பினால் உருவாவது என்று பார்ப்பது தவறான பார்வை. என்று ஒரு சமூகத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு சிறக்கிறதோ, அன்று தான் பொற்காலம் ஏற்படுகிறது. செல்வச்செழிப்பு என்பது அதன் ஒரு விளைவுதானே ஒழிய காரணமல்ல. அந்த வகையில் பார்த்தால் புலிகளின் ஈழ நாடு செல்வத்தில் குறைந்திருந்தாலும், தேவையான மற்ற  அனைத்திலும் நிறைந்திருந்தது. அது பொற்காலம் படைக்கத் தேவையான  அனைத்து அடிப்படைக் கூறுகளைக் கொண்ட  ஒரு அர்த்தமுள்ள நாடு.

ஒரு நல்ல சமூகம் தனது மாவீரர்களை முதலில் போற்றும், அதன்பின் அதன் அறிவாளர்களைப் போற்றும். அதை உலகின் தலைசிறந்த முதல் பத்து பரிசில்கள் பிரதிபலிக்கின்றன [3]. இன்று  நமது சமூகத்தில்  மாவீரர்களும் அறிவாளர்களும்  பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  இன்று புகழ் என்பது பொய்யான திரைப்படத்தில் நடிப்பவர்களை நோக்கிப் பாய்கிறது. இது ஒரு சமூகக்கேடாக மாறி நிற்கிறது. இன்றைய நமது சமூகத்தின் வீழ்ச்சிக்கு இந்தப் புகழின் திரிபும் ஒரு காரணம் [13]. புகழ் என்பது அறம் சார்ந்து அறிவு சார்ந்து  நிற்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சமூகம் சீரழிய வாய்ப்புகள் அதிகம்.  பண்டைய தமிழர் நாகரீகத்தில்  புகழ் என்பது வாழ்விற்கு முக்கியமான வீரம், அறிவு, அறம்,  ஈதல், கலை, நாடகம், நடனம், இலக்கியம் ஆகியவற்றை ஒட்டி அமைந்தது. அது மாபெரும் படைப்புகளையும் வீரத்தையும்  உருவாக்கியது.  புலிகள் அந்த பண்பாட்டு சிறப்பை மீண்டும் கொண்டு வந்து பல சாதனைகளைப் படைத்தனர். மாவீரர் நாள் தமிழரின் நாட்காட்டிகளில் இருப்பதிலேயே முக்கியமான நாளாக என்று சமூகத்தில் பார்க்கப்படுகிறதோ, அன்று நாம் சாதனைகள் படைக்கும் தன்மை கொண்ட சமூகமாக மாறி நிற்போம்.

தமிழினம் மீண்டு எழவேண்டுமானால், அது தனிமனித ஒழுக்கத்தை நிராகரித்துவிட்டு செய்ய முடியாது. அவ்வாறான ஒழுக்கத்தை கற்க பின்பற்ற நாம் வேறெங்கும் சென்று தேடி அலையவேண்டியதில்லை. பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்து, கூடவே திருக்குறளையும்  கற்பித்தால் போதுமானது. பிரபாகரனின் வாழ்க்கை என்பது  திருக்குறள் கூறுவதிலிருந்து பெரிய வேறுபாடு இல்லை என்றுதான் கூறவேண்டும். சிலர் பெரியாரைப் பிடிக்கும், ஆனால் பிரபாகரனைப் பிடிக்காது என்பர். ஆனால் உண்மை என்னவென்றால்  பிரபாகரனுக்குள் பெரியார் அடக்கம். பிரபாகரனின் தத்துவங்கள் இன விடுதலை[4], தனிமனித ஒழுக்கம், பண்பாடு [ 8],  போரியல் மற்றும் உத்திகள் [5, 6,7,9,10],  உலக அரசியல்[4], தலைமைத்துவம் [11]  என்று சமூகம் சார்ந்த அனைத்து பரிணாமங்களைக் கொண்டுள்ளது. பிரபாகரன் என்ற பாத்திரம் மிகப் பெரியது; அதை திருக்குறளைக் கொண்டோ அல்லது பெரியாரைக் கொண்டோ நிரப்பிவிட முடியாது. பிரபாகரனின் தத்துவங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால்,  அவை  உலகம் அனைத்தும் காணும்படி செயல்முறைப் படுத்தப்பட்டு உலகம் வியக்கும் வெற்றிகளை அடையக் காரணமாக அமைந்தது.  நாம் அவற்றை நம்பி பயன்படுத்தலாம்.  ஆனால் இந்த சிறப்பு நூல்களில் உள்ள தத்துவங்களுக்குக் கிடையாது.

சிலர் பிரபாகரன் அவர்கள்  சில    ஆதாரமில்லாத தவறுகளை செய்திருக்கிறாரென்று காரணம் கூறி  அவரை நிராகரிக்கின்றனர். உலகில் தவறு செய்யாத மனிதனே கிடையாது. தத்துவமேதையாகக் கருதப்படும் அரேலியசே தனது  ஆட்சியில் கிறித்தவர்களைத் துன்புறுத்தினார், ஆனால் அதன் காரணமாக அவரது உண்மையான தத்துவ பங்களிப்பு நிராகரிக்கப்படவில்லை. அதே கிறித்துவ உலகம் அவரை ஒரு சிறந்த கிருத்துவ உள்ளம்  கொண்ட தத்துவமேதையாக ஏற்றுக்கொண்டுள்ளது.  பிரபாகரனின் உண்மையான பங்களிப்பை நிராகரிப்பது அறிவுடைமை ஆகாது.

A man who, for reasons of state, possibly sanctioned the persecution of Christians achieved a genuinely Christian depth of humility… “what an affinity  for Christianity had this persecutor of the Christians!”. [1]

ஈழப்போர் என்பது  தமிழர் வரலாற்றின் மாபெரும் பரிணாமம். அது தனக்கு முந்தைய மற்றும் பண்டைய  வரலாற்று, பண்பாட்டு, அறிவுக்   கூறுகளை உள்வாங்கியது மட்டுமில்லாமல்  புதுமையைப் படைத்தது. ஈழப்போரின் விளைவாக தமிழ்த்தேசியம் பாரிய முன்னேற்றங்களை இன விடுதலை, பண்பாடு, வாழ்க்கைத் தத்துவம், போரியல்  உத்திகள், தலைமைத்துவம், உலக அரசியல், சமூகம்  என பல துறைகளில் கண்டுள்ளது.    நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரனும் மாவீரர்களும் கட்டிவிட்டனர்[12]. இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை.   அதை செய்து முடிக்க வேண்டுமானால், அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழ நினைத்தால் மட்டுமே முடியும்.

குறிப்பு: அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் போரிடுவது மட்டும் என்று  பொருள் கொள்ளக்கூடாது.

இறுதி யுத்தத்தில் நந்திக்கடலில் என்றுமில்லாத பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் என்று சிலர் நினைக்கலாம்.  ஒரு தத்துவ மேதையாக அவரைப் பார்த்தால் அவரின் சிந்தனையைத் தெளிவாக உணரலாம்: “எப்பொழுதும் போல நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன்நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.  நாம் நம் கடமையைச் செய்கிறோமா என்பதுதான் ஒவ்வொரு தமிழரும் இந்த  மாவீரர் நாளில் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான முதற்படி.

  1. Aurelius, Marcus. Meditations.
  2. Goldstein, Rebecca. Plato at the Googleplex: Why philosophy won’t go away. Vintage, 2015.
  3. Top Ten Most Prestigious Medals, https://www.historyandheadlines.com/top-ten-prestigious-medals/
  4. பரணி கிருஷ்ணரஜனி, நந்திக்கடல்’ கோட்பாடுகள். ஒரு அறிமுகம், http://eeladhesam.com/?p=5459
  5. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
  6. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 2
  7. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 3
  8. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 4
  9. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 5
  10. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 6
  11. சு.சேது, பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்
  12. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7  – இறுதி பாகம்
  13. சு.சேது, ஒரு சமூகத்தின் சாதனையில் புகழின் பங்கு
  14. Popper, Karl. The open society and its enemies. Routledge, 2012.

1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் !

Posted on

தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள்.ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.

உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.


1989 முதல் 2008 வரை மாவீரர் நாள் நிகழ்வில் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரைகள்

Leader V Prabakaran’s Heros day speeches from 1989 to 2008

காணொளியில்
எழுத்து வடிவம்
English Translation
2008 எழுத்து வடிவம் 2008
2007 எழுத்து வடிவம் 2007
2006 எழுத்து வடிவம் 2006
2005 எழுத்து வடிவம் 2005
2004 எழுத்து வடிவம் 2004
2003 எழுத்து வடிவம் 2003
2002 எழுத்து வடிவம் 2002
2001 எழுத்து வடிவம் 2001
2000

எழுத்து வடிவம்

2000
1999

எழுத்து வடிவம்

1999
1998 எழுத்து வடிவம் 1998
1997 எழுத்து வடிவம் 1997
1996 1996
1995
1994
1993
1992
1991
1990
1989

 

CLICK HERE FACEBOOK

 

# Hon.Velluppillai Prabhakaran, # Maaveerar day , #ltte,# Tamileelam

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள் தேசியத் தலைவர்-காணொளி

Posted on Updated on

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்..

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை

Posted on Updated on

leader at heros day 2008 அன்றைய தமிழர் இராட்சியம் விழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியரும், அயலவருக்கும், அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாறுத் திருபத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலமா இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒழித்துக் கொண்டிருக்கிறது.

சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ். ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கின்றார்கள். வீரம் சேர்ந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவ அர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புக்களுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்…
(2003ம் ஆண்டு தமிழீழ மாவீரர் நாள் உரையிலிருந்து….)leader at heros day

தமிழீழ மாவீரர் நாள்

மாவீரர் என்றால யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்றனர். எதிரியை அழித்தவர்கள். அஞ்சாது எதிரியின் பாசறைமேல் படையெடுத்து வெற்றி கண்டவர்கள். உலகவரலாற்றில் எமது மாவீரர்களுக்கு நிகரானவர்கள் வேறு யாருமில்லை. ஆணும் பெண்ணுமாகப் பால் வேறுபாடின்றிப் போரிட்டுச் சாதனை படைத்த மாவீரர்களைத் தமிழீழம் தவிர்ந்த பிறநாட்டில் காண்பது அரிது. கொடியது அகல, விடுதலை கிடைத்திட உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்த மாவீரர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.

தமிழீழ மண்ணெங்கும் நினைவுச்சின்னங்களாய், சிலைகளாய், துயிலுமில்லமாக மாவீரர்கள் குடிக்கொண்டுள்ளனர். அவர்கள் ஈழமண்ணின் விதையாகவும், ஒளிமயமான சுடர் ஒளியாகவும், எம் இனத்தின் பாதுகாப்பு அரணாகவும் இடம் பெறுகின்றனர். எமது தேசமெங்கும் சர்வவியாபியாகி மாவீரர் நிற்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமான மாவீரர்கள் வானளாவிக் கால, நேர, இடம், தூர எல்லைகளைக் கடந்து எமது உணர்வோடும் கனவோடும் கலந்துவிட்டனர்.

மாவீரர்நாள் தமிழீழத்தின் தேசியநாள் என்பதை யாவரும் அறிவர். அன்று நாம் துயிலும்மில்லம் சென்று மாவீரர் கல்லறைகளுக்கு விளக்கேற்றுகின்றோம். மனித உடல் கிடக்கும் கல்லறை தெய்வத்தின் இருப்பிடமாகப் பண்டுதொட்டு நம்பப்படுகிறது. பெரும்பாலான வணக்கத்தலங்கள் கல்லறைகலாகவே ஆரம்பித்தன. நாளடைவில் அவை கோயில்களாக மாறிவிட்டன. மக்கள் காட்டும் மதிப்பும், மரியாதையும் அவர்கள் கல்லைரையில் உரைவோர் மீது இயல்பாக கொண்டுள்ள பாசமும், பரிவும் கோயிலாக கல்லறைகள் மாறுவதற்குக் காரணமாகின்றன.

இப்போது மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழத்திலும், ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழத்தின் வட, கிழக்கு மண்பரப்பில் இருபத்தைந்து மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 12,635 கல்லறைகளும் 7,365 நினைக்கற்களும் காணப்படுகின்றன. கூட்டுத்தொகை 20,000 இது எப்படி என்றால் வித்துடல் ஒரு இடத்திலும் அதே வித்துடளுக்குரிய நினைவுக்கல் இன்னோர் இடத்திலும் இருப்பதால்தான். உதாரணத்திற்கு தென்தமிழீழ மாவீரருடைய வித்துடல் கோப்பாய் துயிலுமில்லத்திலும், அவருடைய நினைவுக்கல் அவர் பிறந்த மண் தரவை மட்டக்களப்பிலும் இருக்கும். இதன் காரணமாக கூட்டெண் 20,000 ஆக உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு மாவீரர் பலருடைய வித்துடல்கள் விசுவமடு, கோப்பாய் போன்ற துயிலுமில்லங்களிலும் விதைக்கப்படடுள்ளன. அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழத்தின் மாவீரர் துயிலுமில்லங்களிலும் நாட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாவீரர் குடும்பத்தினரின் விருப்பப்படியே இப்படிச் செய்யப்படுகிறது. இரு துயிலுமில்லங்களிலும் அவர்களுக்கான தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

மாவீரர் நாள் பாடலின் நான்கு வரிகளை இங்கு தருகின்றோம்.

“உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்”

2005 துயிலும்மில்ல விபரத்தின் அடிப்படையில் 2005ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.

நீங்கள் என்றோ ஒருநாள் தாயகம் நோக்கிய பயணத்தை தொடர்வீர்கள், அன்று எமது தாயகம் ஒரு சுதந்திர தேசமாக அமைந்திருக்கும்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தேசியத் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளிலிருந்து….

… உலகில் எந்தப் பகுதியில், எந்தச் சூழழில், எந்தத் தகுதியில் வாழ்ந்தாலும் தமிழீழத்தில் தான், அந்தத் தாயக பூமியில்தான் உங்கள் வேர் ஆழப் புதைந்து கிடக்கிறது. இந்த மண்ணில் தான் உங்கள் இனத் தனித்துவத்தின் அடையாளம் ஆழப்பதிந்து கிடக்கிறது. இந்தத் தாயக தேசம் எதிரியின் ஆதிக்கப்பிடியில் சிக்கி அழிந்து போகாது பாதுகாப்பதில் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு. பொறுப்பு உண்டு. கடப்பாடு உண்டு…

… இன்றைய காலமும் சூழழும் உங்களது பங்களிப்பைத்தான் வேண்டிநிற்கிறது. காலம் காலமாக எமது போராட்டத்திற்கு உதவி வருகின்றீர்கள். உங்களது பங்களிப்புக்கள் எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் எழுட்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றது. ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு இதனை என்றும் பதிவு செய்து வைத்திருக்கும்…

தமிழர் தேசத்தின் பாதுகாப்பும் எதிர்கால அரசியல் வாழ்வும் இன்றைய போரின் போக்கில் தான் தாங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழினத்தின் போராட்ட சக்தியாகிய எமது இயக்கத்தின் பலத்திற்கும் வளத்திற்கும் வலுச்சேர்ப்பது உங்களது பொறுப்பும் கடமையும் ஆகின்றது.

– தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்…
(1998ம் ஆண்டு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விடுத்த அறிக்கையிலிருந்து)

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”