உலைக்களம்

தமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை !

Posted on

ஆண்டுகள் ஆறு பத்தோடு
நாலு அகவைகள் கூடி நிற்க
அலை அடிக்கும் வல்வையிலே
வந்துதித்த எம் ஒளிவீச்சே
வாழ்க என்றும் நீ வாழ்க…

வல்ல மகன் நீயென்று
வந்த பகை ஓடி போக
வெல்லும் வரி எங்களுக்கு
இடித்துரைத்த சூரியனே
வாழ்க நீ என்றும் வாழ்க

வல்லமை தந்தெம்மை
வாழ வைக்கும் எம் பலமே
நாளிகைகள் ஒன்று சேர்த்து
நிலமகனே வாழ்த்துகிறோம்
காரிருள் நீக்கி வாழ்க அண்ணா
அண்ணா…,

நீ எங்கே என்று
ஒருதடவை சொல்லி விட்டு
மறுபடியும் மறைந்திடண்ணா
எங்கள் வானேறி வரும்
வல்லூறுகளின் குரல்களைக் கேட்க
என்னால் முடியவில்லை அண்ணா…

உன் குரல் ஒன்று இல்லையென்று
அங்கொன்றும் இங்கொன்றும்
எங்களுக்கான மரண சாசனங்கள்
எழுதிக்கொண்டு பல ஊழைச்
சத்தங்கள் ஓங்கி ஒலிக்குதண்ணா

நாங்கள் தான் விடிகாலைச்
சேவல்கள் என்று
இரவு பகலாக கூவிக்கூவி
உன்னையும் எங்களையும்
விற்றுத் தொலைக்குது
ஒரு கூட்டம்…

வாய் மட்டும் போதுமென்று
பேயாட்டம் ஆடிக் கொண்டு
நாசமான நாக்காலே
உன்னை போற்றுவதாய்
வதைத்தெடுக்கும் மறுகூட்டம்…

நீ தான் வளர்த்ததுகள் என
உன் பெயரை கூறிக்கொண்டு
வலியதை மறந்து
கதிரையை நினைத்து
அங்கும் இங்கும் என
மல்லுக்கட்டும் கூட்டம் ஒன்று
நீ இட்ட புள்ளிகளில்
இணைந்த புதுக் கோலமாக
அடையாளம் ஒன்றை வைத்துக் கொண்டு
மார்தட்டும்

சேர்.. நிலைக் கூட்டமொன்று
மெல்ல முடியவில்லை
வெல்லவும் வழியில்லை
வல்லவனே எம் அண்ணா
வந்திங்கு சேர்ந்திடண்ணா

தேம்பி அழ வைத்து இனியும்
மௌனம் எங்கும் வேண்டாமண்ண…
இனிய இந்த நாளில்
எமக்கானவனே உன்னை
வாழ்த்தி வேண்டுகிறேன்

ஒற்றைத் தடவை உன் குரல் காட்டி
மௌனித்து விடு நீ…

அன்புத் தம்பி இ.இ. கவிமகன்.
26.11.2018

***

தமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை இன்று…

உலகம் போற்றும் உத்தமன் எங்கள்
தங்க தலைவரின் 64 வது
அகவைதினம் இன்று…
ஆண்டபரம்பரை நாங்கள் அதிகாரத்திற்கு
அடிபணிய மாட்டோம் என
உலகத்திற்கு எடுத்து சொன்ன
உத்தமர் பிறந்ததினம் இன்று…

வைகறைகள் கூட அவர் பெயர்
சொல்ல,, உலகமே வியந்து
உற்று நோக்கிய எம் வீரபுதல்வர்
பிறந்ததினம் இன்று…

அண்ணணாய், தம்பியாய், நல் ஆசானாய்
சிறந்ததொரு வழிகாட்டியாய்
எம் தேசத்திற்கு கலங்கரை விளக்கமாய்
இறைவன் படைத்திட்ட
உன்னத தலைவரின் பிறந்ததினம் இன்று…

பல்லாயிரம் ஆண்டுகள் நீடூழி வாழ்க நீங்கள்…
எம் சந்ததிகள் சொல்லும்
இவ்வையகத்தில் என்றும்
உங்கள் புகழை……

யாழ் கனகசனா…

தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..?

Posted on Updated on

praba-god

தாயிலாப்பிள்ளை யானோம்

விடுதலை தந்த மூச்சே என்
வியாபகப்பொருளே
உன்னைப் பாடக்கூட முடியவில்லை
உனக்காய் பாமாலை சூட்டியவன்
உனக்கு பூமாலை சூட முடியாமல்
தவிக்கின்றேன்?

இறைவன் என்கிறார்/நீ
மனிதன் என்கிறார் /இல்லை
முற்றும் துறந்த முனிவன் என்கிறார்
அதனால் உனக்கு….
வழிபாடு தேவை இல்லை
என்கிறார்
அய்யன் அய்யனே
பூசைக்கு வராதா திருவே
உருவம் நீ
வீதிக்கு வராத உருவே
வதனம் நீ
ஆசைக்குக் கூட உன்னை
அழகுத் தேரில் அழைத்து,
வரமுடியவில்லை
என் காவல்தெய்வம்
கரிகாலச் சோழனை
ஆரத்தழுவி
அழக்கூட முடியவில்லை

உலகத்தமிழினமே
உணக்கு ஒரு மடலென்று
உரக்கச் சொல்லியதால்
உரலில் கட்டி
வாய்கட்டி அடைக்கப்பட்டேன்
வரலாற்றுத் தவறை ஏன்?
செய்தீர் என்று
வாய்மை கொண்டதற்காகவே
வாங்கியவன் துரோகிப்பட்டம்.

அய்யன்,அய்யனே
நீயே என் உயிரானாய்
நீயே என் உணர்வானாய்
தாங்க முடியவில்லை?

தங்கவண்ண மேனியும்
புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
கண்களில் வீரப் போர்புலிப்பார்வையும்
புவனம் யாவையும் தன்வயமாக்கிடிம்
எங்களின் கோமகா
தமிழ்க்குலக்காவலா
தமிழீழ நாட்டின் மேதகு தலைவா
மொட்டவிழாப் பயிராயிருக்கும் போதே
சுட்டெரிப்பேன் பகையை என்று
சுடர்முகம் தூக்கி நின்ற
குலவிளக்கே / உன்
கட்டவிழா மேனிதன்னைக்
கரம்தொட்டுத்தடவியாடக்
காத்திருந்தோம்
கண்விழித்தோம்
முடியவில்லை

அய்யனே
நான் அழவில்லை ,
இரத்தம் அழுதது
போவது நிச்சயம் ,
முன்போ பின்போ
ஆயினும் அழுகை
அதன் பேர் பாசம்
வாழ்க்கை மரணம்
நடுவில் தடைச்சுவர்
எனக்கு எல்லாம்
இவனென்று இருந்தேன்,
நாதியற்றேன் அப்பொழுதே..
என்னினத்தைக் காப்பவர்,
யார் ?
என்னை ஈன்றவனை
என்னை உலகுக்குத்தந்தவனை
எனக்கு எல்லாமாய் ஆனவனை
அழகுபார்க்க முடியவில்லை
திக்குத்தெரியாமல்
திகைக்கின்றேன்
என்செய்வேன் ..
சென்றனை என்ற போதும்
செவியினும் நம்…பவில்லை

அம்பலவி ஒரு விசரன்
அண்ணை இருக்கும் போது
அழுது புலம்புகிறான் என்று
அணைவரும் சொல்லுகிறார்
போதாக்குறைக்கு
மனநோயாளி என்று
மகுடம் சூட்டுகின்றார்
அது உண்மையாய் இருக்கட்டும்
நான் என்ன …?
கொள்ளி வைக்கவா கேட்கிறேன் ?

குலம்காத்த கோமகனை
நிலம் பார்த்து அதிரும் வண்ணம்
கெடுதலைக்கு ஆழாகிக்
கீழோரால் கீழ் என்று
இகழப்படும் என்றன்
பெரும்தலைவன்
பாதத்திருவடியை
பாரெல்லாம் போற்றும்
பண்பை உருவாக்க
நினைக்கின்றேன்.

நாட்டுக்காய் உழைத்த
உத்தமனாம் பெருவீரன்
நிலைதனை அறிந்து தேர்ந்து
நீதிக்குத் தொடுக்கும்
யுத்தத் தளபதியாய்
நின்றிருந்தான்
பெரும்சேனை முகப்பதனில்
நாடளிக்கும் குணக்கேடர்களைக்
கூடி எதிர்ப்பதற்க்குக்
கூவுகின்றான் ,

தெருவெல்லாம் பாசறைகள்
முள்ளிவாய்க்கால் பெருவெளியில்
இரத்த வாய்க்கால்
பெருக்கெடுத்து ஓடுவதை
சகிக்காத பெரும் தலைவன்
போருக்கு நாள் குறித்து
விரைவில் போர் தொடங்கும்
பொறுத்திருங்கள் எனப்
பதில் இறுத்தான்
படைகொண்டு செல்வதற்கு
இன்னும் சில நாட்களே
எனக்கண்டு சிந்தை மகிழ்ந்தான்

அதற்குள்..
கொடும் விந்தை ஒன்று
உருவாகும் என
யார் கண்டார் …..?
பாசறைக்குப் பக்கத்தே
படைநடத்தும் விதம் பற்றித்
தனிமையிலே நின்று
தலைவன் யோசனைக்கு
அடிமையானான்
அப்போது …..
அண்டை நாட்டோடு
அகிலத்தின்
ஆதிக்கக் கரங்களெல்லாம்
ஒன்றுகூடி …
உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற
நாய் நரிகள் கழுகுக்கும் பருந்துக்கும்
இவ்வுடலைக்கொடுப்பதற்கே
சுற்றியுள்ளார் என்பதனை
உணர்ந்து ஆய்ந்து
தான் வளர்த்த வீரர்களை
அழித்துப்போடல்
ஆகாதென அறிந்து
போர்தொடுக்க துணிந்த வேளை
மலைபிளக்க வெடி வைத்தது போல்
மாவீரன்
மண்டையைப் பிளப்பதற்கும்
துணிந்து விட்டார் .

தலை நொறுங்கித்
தரையில் சாய்ந்தான்
தமிழ் தலைவன்
தினவெடுத்த தோள்களோடு
தினம் திரிந்த மணிமார்பில்
உதிர வெள்ளம்.
முடித்து விட்டார் பகையை என்ற
இறுமாப்பில்
ஆரியத்துச் சிங்கம் மண்ணை
முத்தமிட்ட வேளை
உத்தமனும் கடைசி மூச்சை
நாட்டுக்கே அளித்து விட்டு
துயில் நீங்காத்தொட்டிலில்
படுத்துக்கொண்டான்

சித்திரம் சிதைந்தது
எனக்கேள்வியுற்று
இத்தரையில் மாந்தரெல்லாம்
உயிருள்ள பிணமாகி
உருக்குலைந்து போனார்
தலைமகனே
தலைகுனியாத் தமிழனாக,
இறுதிவரை போராடி
இலங்குபுகழ் ஈழமதின்
அணையாச் சுடரானாய்
உனை மறக்க முடியாமால்
உள்ளமெல்லாம் நீ நிறைந்தாய்
சாகாததாகச் செத்தது மேனி
தளராததாகத் தளர்ந்தது பூமி
வேகாத வெந்தன விழிகள்
வீட்டிலும் நாட்டிலும்
அவையே ஒளிகள்
அய்யகோ தமிழே
தாயிலாப்பிள்ளை யானேம்
தலைவனை இழந்த பின்னே…..?

prabakaran god

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

prabhakaran

காலம் ஒரு பதிலெழுதும்

எனக்கும் உனக்கும்
இடைவெளிகள் அதிகம்
என்றாலும் நான்
உன்னை விரும்பினேன்
ஒருவகையில்
உன்னை ரசித்தேன்

நீ
வீரன் என்பதற்காக அல்ல.
கடவுளுக்குச் சமனானவன்
என்ற கற்பனையாலும் அல்ல.

நானே நீயாக
எனது உணர்வுகளே
உனது உணர்வுகளாக
எனது ஆவேசமே
உனது ஆவேசமாக
பாவித்துக் கொண்டே
உன்னில் என்னைக் கண்டேன்.

இன்று,
நீ இல்லை
அது குறித்து
அழக் கூட முடியவில்லை.

எம்மவர் வாழ்வில்
ஒருசில பொழுதுகள்
அன்று இருந்தன.
அந்நியப் படைகள்
எம் மண்ணை
ஆக்கிரமித்திருந்த காலம்
இருண்ட பொழுதுகளே
எமக்காக மிச்சமிருந்த காலம்
உறவுகளைப் பிரிந்தாலும்

அழமுடியாத காலம்

அந்தக் காலங்கள்
மாறவேண்டுமென்றே நினைத்தோம்.

நான் வேண்டுதல் செய்தேன்
நீயோ
உனக்காகவும் எனக்காகவும் போராடினாய்

இன்று,
நீ
எம்மிடையே இல்லை
தெரிந்தும்
பகிரங்கமாக அழ முடியவில்லை
அஞ்சலிக்க முடியவில்லை.

இன்று,
எமை அழுத்தும்
ஷபூட்ஸ்| கால்கள் இல்லை
ஆக்கிரமிப்பாளனின்
ஆதிக்கமும் இல்லை
இருந்தும் கூட
என்னால அழ முடியவில்லை.

என் கையே
குரல்வளையை நசிக்கிறது
வளர்த்த கடாவே
மார்பில் பாய்கிறது

இதனையா நான் யாசித்தேன்?
இதற்காகவா
நீ
உன் வாழ்வை
அர்ப்பணித்தாய்?

வளர்ப்பு நாய்
இறந்ததற்குக் கூட
கண்ணீர் வடிக்கும் உலகில்
மூன்றுநாள்
துக்கம் அனுட்டிக்கும் உலகில்
எசமான் இறந்ததற்காய்
அழமுடியா அவலம்

சரித்திரத்தை உருவாக்கச்
சமராடிய உனது
சரித்திரமே இன்று
மறைக்கப்படும் அவலம்

எதிரியினால் அல்ல

நேற்றுவரை உனது
நண்பனாய்
சகோதரனாய்
நீ
இறுதிவரை
நம்பியருந்தவர்களால்
சுதந்திரத்துக்காகப் போராடிய(?)
அடக்குமுறையாளர்களால்

காலம் ஒரு பதிலெழுதும்
அப்போது
உன் கல்லறையில்
ஒரு பூ வைப்பேன்
அதுவரை……?

சண் தவராஜா ஊடகவியலாளர்

-இன்போ தமிழ் குழுமம் –

தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..?

Posted on

praba godதாயிலாப்பிள்ளை யானோம்

விடுதலை தந்த மூச்சே என்
வியாபகப்பொருளே
உன்னைப் பாடக்கூட முடியவில்லை
உனக்காய் பாமாலை சூட்டியவன்
உனக்கு பூமாலை சூட முடியாமல்
தவிக்கின்றேன்?

இறைவன் என்கிறார்/நீ
மனிதன் என்கிறார் /இல்லை
முற்றும் துறந்த முனிவன் என்கிறார்
அதனால் உனக்கு….
வழிபாடு தேவை இல்லை
என்கிறார்
அய்யன் அய்யனே
பூசைக்கு வராதா திருவே
உருவம் நீ
வீதிக்கு வராத உருவே
வதனம் நீ
ஆசைக்குக் கூட உன்னை
அழகுத் தேரில் அழைத்து,
வரமுடியவில்லை
என் காவல்தெய்வம்
கரிகாலச் சோழனை
ஆரத்தழுவி
அழக்கூட முடியவில்லை

உலகத்தமிழினமே
உணக்கு ஒரு மடலென்று
உரக்கச் சொல்லியதால்
உரலில் கட்டி
வாய்கட்டி அடைக்கப்பட்டேன்
வரலாற்றுத் தவறை ஏன்?
செய்தீர் என்று
வாய்மை கொண்டதற்காகவே
வாங்கியவன் துரோகிப்பட்டம்.

அய்யன்,அய்யனே
நீயே என் உயிரானாய்
நீயே என் உணர்வானாய்
தாங்க முடியவில்லை?

தங்கவண்ண மேனியும்
புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
கண்களில் வீரப் போர்புலிப்பார்வையும்
புவனம் யாவையும் தன்வயமாக்கிடிம்
எங்களின் கோமகா
தமிழ்க்குலக்காவலா
தமிழீழ நாட்டின் மேதகு தலைவா
மொட்டவிழாப் பயிராயிருக்கும் போதே
சுட்டெரிப்பேன் பகையை என்று
சுடர்முகம் தூக்கி நின்ற
குலவிளக்கே / உன்
கட்டவிழா மேனிதன்னைக்
கரம்தொட்டுத்தடவியாடக்
காத்திருந்தோம்
கண்விழித்தோம்
முடியவில்லை

அய்யனே
நான் அழவில்லை ,
இரத்தம் அழுதது
போவது நிச்சயம் ,
முன்போ பின்போ
ஆயினும் அழுகை
அதன் பேர் பாசம்
வாழ்க்கை மரணம்
நடுவில் தடைச்சுவர்
எனக்கு எல்லாம்
இவனென்று இருந்தேன்,
நாதியற்றேன் அப்பொழுதே..
என்னினத்தைக் காப்பவர்,
யார் ?
என்னை ஈன்றவனை
என்னை உலகுக்குத்தந்தவனை
எனக்கு எல்லாமாய் ஆனவனை
அழகுபார்க்க முடியவில்லை
திக்குத்தெரியாமல்
திகைக்கின்றேன்
என்செய்வேன் ..
சென்றனை என்ற போதும்
செவியினும் நம்…பவில்லை

அம்பலவி ஒரு விசரன்
அண்ணை இருக்கும் போது
அழுது புலம்புகிறான் என்று
அணைவரும் சொல்லுகிறார்
போதாக்குறைக்கு
மனநோயாளி என்று
மகுடம் சூட்டுகின்றார்
அது உண்மையாய் இருக்கட்டும்
நான் என்ன …?
கொள்ளி வைக்கவா கேட்கிறேன் ?

குலம்காத்த கோமகனை
நிலம் பார்த்து அதிரும் வண்ணம்
கெடுதலைக்கு ஆழாகிக்
கீழோரால் கீழ் என்று
இகழப்படும் என்றன்
பெரும்தலைவன்
பாதத்திருவடியை
பாரெல்லாம் போற்றும்
பண்பை உருவாக்க
நினைக்கின்றேன்.

நாட்டுக்காய் உழைத்த
உத்தமனாம் பெருவீரன்
நிலைதனை அறிந்து தேர்ந்து
நீதிக்குத் தொடுக்கும்
யுத்தத் தளபதியாய்
நின்றிருந்தான்
பெரும்சேனை முகப்பதனில்
நாடளிக்கும் குணக்கேடர்களைக்
கூடி எதிர்ப்பதற்க்குக்
கூவுகின்றான் ,

தெருவெல்லாம் பாசறைகள்
முள்ளிவாய்க்கால் பெருவெளியில்
இரத்த வாய்க்கால்
பெருக்கெடுத்து ஓடுவதை
சகிக்காத பெரும் தலைவன்
போருக்கு நாள் குறித்து
விரைவில் போர் தொடங்கும்
பொறுத்திருங்கள் எனப்
பதில் இறுத்தான்
படைகொண்டு செல்வதற்கு
இன்னும் சில நாட்களே
எனக்கண்டு சிந்தை மகிழ்ந்தான்

அதற்குள்..
கொடும் விந்தை ஒன்று
உருவாகும் என
யார் கண்டார் …..?
பாசறைக்குப் பக்கத்தே
படைநடத்தும் விதம் பற்றித்
தனிமையிலே நின்று
தலைவன் யோசனைக்கு
அடிமையானான்
அப்போது …..
அண்டை நாட்டோடு
அகிலத்தின்
ஆதிக்கக் கரங்களெல்லாம்
ஒன்றுகூடி …
உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற
நாய் நரிகள் கழுகுக்கும் பருந்துக்கும்
இவ்வுடலைக்கொடுப்பதற்கே
சுற்றியுள்ளார் என்பதனை
உணர்ந்து ஆய்ந்து
தான் வளர்த்த வீரர்களை
அழித்துப்போடல்
ஆகாதென அறிந்து
போர்தொடுக்க துணிந்த வேளை
மலைபிளக்க வெடி வைத்தது போல்
மாவீரன்
மண்டையைப் பிளப்பதற்கும்
துணிந்து விட்டார் .

தலை நொறுங்கித்
தரையில் சாய்ந்தான்
தமிழ் தலைவன்
தினவெடுத்த தோள்களோடு
தினம் திரிந்த மணிமார்பில்
உதிர வெள்ளம்.
முடித்து விட்டார் பகையை என்ற
இறுமாப்பில்
ஆரியத்துச் சிங்கம் மண்ணை
முத்தமிட்ட வேளை
உத்தமனும் கடைசி மூச்சை
நாட்டுக்கே அளித்து விட்டு
துயில் நீங்காத்தொட்டிலில்
படுத்துக்கொண்டான்

சித்திரம் சிதைந்தது
எனக்கேள்வியுற்று
இத்தரையில் மாந்தரெல்லாம்
உயிருள்ள பிணமாகி
உருக்குலைந்து போனார்
தலைமகனே
தலைகுனியாத் தமிழனாக,
இறுதிவரை போராடி
இலங்குபுகழ் ஈழமதின்
அணையாச் சுடரானாய்
உனை மறக்க முடியாமால்
உள்ளமெல்லாம் நீ நிறைந்தாய்
சாகாததாகச் செத்தது மேனி
தளராததாகத் தளர்ந்தது பூமி
வேகாத வெந்தன விழிகள்
வீட்டிலும் நாட்டிலும்
அவையே ஒளிகள்
அய்யகோ தமிழே
தாயிலாப்பிள்ளை யானேம்
தலைவனை இழந்த பின்னே…..?

prabakaran god

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

prabhakaran

காலம் ஒரு பதிலெழுதும்

எனக்கும் உனக்கும்
இடைவெளிகள் அதிகம்
என்றாலும் நான்
உன்னை விரும்பினேன்
ஒருவகையில்
உன்னை ரசித்தேன்

நீ
வீரன் என்பதற்காக அல்ல.
கடவுளுக்குச் சமனானவன்
என்ற கற்பனையாலும் அல்ல.

நானே நீயாக
எனது உணர்வுகளே
உனது உணர்வுகளாக
எனது ஆவேசமே
உனது ஆவேசமாக
பாவித்துக் கொண்டே
உன்னில் என்னைக் கண்டேன்.

இன்று,
நீ இல்லை
அது குறித்து
அழக் கூட முடியவில்லை.

எம்மவர் வாழ்வில்
ஒருசில பொழுதுகள்
அன்று இருந்தன.
அந்நியப் படைகள்
எம் மண்ணை
ஆக்கிரமித்திருந்த காலம்
இருண்ட பொழுதுகளே
எமக்காக மிச்சமிருந்த காலம்
உறவுகளைப் பிரிந்தாலும்

அழமுடியாத காலம்

அந்தக் காலங்கள்
மாறவேண்டுமென்றே நினைத்தோம்.

நான் வேண்டுதல் செய்தேன்
நீயோ
உனக்காகவும் எனக்காகவும் போராடினாய்

இன்று,
நீ
எம்மிடையே இல்லை
தெரிந்தும்
பகிரங்கமாக அழ முடியவில்லை
அஞ்சலிக்க முடியவில்லை.

இன்று,
எமை அழுத்தும்
ஷபூட்ஸ்| கால்கள் இல்லை
ஆக்கிரமிப்பாளனின்
ஆதிக்கமும் இல்லை
இருந்தும் கூட
என்னால அழ முடியவில்லை.

என் கையே
குரல்வளையை நசிக்கிறது
வளர்த்த கடாவே
மார்பில் பாய்கிறது

இதனையா நான் யாசித்தேன்?
இதற்காகவா
நீ
உன் வாழ்வை
அர்ப்பணித்தாய்?

வளர்ப்பு நாய்
இறந்ததற்குக் கூட
கண்ணீர் வடிக்கும் உலகில்
மூன்றுநாள்
துக்கம் அனுட்டிக்கும் உலகில்
எசமான் இறந்ததற்காய்
அழமுடியா அவலம்

சரித்திரத்தை உருவாக்கச்
சமராடிய உனது
சரித்திரமே இன்று
மறைக்கப்படும் அவலம்

எதிரியினால் அல்ல

நேற்றுவரை உனது
நண்பனாய்
சகோதரனாய்
நீ
இறுதிவரை
நம்பியருந்தவர்களால்
சுதந்திரத்துக்காகப் போராடிய(?)
அடக்குமுறையாளர்களால்

காலம் ஒரு பதிலெழுதும்
அப்போது
உன் கல்லறையில்
ஒரு பூ வைப்பேன்
அதுவரை……?

சண் தவராஜா ஊடகவியலாளர்

-இன்போ தமிழ் குழுமம் –

பிரபாகரன் விடுதலையின் விலாசம்!

Posted on Updated on

நகர மறுக்கிற நதியென

உறங்குகிற கடற்கரை –

வல்வெட்டித்துறை.

பேசும் அலைகளின்றி

பேராரவாரமின்றி

அமைதி காக்கிற

அதன் மூச்சுபேச்செல்லாம்

விடுதலைப் பெருமூச்சு.

 

அந்தக் கரையில்தான்

உயிரெழுத்தின் நீட்சியென

அவதரித்தான் அவன்!

அந்த ஆயுத எழுத்தின்

உக்கிரத்தால் தான்

அடங்கிக் கிடந்தது

வக்கிர இலங்கை!

 

பிரபாகரன் – என்பது

ஒரு மனிதனின் பெயரல்ல..

அது

விடுதலையின் விலாசம்!

 

எமது இனத்தின்

அறுபதாண்டுக் கால

அவல வரலாற்றில்

பிரபாகரனும்

பிரபாகரனின் தோழர்களும்

எழுதியது மட்டும்தான்

பவள வரலாறு.

 

கையில் ஏந்திய ஆயுதங்களுடன்

அவர்கள் மெய்யில் தாங்கிய

உயிராயுதம் ஒன்றும்

எதிரிப் படையை

உதிரிப் படையாக்கியது.

 

நச்சுக்குப்பி – என்கிற அவ்வாயுதம்

எம் விடுதலை வீரர்களின்

உயிர் மெய்யெழுத்து.

 

அவர்கள் கழுத்தில்

மாலையாய்த் தொங்கி

அலங்கரித்தன நச்சுக் குப்பிகள்…

சொந்தச் சனம் காக்கச்

சாகவும் தயாரென்று

பகிரங்கமாகப் பறைசாற்றின.

 

போருக்குப் போகும்போதும்

போரிடும்போதும்

எந்தெந்த மாலையை அணிவதென்கிற

இலக்கணத்தையே திருத்தி எழுதி

நச்சுக்குப்பி மாலை அணிந்தனர்

மாசற்ற அந்த மாவீரர்கள்.

 

தங்கப் பதக்கங்களும்

வெள்ளிப் பதக்கங்களும்

அவ் உயிர்ப் பதக்கங்களுக்கு

நிகரில்லை ஒருபோதும்…

நெஞ்சில் அவர்களை

நிறுத்திட அதுபோதும்!

 

மாவீரர்கள் அவர்கள்

அமைதியாய்த் தூங்கட்டும்…

ஈழம் என்கிற

அவர்கள் கனா தாங்கி,

எம்மால் இயலாதது

எவரால் இயலுமெனும்

அவர்கள் வினா தாங்கி,

அணைய மறுக்கிற

அக்கினிக் குஞ்சினைத்

தமிழினம் தாங்கட்டும்!

 

அழுவதற்காகவோ

தொழுவதற்காகவோ

எழுதவில்லை இதையும்…

வீரர்கள் கனவில்

விழுதுவிட்ட ஈழம்

எப்படி வீழுமென்று

கேட்கிறது இதயம்!

 

இனப்படுகொலைக்கான

இறுதி நீதி

ஈழமாய்த் தான் இருக்கும்…

வரலாறு தெரிவிக்கும்

வழிவழிச் செய்தி இது!

 

அந்த நீதியை

நிராகரிக்கும் பொருட்டே

அழுதுபுரண்டு

அடம்பிடிக்கிறது இலங்கை!

 

பௌத்தம் அங்கே

மதம் மட்டுமல்ல…

நல்லிணக்கத்தின்

எதிர்ப்பதம்!

 

மாவீரர்களுக்காக

மணிகள் ஒலிப்பதைத்

தடுத்து நிறுத்த

பிக்குகள் துடிக்கலாம்….

காற்றின் திக்கை

அவர்கள் தீர்மானிக்க முடியுமா?

 

வீரர்கள் நினைவில்

ஜொலிக்கப் போகிற

அகல் விளக்கனைத்தையும்

அணைத்திட இயலுமா?

 

உயிராயுதங்களுக்கு

அர்ப்பணிக்கவென்றே

கங்குல் நெருப்பென

காந்தள் மலர்கள்

கண்விழிப்பதைத்

தடை செய்ய முடியுமா?

 

வீதிகள் தோறும்

விளக்குகள் ஏற்றுவோம்…

உண்மை ஒளிரட்டும்

உலகம் முழுதும்!

ஓங்கி ஒலிக்கின்ற

மணிகளின் பேரொலியில்

கேளாச் செவியரும்

நம் குரல் கேட்கட்டும்!

 

சர்வதேச வீதி வழிதான்

தீர்ப்புகள் வரவேண்டும்..

என்றாலும்

நமக்கான நீதியை

நாம்தானே பெறவேண்டும்…!

 

சிங்கள வெறியரால் வெட்டப்பட்டு

கரும்புச் சக்கையுடன்

சேர்த்தெரிக்கப்பட்ட

இக்கினியாகலை

கரும்பாலைத் தொழிலாளர்

எத்தனை நூறு பேர்?

ஆண்டாண்டுகாலங்கள்

கடந்துவிட்டதால்,

அந்தச் சாம்பலில்

தடயத்தைத் தேடுதல்

இப்போது எளிதல்ல!

 

அறுபதாண்டாய்த் தமிழரைத் தாக்கி

டயரில் எரித்த

சிப்பாய்களையெல்லாம்

தேடிப்பிடித்துக் கூண்டிலேற்றுதல்

முழுமையாக சாத்தியமல்ல!

 

என்றாலும்

இலங்கை

கலங்குகிறதே ஏன்?

 

ஆறாண்டு முன்நடந்த

இனக்கொலைக்கு

கல்லம் மேக்ரேக்களும்

கண்கண்ட சாட்சிகளும்

இருப்பதைப் பார்த்துத்தான்

நடுங்குகிறது இலங்கை.

 

அறுபதாண்டு அநீதிக்கு

நீதி தேடக்

கிடைத்த வாய்ப்பை

நழுவ விடோமென்று

உறுதியேற்போம்…

கிருஷாந்திகள் தொடங்கி

இசைப்பிரியாக்கள் வரை

சிதைத்துச் சிதைத்துப்

புதைக்கப்பட்ட

எம் பிள்ளைகளின் பெயரால்

உறுதியேற்போம்…!

 

களம் மாறியிருப்பது

உண்மைதான்…

என்றாலும்

மாவீரர்கள் பதித்த

விடுதலையின்

தடம் மாறவில்லை!

 

இன்றைய நிலையில்

நமக்குத் தேவை

அவர்களது அர்ப்பணிப்பு…

அவர் தம் ஓர்மம்..!

சூரியனையே கீழிறக்கி

குளிர் காய இயலுமெனும்

அவர்களின் மனோதிடம்.

 

அவர்கள்

ஆனையிரவை இழந்த நொடியில்

அழுது புலம்பவில்லை…

ஆனையிரவை மீட்ட நொடியில்

துள்ளிக் குதிக்கவில்லை…

நெருப்பையும் ஜீரணித்தார்கள்…

சிரிப்பையும் புறக்கணித்தார்கள்!

 

அவர்கள் சிந்திய ரத்தம்

பனித் துளியினும்

தூய்மையானது….

மழைத் துளியினும்

தாய்மையானது…

விழிநீரினும்

கூர்மையானது….

தாய்ப்பாலினும்

வலிமையானது…

 

பரிசுத்தமான அந்த ரத்தம்

ஈழத்தின் வேர் வரை

நனைத்திருப்பதால்தான்

அவரையே எம் இனம்

நினைத்திருக்கிறது.

 

மொழியும் வழியும்

தொப்புள்கொடியுமே

இணைக்கவில்லை

எம்மை….

அந்த ரத்தத் துளிகள்தாம்

இனத்தை

இணைத்த

செம்மை!
-புகழேந்தி தங்கராஜ்-

விடுதலைக்கு புதிய வரைவிலக்கணத்தை வரைந்த..தேசியத் தலைவர் பிரபாகரன்!

Posted on Updated on

மாவோ சேதுங்…லெனின்..
மார்க்ஸ்..
என்றெல்லாம்…எண் நிறைந்தோர் ..
ஆயிரம் ஆயிரம் வரைவிலக்கணங்களை..
விடுதலைக்கு வரைந்தார்கள்…

எங்கள் தலைவன்….
என்ன சொன்னான்?
ஒன்றே ஒன்றை மட்டும்தான்…
சொன்னான்..

எங்கள் கைகளில் எதிரிதான்
ஆயுதத்தை திணித்தான்..அதனால்தான் நாம் போராடுகிறோம்
என்றுதான் சொன்னான்..

அதுவே..இன்று
தமிழர்களின் உள்ளங்களில்
விடுதலைக்கான
வரைவிலக்கணம் ஆகிவிட்டது..

ஆம்..நாங்கள்..
ஆயுதப் பிரியர்கள் அல்ல..
இரத்த ஆற்றில் குளித்து..ஓர்..
இலட்சியச் சீனாவை..
அல்லது..உறஷ்யாவை.
உருவாக்க வேண்டும்..என்று
விரும்பியவர்களும் அல்ல..

நாங்கள் விரும்பியது..
எங்கள் மண்ணில்
மாற்றானிடம் கைகட்டி..நின்று
கனவிலும்..
வாழக் கூடாது..என்பதுதான்..
எங்கள் மண்ணில் இருந்து..
மாற்றானின் சப்பாத்துகளை
துடைத்துக் கொண்டு..
அவன் இடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து
வாழக் கூடாது..என்பதுதான்…

ஒருபிடி சோறுக்காக..
எங்கள்…இனத்தின் தன்மானத்தை
இறுதிவரை..
இழக்க கூடாது..என்பதுதான்..

அதற்காக நாங்கள்..எங்கள்
பிள்ளைகளைக் கொடுத்தோம்..
கூடப் பிறந்தவர்களைக் கொடுத்தோம்..
தேவை எனில்..
பேரப் பிள்ளைகளையும் கொடுப்போம்….
ஏன் தெரியுமா?..
விடுதலை எங்கள்
உயிரிலும் மேலானது!

மு.வே.யோ.

தலைவர் பிறந்த நாள் வாழ்த்துப்பா!

Posted on Updated on

முன்னைத்தமிழ்
மண்ணை மீட்க-
அன்னைத் தமிழை- அத்தமிழின்
பெண்ணைக் காக்க-
தன்னைக் கொடையாய்த்
தந்திடும் படையைப்
படைத்தான்- பகை
உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு
கிடைத்தான் இக்கரிகாலன்!

ஆண்டாண்டு காலமாய்
அடிபட்ட
அடிமைப்பட்ட
இனத்தின் வலி பொறுக்காது
பகை ஒறுக்காது இனம் இருக்காது
என்றுணர்ந்து
குகைவிட்டு வெளிவந்த புலியாய்
வலி கொடுத்தான்- பகையைப்
பலி கொடுத்தான்- பாருக்கே
கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்!

தரைப்படை
தண்ணீர்ப்படை
தாவும் வான்படை என
முப்படை படைத்து
மூடக்காடையர்
முகம் உடைத்து
எம் மண்ணை
எம்மிடம்
ஒப்படை என்றான்
ஒப்பாரும் மிக்காருமிலாப்
பெருமாவீரன் பிரபாகரன்!

காலனும்
கண்டஞ்சும்
கரிகாலன் கொண்ட
கரும்புலிப்படை
தாவும் பாய்ச்சலில்
சாவும் சற்றே
விலகி நிற்கும்;
ஆடைகள் நனைந்த
காடையர் கூட்டம்
அப்போது தானே
பாடம் கற்கும்!
பிறகென்ன?
இப்படை முன்னே
எப்படை வெல்லும்?
அதைத்தான்
அகிலம் நாளும் சொல்லும்!

நெற்றியில்
நெருப்பெரியும்
தாயகப்பற்றின் புலிகளை
நேருக்கு நேர் சந்திக்க
யாருக்கு துணிவு வரும்?

பாயும் புலிகளைச்
சாய்க்கும் சதிக்கு
முதுகைத் தேடும்
துரோகம்தானே துணைக்கு வரும்?

விலைபோன தீயோர்
வீழும் நிலை வரும்;
தாழும் தமிழினம்
வாழும்-ஆளும் நிலை பெறும்!
நிலைமாறும் போது
தலைவர் வருவார்!
மீண்டும் வருவார்!
மீட்ட வருவார்!
எனக் காத்திருந்து
எதிர்பார்த்திருந்து
என்னாகப் போகிறது?

ஓ! எந்தமிழ் பேசும்
செந்தமிழினமே!
உலகத்துள் தேடாதே
தேசியத் தலைவரை!
உனக்குள் பிரபாகரன்
உருவாகும் நிலைவரை…

-உதய் என்கிற வள்ளுவக்குமரன்

சத்தியப்புதல்வா!…. சரித்திரம் திரும்பும்!….

Posted on Updated on

தலைவா!…தவப்புதல்வா!…

இடையிடையே குமுறிஎழுந்த
எரிமலை உண்டுதான்
இன உணர்வால் குமுறிஎழுந்த
எரிமலை நீங்கள் தான்
வரும்பகையை முடித்து நீங்கள்
வழிகள் காட்டிநீர் தமிழன்
வளமாக வாழ்வதற்காய்
தனிஈழம் நோக்கிநீர்!…

ஈழம் நோக்கும் உங்கள் முடிவில்
இன்னல் உண்டுதான்
இனிமையான தமிழ்ஈழம்கண்டால்
இன்பம் உண்டுதான்
மாலை நேரச் சூரியனும் சிவந்தே
போகின்றான் பின்
காலை வந்தே புதுக்கதிர்களாய்
அள்ளித்தருகின்றான்!…

அள்ளித்தரும் சூரியனும் நீங்களும்
ஒன்றுதான் என
அன்னைத்தமிழ் எங்களுக்கு
சொல்லித்தருகிறாள்
சிவந்துபோன ஈழமண்ணில்
நாளை விடியல்தான்-உங்கள்
தெளிந்த கண்ணில் அதனைநாங்கள்
இன்று காண்கின்றோம்!….

உங்களுக்குத் தெரியுமா!…

இன்றுகாணும் உங்களில் ஏதோ
ஒளிந்து உள்ளது
தமிழ்ஈழம் என்று வந்தபோது
அது நிமிர்ந்து கொண்டது
வென்றுவரும் புலிகளுக்கு
வேதம் சொன்னவர் நீங்கள் ஏன்
வேர்ப்பலாவை போலத்தானே-மிக
இனிமையானவர்வ!….

வேர்ப்பலாவின் இனிமைக்குத்தான்
என்ன காரணம் அது
வேருக்கள்ளே பழுப்பதுதான் பலர்
சொன்னகாரணம்
வெற்றிதரும் உங்கள் வேரை நானும்
தேடினேன்
வீரம் விளையும் தமிழீழமண்ணில்
புதையல் தேடினேன்!…praba poem

புதையல் தேடும் எனதுஉடல்
புல்லரித்தது
புதிது புதிதாய் வரலா(று) எனக்கு
வழியைச் சொன்னது
தேடிதேடி அடிக்கும்அலை உங்கள்
மண்ணைச் சொன்னது
தேசமெல்லாம் “வல்வெட்டித்துறை”
என்றே பெயரைச்சொன்னது!….

நீங்கள் வந்தவழி!….

வல்வை மண்ணின் பெயரைத்தேட
வழிகள் விரிந்தன
வழியில் எல்லாம் நீங்கள்வந்த
சுவடுதெரிந்தன
வங்கம்வெல்லும் உங்கள்குலமோ
பெரும் வணிகப்பரம்பரை
அதுகப்பல்கட்டி கடல்கடக்கும்
கலையில் சிறந்தது!….

கடல்கடந்து நாடுகளை கண்டு
கொள்வதும்
பண்டங்களை மாற்றிவந்து மக்கள்
பசிகள் தீர்ப்பதும்
தங்களின் கடமையென்றே
எண்ணித் துணிபவர்
எதிரேவரும் அலைகளிலே
ஏறி நடக்கின்றார்!….

ஏறிநடக்கும் இவர்களுக்கு
இயற்கை நண்பனாவான்
இரவும்பகலும் துணிவுடனே எந்த
திசையுமிவர் போவார்
மாரிமழை என்றபோதும் ஓய்து
போகமாட்டார்
ஓயாதஅலைகள் என்றேஉறுதியோடு
போவார்!….

நீங்கள் கரிகாலனா?….இல்லை

ஓயாத அலைபோல வரலாறும்
மாறும்
காணாமல் போனவை மீண்டும்
கருவாகி மீளும்
கரிகாலன் ஆண்டதை எவரும்
கண்டவர் இல்லை – புதுக்
கரிகாலனாக உங்களைக் காண்கின்ற
வரைக்கும்!….

கரிகாலன் என்றே புனைபெயரை
வைத்தீர்கள்
அவன் போல கடலில் கலங்களும்
விட்டீர்கள்
பதினாறுவயதினில் புதுவழியொன்று
கண்டீர்கள்
வலுவுள்ளபுலியாகி பெரும்வரலாறு
படைத்தீர்கள்!….

வரலாறு படைக்கின்ற நீங்கள்
எங்கள் சொந்தம்
வரப்போகும் தமிழீழத்தின்
தத்துவமுற்றம்
அழியாதபுகழோடு ஆண்டவன்
ஒருவன் –
அவன் அனுரதபுரத்தின்
ஈழாழமன்னன்!….

ஆம் நீங்கள்தான் ஈழாழன்!….

ஈழாழமன்னன் எவருக்கும்
வள்ளல்
கல்லறையானபின் ஏலார
தெய்வம் – அவன்
தூபியை கடப்பவர் தலை
சாய்த்திடவேண்டும்
மௌனம்தான் அதன்முன்
கோலோச்சவேண்டும்!….

மௌனங்கள் கருக்கோள்ளும்
மாவீரர்நாளை
எங்கள் மண்ணிற்கு தந்த
மன்னவன் நீங்கள் தான்
நீங்கள் கருவானகாலம் ஈழாழன்
கல்லறையோரம்
ஓ இது கற்பனையில்ல
எத்துணை உண்மை!….

எத்துணை உண்மைகள் புதையுண்டு
போனதோ?
இப்படி எத்துணையுண்மைகள் புதையலாய்
மீளுமோ – உங்கள்
மஞ்சள்பெட்டியும் – ஈழாழன்
மாளிகைமணியும்
ஒன்றெனக்கண்டேன் இன்னும்தொடர்வேன்
சத்தியப்புதல்வா சரித்திரம் திரும்பும்!….

வாய்மையுடன் வரலாற்றைத்தேடும்
வர்ணகுலத்தான்

தலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது பிறந்தநாளுக்காக எழுதப்பட்டு அவரிடம் கை அளிக்கப்பட்டபோது அவர்வியந்து பாராட்டிய இக்கவிதை இங்கே நன்றியுடன் மீளவும் மறுபிரசுரம் செய்யப் படுகின்றது.

நன்றி – வர்ணகுலத்தான்

ஊழிக்காலம்வரை உலாவரும் ஒப்பற்ற விடுதலை நட்சத்திரம் நீ.!

Posted on Updated on

ஈழத்தின் சிற்பியே.
எம்மினத்தின் தலைவனே!
இன்னும் ஒரு வாரத்தில்..
உனக்குப் பிறந்தநாளா?
அறுபத்து ஒன்றை தாண்டிவிட்டாயா
அரும் பெரும் தலைவனே?

விண் பற்றி எரிந்த நாட்கள்- அன்று
ஒன்றா இரண்டா?
விழுந்து விட்டாய்.. அப்போது என்று
சிலர்
சொன்னார்கள்….
விழுந்தா விட்டாய்?
எந்த வீணன் இதைச் சொன்னான்?

மண் பற்றி எரிந்த நாட்களிலும்
மடிந்தா விட்டாய்?
ஐயா..ஆதியும் இல்லா
அந்தமும் இல்லாச் சோதியையா நீ
அழிப்பவன் யார் உன்னை?

அழிக்க நினைப்பவன்
அழிந்து விடுவான்..
உன்னை
எரிக்க நினைப்பவன்
எரிந்து விடுவான்..
அழிவும் பிரிவும் இல்லா
அரும் பெரும் சோதி ஐயா நீ…!

வாழ்வியலின் புதிய
வரலாற்றை வரைந்து சென்ற
தமிழர் அகராதி நீ..
எந்த நேரத்திலும் உன்னை
எடுத்துப் படிக்கலாம்..!

ஊழிக்காலம்வரை உலாவரும்
ஒப்பற்ற
விடுதலை நட்சத்திரம் நீ..
பூமியின் எந்தப் பக்கத்திலும்..
எப்போது நின்று பார்த்தாலும்
நீ.. தெரிவாய்…!

தமிழ் இனம் மட்டுமல்ல..
விடுதலையை வேண்டி நிற்கும்
அடக்கப் பட்டவர்கள்..
ஒடுக்கப் பட்டவர்கள்..
அழிக்கப் பட்டவர்கள்..

உன்
வரலாற்றைப் புரட்டிப்
பார்த்தால் போதும்..
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
அவர்களுக்கும் ஆசை வரும்!
விடுதலையின் பிராண வாயுவே
நீதானே ஐயா!

மு.வே.யோகேஸ்வரன்

பிரபாகரன் உலகத் தமிழர்களின் தனிப் பெரும் கடவுளாகிப் போனான்..!

Posted on Updated on

ஆசியாக் கண்டத்தின்
உச்சத்தில் உதித்த
ஈழத்துச் சூரியன்!
அச்சத்தில் மூழ்கிய
அப்பாவித் தமிழரின்
விலங்கினை உடைத்து
உலகின் உச்சத்தில் வைத்த
உன்னதத் தலைவன் இவன்!

பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்
தமிழனை சிங்களக் கொள்ளையன்
அடிமைப் படுத்தி ஆண்ட போது…
இலங்கைத் தலையின் மூளையில்
வல்வைத் தாயின்…
வீரத் திரு வயிற்றில்
உலகத் தமிழர்களின்…
ஒட்டு மொத்த மூளையாக
உயிராகி… உருவாகினான்..!

கார்கால மழையில் – ஓர்
கார்த்திகை நாளில்
இருட்டியது ஊர்…
இருபத்தி ஆறு நன்னாளில்
எடுத்தது வீரத்தாய்க்கு வலி!
பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!
அன்று – உருவானது
தமிழர்களுக்கான புதிய வழி!!

இலங்கைத் தலையில் பிறந்து
தமிழர்களின் மூளையானன்!
ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…
மூலையில் முடங்கிக் கிடந்த
ஈழத் தமிழர்களுக்கு
புதிய அத்தியாயமும் தொடங்கியது!
புதிய பாதையும் பிறந்தது!!

இரத்தச் சேறில் புதைந்த
தமிழர்களின் நிலையினையும்…
பரல் தாரில் அவிந்த
குழந்தைகளின் உயிரினையும்…
வலி நிறைந்த
வார்த்தைகளால் கேட்டு…
தன் இதய வலிகளால் சுமந்தான்!
தலைகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் சொத்துக்கள்
நொறுக்கப்பட்டும் – பெண்களின்
மானங்கள் பறிக்கப்பட்டும்
புனித உயிர்ப்பைகள் நிரப்பப்பட்டும்
தாய்மை மார்புகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் உடலங்கள் அறுக்கப்பட்டு
மாமிசங்களாக்கப்பட்டும் – வீதியோரக்
கடைகளில் விற்கப்பட்டதையும்
முகவரிகளே இல்லாமல்
அழிக்கப்பட்டதையும்…
பார்த்தும், படித்தும், கேட்டும்
பதறித் துடித்துப் போய்
பதினான்கு வயதினிலே…
பிறந்தது நெஞ்சத்தில் வலி!
சிங்களனைக் கூண்டோடு அழிக்க
பதினேழு வயதினிலே…
உறுமிப் பாய்ந்தது புதிய புலி!
நீங்கியது தமிழர்களைப் பிடித்த பிணி!
துவங்கியது…
சிங்களவனுக்கு ஏழரைச் சனி!!

தாழ்ந்து போன தமிழன் எழுந்தான்!
எழுந்து வந்த தமிழன்…
உலகினில் உயர்ந்தான்!
புலியாகிப் பொங்கி எழுந்து பாய்ந்தான்!
பலியாகிப் போய் மடிந்தான் சிங்களன்!
தமிழர்களின் வாழ்வில்…
பிறந்தது புதிய விடிவு!
சிங்களனுக்குத் தொடங்கியது…
துன்பமான முடிவு!!

பதுங்கியிருந்த தமிழன் பாய்ந்தான்
பிரபாகரன் பெயர் சொல்லி எழுந்தான்..!
களங்கள் பல கண்டான்…
காவியங்கள் பல படைத்தான்..!
எதிரிப்படைகளை எல்லா முனைகளிலும்
தாக்கி அழித்தான்..!
கடல் மீது ஏறியும்…
காவியங்கள் பல படைத்தான்..!
சிறகுகள் முளைத்து…
விண் மீது ஏறியும்
வானையும் சாடினான்..!
உலக ஆயுத பெரும் பலத்தின்
முன்னால்…
மனபலத்தால் உடைத்தெறியும்
கரும்புலிகள்தனை படைத்தான்..!
எதிரி விழி பிதுங்கி
வாய் மூடி அடைத்தான்!!

பொங்கி வந்த படையெல்லாம்
நொந்த படையாகின…
நொந்து போன படையெல்லாம்
இவனை ஒரு சக்தி என்றனர்..!
தம்மைக் காப்பாற்றாத
சாமி எல்லாம் எதற்கு என்றனர்..?

இலங்கைத் தலைநகரத்தின்
தலையில் ஏறி
உலுக்கிய போதுதான்…
உலகமே உணர்ந்தது,
இவன் மனிதப் பிறவியல்ல…
கடவுள்களின் அவதாரம் என்று!!!

ஆறடி அணுகுண்டு இவனை
அனுசரித்துப் போனால்தான்…
பலனுண்டு என
பயந்தது இரக்கமற்ற இலங்கை!!
பணிந்தது வல்லாதிக்க வல்லரசுகள்!!!

தமிழனின் வீரம்
உலகறிந்த காலம்…
தமிழர்களுக்கென உருவாகியது
உலகினில் புதிய கோலம்..!
உலகறியாத் தமிழனையும்
உயரத்தில் பார்த்தது உலகம்..!
தமிழனின் தனி வீரமும்
புதிய தனித்துவமான அடையாளமும்
உலக வரலாற்றில் பதிந்து போனது!
இதுதான், பிரபாகரனின் காலம்!!!

இவனைப் போன்ற தலைவன்
உலகினில் எங்கும் இல்லை!
இவனைப் போன்ற வீரத் தலைவன்
இனி பிறக்கப் போவதும் இல்லை!!
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்
அஞ்சா வீரத்துடன் பிறந்த
உலகின் ஒப்பற்ற தலைவன் இவன்!
தன் சொந்த மக்களுக்காகவே…
தனது இரத்தத்தையே
பலியிட்ட மானத்தலைவன் இவன்!!

மூலவளங்கள் இல்லாத
கண்ணீர்த் தேசத்திலே…
வீரத்தை விதைத்து
சுதந்திரக் காற்றினை
சுவாசிக்க வைத்து
மக்களின் கண்ணீரைத் துடைத்த
ஈர நெஞ்சுக்காரன்!!
இவனின் ஈர வரத்தினாலும்…
வீரத் தவத்தினாலும்…
இறைவனை மறந்து போய்
இவனையே இறைவன் எனக் கருதி
தமது நெஞ்சத்தில் இருத்தி
இதய தெய்வமாக வழிபட்டனர்…
ஈழ மக்களுடன்… உலகத் தமிழரும்!

உயிரற்ற…..
வார்த்தைகளை அள்ளி விடும்
அரசியல்வாதிகளுக்கு அப்பால்…
வருடத்திற்கு ஒரு தடவை பேசி
தமிழர்களின் கடவுளாகிப் போனான்!
இவனின் உயிர் வார்த்தைகளையும்
தத்துவங்களாக…
உலகமே உள்வாங்கியது!!!
பேசாமலே இருந்து பேச வைத்தான்..!
இவன் பேசிய வார்த்தைகள்…
மந்திரங்களாகின… தமிழர்களுக்கு!
இவன் பேசாத நிமிடங்கள்…
தந்திரங்களாகின… எதிரிகளுக்கு!!

காலங் காலமாக…
கடவுள்கள் செய்யாத கடமைகளை
தன்னகத்தே கொண்டு
தரணியெங்கும் வாழும் தமிழர்களின்
தனிப்பெரும் கடவுளானான்!!!

அரிதாரம் பூசிய போலியான
கதாநாயகர்களுக்கு மத்தியில்…
அரிதாரம் பூசாத உண்மையான
கடவுளின் அவதாரம் இவன்!!
கொடுங்கோல் அரக்கர்களை
புதிய அவதாரம் எடுத்து…
அழித்தொழித்தான்..!
தமிழர்களின் இதய அறைகளிலும்…
வீட்டுப் பூசை அறைகளிலும்…
புதிய கடவுளாக அவதரித்து நின்றான்!!

ஆறுமுகனைப் பார்த்தவர் யாருமில்லை!
பிரபாகரனைப் பார்க்காதவர் யாருமில்லை!!
உருவம் இல்லாத கடவுள்
மனிதரின் இதயங்களில் நிறைந்த மாதிரி
உருவமுள்ள எம் தலைவனும்
தமிழர்களின் இதயங்களில்…
இன்று வரையும் உயிரோடு வாழ்கின்றான்!!!

இல்லாத கடவுளை
இருக்கிறார் என்கிறார்கள்…
இருக்கின்ற தலைவரை
இல்லை என்கிறார்கள்!!!
இல்லாத கடவுள் இருக்கின்ற போது…
இருக்கின்ற தலைவர்
எப்படி இல்லாமல் போனார்..?
இல்லை என்று சிலரும்…
இருக்கிறார் என்று பலரும்…
சாட்சியங்கள் தேடுகின்ற
மனிதர்களின் எண்ணங்களிலும்…
தேடல் கொள்கின்ற இதயங்களிலும்…
உயிரோடு வாழ்ந்து வருகின்ற
உண்மைக் கடவுள் இவன்!!!

உருவம் இல்லாத கடவுளுக்கு
சிலைகளை உருவாக்கும் இவ்வுலகில்…
உருவமுள்ள எம் தலைவனுக்கு
அழகு வார்த்தைகளால் கூட
வர்ணனைகள் செய்ய முடியாது!
அலங்கார வார்த்தைகளால் கூட
அலங்காரம் செய்ய முடியாது!!
இவ்வுலகினில் உள்ள…
எந்த வார்த்தைகளாலும்
அலங்கரிக்க முடியாத…
உலகத் தமிழர்களின்
தனிப் பெரும் கடவுளாகிப் போனான்..!
இவன் கடவுளாகிப் போனதால்…
எதுவும் செய்யாத கடவுள்
இறந்து போனான்…!
தமிழனைக் காத்து இவன்
இறைவனாகிப் போனான்!!!

எம் இறைவனை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை இங்கே..!
அதனால், தமிழர்களாகிய
நாம் வணங்கிக் கொள்கின்றோம்…
எம் இதயங்களின் உள்ளே!!!

– வல்வை அகலினியன்.

60ம் அகவையில் அகிலம் வியந்த அண்ணனுக்கோர் வாழ்த்து

Posted on Updated on

கார்த்தகை இருபத்தியாறு..-எம்
ஊரெல்லாம் ஒன்றாகி கூத்தாடும்
பார்த்தீபன் பிறந்த நன்நாள்.

ஆண்ட பரம்பரை
காலமெல்லாம் கைகட்டி
ஆள வழியின்றி வாய் பொத்தி,
தலைகுனிந்து அடிபணிந்து-எம்
ஈழ மண்ணையும் விலைபேசி -சேற்றில்
உழும் எருமை மாடுகளாய் -எதிரிமுன்
மண்டியிட்ட தமிழருக்கு
வாழ நெறிகாட்டி-அவன் மாண்புதனை
நிலைநாட்ட வந்துதித்த
ஆண்டவனின் அவதார நாள் இன்நாள்..

வல்வை மண் அன்று -எம்
தொல்லை அழித்திடவென்று
நல்லான் எங்கள் நாயகனைத் தந்திட்ட
பொன்நாள் இன்று….

எங்கள்,
வலிபோக்க வந்த அருமருந்தாய்-எங்கள்
கலி நீக்க பிறந்த வேங்கை…-எமக்கு
விடியாதா எனநாம் விழிமூடிக்கிடக்க-எங்கள்
விடியலாய் ஒளிதந்த விடுதலை வேந்தின்
ஜனன நாள் இன்று.

கோடரிக்காம்புகளாய்மாறி-அன்றெம்
வீடெரித்த பேய்களையும்
கொள்ளிகொடுத்த கொடுவாள்களையும்
பாடையில் ஏற்றிட -பாசறை மேவிய
எம் தேசத்து புதல்வனின் திருநாள் இன்று.

குட்டக்குட்ட குனிந்த தமிழனை
நெட்ட நிறுத்தி….
குட்டியவன் கைகளை வெட்டியெறிந்தும்
“கொட்டி கொட்டி”என்று பகைஎட்டி ஓட-எம்
பட்டி தொட்டி எங்கும் பகல் சமைத்திட்ட
ஈழவேந்தின் இனிய நன்நாள் இன்று…..

தன்னினம் காத்திட தன்னலம் மறந்து..,
மண்ணினை மீட்டிட மகிழ்வுகள் துறந்து…,
விண்ணிலும் பெரிய விரிமனம் கொண்ட
விடுதலை வேங்கையின் பிறந்தநாள் இன்று.

எங்கள் இருள்போக்கி-உலகில்
நாங்கள் வாழவழிகாட்டி
எங்கும் பரந்துவாழ் தமிழரின் உரிமை நிலைநாட்டி
உலக மேடையில் அவன் பேச உரிமைதந்த
மங்களநாயகன் அவதரித்த இனியநாள் இன்று.

இனவெறி மமதையில் கொலைவெறியாடிய
ஈனரின் மமதைகள் அடக்கி
மானத்தமிழரின் மாண்புமிகு வீரத்தின்
தானைத் தலைவனாய் தனிநாடமைக்க
வேங்கையாய் குதித்த தனிப்பெரும் தலைவன்
வந்துதித்த நனிசிறந்த பொன்நாள் இன்னாள்.

தமிழரெல்லாம் “நான் தமிழன்” என்று
தலை நிமிர்ந்து சொல்லவென்று
வான்படையும் கண்ட தமிழ்ப்
பெருமறவன் பிறந்திட்ட பெருநாள் இன்று.

சிங்களவன் சினம்கொண்டு
சீறி எழ முடியாது….,
பதுங்கி அவன் பாழிருட்டில்
பாய்யிட்டு ஒதுங்கிடவே-போர்
பறைசாற்றி பகைவிரட்ட பாய்ந்திட்ட
பெருவீரனின் திருநாள் இன்று.

தம்பி என்பார் சிலர்-எங்கள்
அண்ணன் என்பார் பலர்…,அன்பின்
மாமா என்றே மழழையரும்-எங்கள்
மாபெரும் தலைவா என்றே உலகத் தமிழினமும்,
விழித்திடவே நீ வாழ்க வாழ்க…..

பெற்றவரும் உற்றவரும்
பெருமைகொள்ளும் தமிழ்மகனாய்,
கொற்றவரும் வித்தகரும்
வியப்புறு தலைமகனாய்,
எத்திசையும் உன்பெயரை
உச்சரிக்கும் உருத்திரனே
வாழ்க நீ வாழ்க….

வாழ்கவென்று உனை வாழ்த்த-என்னை
வாழ வழிதந்த எம் தாய்மண்தந்த பெருந்தலைவா
வாழ்க நீ பல்லாண்டு வாழ்க….
நன்றி.

ஒபர்கௌசன்
ஈழப்பிரியன்.