பிரபாகரன் அந்தாதி

அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன்

Posted on

அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன் – நீ
உலக தமிழர்களின் உன்னத தலைவன் – நீ
தமிழனின் அடிமைத் தடைகளை தகர்த்தெறிந்து
தனி நாடு கண்ட வீரத் தலைவன் நீ

புறநானூற்றின் போர்படையாம் புலிப் படையை – நீ
அமைத்து தமிழீழம் அமைத்து வெற்றிக் கண்டாய்
தமிழீழத்தில் அஞ்சா நெஞ்சமும் வீரமும் தீரமும் கொண்ட
அருந்தமிழர் கூட்டம் உன் படையில் அதை
புறநானூற்றின் தமிழர் வீரர் தன்னை
உலகிற்கு உணர்த்திய உன்னத எம் தலைவா

வெஞசமர் புரிந்து தமிழர் பகைவரை வீழ்த்தினாய்
சிங்கமென்ற சிங்களவனை சிறுநரியாய் ஆக்கினாய்
கொரில்லா போர்படை வியுகம் அமைத்து
ஆணவ சிங்களவனை நீ அழித்தாய்
உலகின் முதல் மனிதனாம் தமிழனுக்கு
கல் தோன்றிய மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய
மூத்த குடிக்கு தனி நாடு கண்டு தமிழீழம் அமைத்தாய்

ஆணிற்கு பெண் சமமென்னும் சங்க தமிழனின்
கொள்கையை உலகிற்கு உணர்த்திய உன்னத தலைவன் நீ
உலகத் தமிழனின் எட்டப்பனாம் கலைஞரின் சூழ்ச்சியால்
இத்தாலி சோனியாவின் இந்தியப் படைகளும் ஆயுதங்களும்
சீனாவும் பாகிஸ்தானும் ஜப்பானும் ரஷ்யாவும் சேர்ந்து
உன்னை சுற்றி வளைத்து தாக்கியப் போரில்
புலியாய் தப்பி தமிழரின் விடுதலை வேட்கையை
உன் தம்பி சீமானிடம் விட்டு சென்ற எம்தலைவா

இன்று உன்னோடு துணை நிற்க நாம் தமிழர் அமைப்பை
உருவாக்கி தந்து விட்டான் உன் தம்பி சீமான்
காத்திருக்கிறோம் உன்வரவிற்க்காக நீ புலியென பாய்ந்து
வெளி வரும் நாள் எந்நாளோ !!!

தமிழ் தேவன் (நாம் தமிழர்)

வாய்மைத் திருமகன்

Posted on

leader-Prabakaran-birthday wishes

தேசியத் தலைவா தேசியத் தலைவா!
தேசம் எழுதிய தீந்தமிழா!-கை
வீசிய வீச்சினில் வேங்கையின் மூச்சில்
விளைத்தனை ஈழம் பெருந்தலைவா! – தேசியத்

ஊர்க லடங்கிலும் உலக மடங்கிலும்
ஏர்முனைய யாக்கிய ஈழமகன்-ஈழம்
வாழும் உலகினை வார்ப்புகள் ஆக்கிய
வரலா றெழுதிய வண்ணமகன்! – தேசியத்

ஆகுதி யானவர் ஏகிக் களம்புக
வேதம் உரைத்திட்ட வித்துவனே-தமிழர்
சாகும் நிலையிலும் ஈழம் எழுதிடும்
சந்ததி கொடுத்தாய் தத்துவனே! -தேசியத்

காடு எரிந்தது ககனம் எரிந்தது
நாடு மறந்திலை நாயகனே-பெற்ற
வீடு உலவிய வெற்றித் திருமகள்
வீழ்ந்தும் மறந்திலை ஈழமதே! -தேசியத்

நீயொரு தலைவன் நீதான் தலைவன்
நீள்நிலம் எங்கும் நீயொருவன்-தமிழ்த்
தாயவள் தந்த தங்கத் தலைமகன்
சாயாத ஈழம் படைத்தமகன்! -தேசியத்

-புனிதன்

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 10

Posted on

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (91)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை நார்வே அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (92)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (93)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (94)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (95)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக்
கொள்கின்ற சிங்களர்.

இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (96)

====

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (97)

நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண -உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (98)

இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (99)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (100)


அன்புடன்
அகரம்.அமுதா

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 09

Posted on

முனைநாள் குமரி முழுதும் அழித்தும்
தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (81)

பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (82)

பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.

உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (83)

குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (84)

ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (85)

ஆழி –கடல்; மேழி –ஏரு.

முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (86)

மாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற
புனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.

சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (87)

சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (88)

உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (89)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (90)


அன்புடன்
அகரம்.அமுதா

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 08

Posted on


தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (71)

இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்.

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து! (72)

நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (73)

அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்.

காணக் கிடைக்காக் கவினே! உனையேயெம்
மாணத் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (74)

கவின் –அழகு; மாணம் –மாட்சிமை.

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (75)

உவட்டும் உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தாய்இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (76)

உவட்டுதல் –அருவருக்கத்தக்க

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (77)

மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்.

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (78)

குழுமாடு –காடையர்.

நன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்
வன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி
பொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண
வெங்கொடுமை தீர்த்தாய் விரைந்து! (79)

வன்புணர்ச்சி -கற்பழிப்பு

விரிகடல் பேரலை விண்ணில் எழுந்து
கரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்
அகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்
முகங்கொடுத்து நின்றாய் முனைந்து! (81)

திரை –அலை.

அன்புடன்
அகரம்.அமுதா

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 07

Posted on

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)

ஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.

ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!
ஓரியர்க்குப் பாடம் உரைத்தவனே! –ஆரியர்க்கும்
நெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்
பற்றியடி வைக்கின்றோம் பார்த்து! (62)

ஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.

பாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்
மாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்
வந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்
நொந்தகுடி ஆனதனை நோக்கு! (63)

நோன்பிருந்து பெற்ற நிகரில்லாய்! சிங்களர்
ஊன்பிளந்து நொய்தின் உயிர்குடித்தாய்! –வான்பிறந்த
காலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்
ஞாலத்தில் வாழ்ந்திடவே நன்கு! (64)

நொய்தின் -விரைவாக

நன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்
சென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்
ஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்
காரகற்றும் வெய்யவனே காண்! (65)

ஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை

காணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு
கோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாணக்
குறையுடையார் தேடியெம் குட்டி மணியின்
உறுப்பரிந்து கொன்றனரே ஓர்ந்து! (66)

மாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களரை
எதிர்த்த முதன்மையானவர்களுள் ஒருவர்.

ஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி
சீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)
ஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே
ஆரியரின் சூழ்ச்சியினால் ஆங்கு! (67)

ஆங்கண் தமிழர் அமர்வழியத் தீயிட்டுத்
தூங்கா விழியராய்த் துச்சிலின்றி –ஈங்கிருந்(து)
ஏதிலிபோல் ஏகென்றார் காடையர்; இப்பாரோர்
காதிலிபோல் நின்றார் களித்து! (68)

ஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்;

ஈங்கு-இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.

களப்பில் உணவின்றிக் கண்ணீர் வழிய
அளப்பில் தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பிப்
பிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்
கறுக்கொண் டவர்க்கியார் காப்பு? (69)

களப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில்
தடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு
அஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி.

காணலரால் எம்மவர் காணி இழந்துநலங்
காணக் கடந்தார் கடல்நீரை; –தோணி
கவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே
தவித்தும் இறந்தார் தனித்து! (70)

காணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்.


அன்புடன்
அகரம்.அமுதா

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 06

Posted on

எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்
முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி
உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்
துள்ளல் ஒழித்தாய் துடைத்து! (51)

எனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்

துடைத்தழிக்கத் தோன்றிய தூயா! உலகம்
நடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி
ஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே
தூற்றிக் களிக்கும் தொடர்ந்து! (52)

இகல் -பகை

துடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,
மடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்
குண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்
செண்டள்ளி*த் தூவும் சிரித்து! (53)

துடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு.

சிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்
இருப்பிடம் ஏகாரோ? ஏய்ப்போர் –இருக்கின்ற
நாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்
பாழ்பட்டுப் போகிறதே பார்! (54)

பார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்
நீர்சூழ்ந்த நாட்டில் நிலைகெட்டு? –தீர்வொன்றை
நாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே
தேம்பிப்பின் ஓடும் தெறித்து! (55)

தெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை
உறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்
சுட்டப் பிறந்த சுடர்கதிரே! இங்கவரை
நெட்டி நெரித்தாய் நிமிர்ந்து! (56)

தெறுநர் –பகைவர்.

நிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்
எமைக்காக்கும் ஈழத்(து) இறையே! –குமை*செய்
கொடுஞ்சிங் களரின் குடலை உறுவி
நெடுவான் எறிந்தாய் நிலைத்து! (57)

நிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான
காலஅளவு; குமை –அழிவு, துன்பம்.

நிலைத்த புகழின் நிறையே! இகலைக்
களையப் பிறந்த கதிரே! –களத்திற்(கு)
அழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே
இழைத்தார் இமையா(து) இடர்! (58)

இகல் -பகை

இடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா!
அடிபட்(டு) அடிபட்(டு) அழிந்தோம் –உடைபட்(டு)
அடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;
எடுப்பார்கைப் பிள்ளையுமா னோம்! (59)

நோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;
நோக்கில் தெளிவன்றோ நோய்தீர்க்கும்? –போக்கொன்றே
ஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை
மோதி மிதித்தாய் முனைந்து! (60)

நோக்கம் –பார்வை; போக்கு –வழி; ஆறு -வழி


அன்புடன்
அகரம்.அமுதா

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 05

Posted on


சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (42)

தாவு –தப்பு, குற்றம்.

எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்
பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து
விடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்
கொடுமைபல காணல் கொடிது! (43)

கொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்
துடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்
கொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்
மடிவதனைப் பார்ப்பார் மகிழ்ந்து! (44)

மகிழ்நன்* முனமே மனையாளை வாரித்
துகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்
உமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்
அமிழ்வார் உலகத் தவர்! (45)

மகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை.

தவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி
அவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை
எதிப்பார் இலரே எழுகதிர்க் கையா!
மதிப்பார் அவரை மனத்து! (46)

மனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்
குணமென்ப தில்லாத கூட்டம்! –நிணமே
உடலான காடையர் ஊரழித்தல் கண்டும்
தொடர்ந்தவர்க்குச் செய்வரே தொண்டு! (47)

நிணம் –கொழுப்பு.

தொண்டு கிழந்தமிழ்த் தோன்றால்! இவற்றையெலாம்
கண்டு மனம்வெடித்த காவலா! –பண்டு*தமிழ்
மாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்
போய்மறையச் செய்தாய் புலர்ந்து! (48)

பண்டு –பழமை; மறு –குற்றம்.

புலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்
உலம்பு*தோள் மன்னா உரைத்தாய்! –கலங்கிக்
கருத்தழிந்த மாணார் கரவா ரியரை
இரப்பார் ‘படையருள்க’ என்று! (49)

புலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற;
கரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்; துருப்பு –படை.

எண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்
கண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்
தேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்
வாடிக் கலங்கலைநீ என்று! (50)

நண்ணுநர் -நண்பர்


அன்புடன்
அகரம்.அமுதா

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 04

Posted on

மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை
வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்
சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி
மாய்க்கப் பிறப்பெடுத்த மன்! (31)

மாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கி

மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!
வன்னவனே!* முப்படையை வார்த்தவனே! –தென்னவனே!
எங்கள் திருவே! எமையாளும் நீயன்றோ
கங்குல்* விளக்கும் கதிர்! (32)

வன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்.

கதிர்க்கையா! எல்லாளா! கார்வண்ண கோனே!
முதிர்ந்த அறிவின் முதலே! –விதிர்த்து*ப்
புறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)
அறமென்றால் என்னென்ப தார்? (33)

விதிர்த்தல் –நடுங்குதல்; நள்ளார் –பகைவர்.

பார்முழுதும் ஆண்ட பரம்பரைய ரானாலும்
நீர்த்திரை*சூழ் பாரில் நிலைத்ததில்லை –நேர்த்திமிகு
எல்லாளா! உன்போல் இறப்பின்றி வாழ்ந்தவர்கள்
உள்ளாரா கொஞ்சம் உரை! (34)

நீர்த்திரை –நீரலை.

உரைத்தார் பலமுறை; உன்னை அழித்துக்
கரைத்தாரந் நீற்றைக் கடலில் –மரித்தோன்
திரும்பான் எனச்சொல்லும் வாய்மூடும் முன்னம்
இருப்பாய் அவரின் எதிர்! (35)

எதிர்த்தோனைக் கண்டஞ்சா எல்லாளா! உன்னை
மதித்தோர்க்குத் தோள்கொடுக்கும் மள்ளா!* –மதித்துன்றன்
சொல்லுக்(கு) இணங்கித் தொடர்ந்த எமைக்காத்தாய்
அல்லும் பகலோடும் ஆங்கு! (36)

மள்ளன் –மறவன்.

ஆங்கோர் படைநிறுவி ஆளப் பிறந்தவனே!
தூங்கா(து) எமைக்காக்கும் தூயவனே! –தேங்காயின்
உள்வெளுப்பாய் உள்ளம் விளங்கியவா! உன்றனையே
உள்ளுதப்பா எங்கள் உளம்! (37)

உளவுப் படைகண்ட ஒப்பில்லாய்! யாரும்
களவு செயவரிய காற்றே! –விளிவை*
அரிமுகத்தர்க்(கு) ஈயும் அரசே! இமய
நரிமுகத்தர் வஞ்சித்தார் நன்கு! (38)

விளிவு –அழிவு; ஈதல் –வழங்குதல்

நன்றகற்றித் தீதினையே நத்துகின்ற* நாய்மனத்தர்
சென்றுதவி செய்வார் திருடர்க்கே –தொன்றுதொட்டுச்
செந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரைச்
செந்தழலுக்(கு) ஈதல் சிறப்பு. (39)

நத்துதல் -விரும்புதல்

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (40)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.


அன்புடன்
அகரம்.அமுதா