இனப் படுகொலை

தேசியத் தலைவர் பிரபாகரனோடு 2009 மே 17 ஆம் திகதி வீரச்சாவைடைந்த மெய்ப்பாதுகாவலர்கள் !

Posted on Updated on

ராதா வான்காப்புப் படையணி

முதலாம் , இரண்டாம் வட்டப்பொறுப்பாளர்கள்

சுவர்ணன்

சிலம்பரசன்

செங்கை

பிரிகேடியர் ரட்ணம் மாஸ்ரர் –றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை

சேந்தன்

குறிஞ்சிக்குமரன்

ஈழவாணன்

வண்ணன்

இகைவேந்தன்

தென்றல்

பெருவாணன்

நக்கீரன்

அழகரசன்

தயாளன்

ஈகை

விடியல்

கதிரேசன்

மே மாதம் முதாலம் வாரம் வீரச்சாவைத் தழுவியவர்கள்

வள்ளுவன்

இளங்கோ

புரட்சி

காசி

அறிவுமாறன்

வள்ளல்

பொண்ணன்னன்

முரசு

தென்னவன்

மொழியறிவு

அய்யன்னா மாஸ்ரர்

—-

துவாரகாவுக்கு வீரவணக்கம் ! #துவாரகா #info7tamil #பிரபாகரன் #duwaraka

Posted on Updated on

இறந்து கிடப்பது ஒன்று அண்ணியார் மதிவதனி அவர்கள், மற்றது மகள் துவாரகா, அவர் புலிகளின் சீருடையுடன் தான் இறந்துள்ளார் பின்னர் சிங்களவன் உடையை களைந்து கேவல படுத்தி உள்ளான் பிள்ளையை அடையாளம் கண்டு, அது போலவே அண்ணியாரையும் செய்து உள்ளார்கள்.

//////

“யார் யாரெல்லாம் காரணம்..?”

துவாரகா என்று சொல்லி ஒரு போலியைக் கொண்டு வந்துவிட்டார்கள் என கவிஞர் காசி ஆனந்தன் உட்பட சிலர்மீது குற்றம் சுமத்துகிறோம்.

ஆனால் சில கசப்பான உண்மைகளை இங்கே எழுதவேண்டி உள்ளது.

தலைவரின் வீரச்சாவு ஏன் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை? மாவீரர் பட்டியலில் அவரது பெயர் இணைக்கப்பட்டு ஏன் இன்னமும் அஞ்சலி செலுத்தப்படவில்லை? தங்கை துவாரகாவின் வீரச்சாவும் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதது ஏன்?

தலைவரோ, அல்லது அவரது குடும்பத்தில் எவருமோ உயிருடன் இல்லை என்பது நமக்குத் தெரியும். இருந்தும் ஏன் அதை இன்னமும் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்..?

இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லையா? அல்லது அறிவிக்க விருப்பம் இல்லையா? 14 வருடங்கள் கழித்து இப்போதுதான் தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியின் வீரச்சாவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் தலைவரின் பேரிழப்பை அறிவிக்க இன்னமும் பல வருடங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்களா..?

அவரின் இழப்பை அறிவிக்கும்போது நம் எல்லோருடைய மனமும் புண்படும்தான். அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பும் மக்கள் நொந்துபோவார்கள் தான். ஆனால் உண்மையை மறைக்க முடியாது அல்லவா..?

தலைவர் ஒரு போர்வீரன். நம் தானைத் தளபதி. அவரும் ஒரு மனிதன் தானே? சாவு எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதானே? அப்படி இருக்கும்போது தலைவரின் வீரச்சாவை ஏன் இன்னமும் நாம் மறைக்க வேண்டும்?

இப்படி நாமே ஒரு தெளிவில்லாத நிலையில் இருந்தால் – அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்?

இன்று துவாரகா என்று சொல்லி ஒரு போலியைக் கொண்டு வந்தவர்கள், நாளை “இதுதான் தலைவர்” என்று சொல்லி, இன்னொரு போலியைக் கொண்டுவர மாட்டார்களா என்ன..?

தலைவர் மற்றும் தங்கை துவாரகாவின் வீரச்சாவை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டால், யாரும் வந்து வாலாட்ட முடியாதே?? அதன்பிறகு போலிகளுக்கு வேலையே இல்லையே..! சொல்லப் போனால் காசி ஆனந்தனிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் உண்மை இல்லையே..??

நமக்கென்று ஒரு திட்டம் இல்லாவிட்டால், அடுத்தவர்களின் தாளத்துக்குத்தான் நாம் ஆடவேண்டும். இப்போது அதுதான் நடக்கிறது.

தலைவரின் வீரச்சாவை அறிவிப்பதில் என்ன தயக்கம் இருக்கிறது? அவர் என்ன கோழைபோல ஓடி ஒழிந்து, எங்கேனும் மறைந்து வாழ்ந்து நோய் வந்து இறந்தாரா? இல்லையே?

போராட்டத்தை அவர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அவரது பேச்சும் கொள்கையும் மாறவே இல்லையே. கடைசி ஒரு போராளி இருக்கும்வரை போராடுவேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார். அவரது வீரச்சாவு ஒன்றும் அவமானகரமானது இல்லையே..? அவர் புறமுதுகிட்டு ஓடவில்லையே..?? இறுதிவரை களத்தில்தானே நின்று போராடினார்..!

அப்படிப்பட்ட அந்த மாவீரனுக்கு 14 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தாமல் இருக்கிறோம் நாம்.

இது என்ன வகையான அரசியல்? யாருக்கு நாம் பயப்பிடுகிறோம்? ஈழத்தமிழர்கள் வீரத்தமிழர்களா? இல்லை கோழைத் தமிழர்களா..???

எம்மிடம் மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் எல்லாம் இருக்கின்றன. யாருமே வாய் திறக்கவில்லையே..! என்ன காரணம்?

துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று சொல்லும் அந்தக் குறூப்புக்கும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லும் ( அல்லது அவரது வீரச்சாவை அறிவிக்காமல் இருக்கும் ) இந்தக் குறூப்புக்கும் என்ன வித்தியாசம்..??

“இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லையே. அதிலிருந்து அடுத்தகட்டம் நோக்கி நகர முடியுமே..!!!

திரும்பவும் சொல்கிறேன் – நமக்கென்று ஒரு திட்டம் இல்லாவிட்டால், நாம் அடுத்தவர்களின் திட்டப்படியே செயல்பட வேண்டிவரும்..!

சிந்தியுங்கள்..!!!


———————

மொத்தத்தில் அண்ணையின் குடும்பமே “மாவீரர்கள்” நிலைமை அப்படி இருக்கும் போது, இந்த கேடு கெட்ட  சனியன், சொல்லுது தான் தங்கையை பார்த்தேன், மகளை பார்த்தேன் புடுங்கினேன் என்று, இது இப்ப “றோ” வின் கை கூலிகளோடு சேர்ந்து விட்டது,

எமக்காக உயிர் நீத்த மாவீரர்களையும்!!! கேவல படுத்தி சிறுமை படுத்தி கொண்டே வருகிறார்கள், இதன் உள்நோக்கமும், இவர்களால் மேற்கொள்ள படும் சதிகளும் “உலக வல்லரசாலும்” “றோ” இவர்களாலும் இயக்கபட்டு கொண்டே இருக்கின்றது, உண்மைக்கு புறம்பாகவும், நீதியற்று நடக்கும் இவர்களையும் அடையாள படுத்தி எம்மவர்கள் மத்தியில் தோல் உரித்து தொங்க விட வேண்டியது ஒவ்வோர் தமிழனின்!!!!!!! கடமையும் ஆகின்றது. நன்றி🙏

ஆக்கம் மூலம் தெரியாது இணையவழி


https://www.youtube.com/@NESAKKARAMMEDIA/videos

https://www.youtube.com/@info7tamil/videos





போலிக்கு உறுதுணையான ஊடகங்கள்


#மேதகு திரைப்படம் நம் இன வரலாற்று ஆவண படம் ! @naiyappudai #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte

Posted on

மேதகு என்ற பெயரை வைத்த நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒருவித பிரச்சனை எதிர்கொண்டே மேதகுவை வளர்த்தெடுத்தோம்.காட்டிக் கொடுப்புகளும் ,,அரசியல் நெருக்கடிகளும்,,அதிகார அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தே மேதகுவை உறுவாக்கினோம்….

மற்றவர்களை பொறுத்தவரை இதுவொரு சினிமா??? எங்களைப் பொறுத்தவரை ஒரு இனத்தின் சொல்ல மறந்த கதை/// வளரும் இளைய தமிழ்ச்சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய வீர வரலாறு////

மேதகு இசைவெளியீட்டு விழா பின்னர் போராட்ட களத்தில் நின்ற அல்லது தமிழீழ போராட்டத்தின் தொடக்கம் காலந்தொட்டே ஆய்ந்து அறிந்தவர்களுக்கு திரையிட்டு காட்டி திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக திரையிட்டுக் காட்டியது,,இறுதியாக தமிழ்தேசிய ஆளுமைகளை,,உதவிய நண்பர்களை அழைத்து சிறப்பு திரையிடல் வரை எல்லா நிகழ்வுகளும் முதலில் தடுக்கப்பட்டும் பின்னர் அது உடைக்கப்பட்டே நிகழ்வுகள் நடந்தேறின….

மேதகு திரைபபடம் வெளியாகவிருந்த தனியார் Ott நிறுவனுத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அதில் நானே கையெழுத்திட்டு அதன் வரவு செலவுகளை பார்ப்பதற்கு ஆக்ஸ்சிஸ் வங்கியில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு தனியார் Ott நிறுவனத்திடம் மேதகுவின் படம் தொடர்பான காட்சிகள் ஒப்படைக்கப்பட்டன.அவர்களும் கடந்த ஒருவார காலமாக அதை வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தனர்…

நேற்று முன்தினம் (மே 20) மாலை 3.30 க்கு ஒரு லின்க்கை கொடுத்து உலக முழுவதும் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் உங்கள் நண்பர்களை பார்க்க சொல்லுங்கள் என அந்த லின்க்கை கொடுத்தனர்/// அமெரிக்காவில் நண்பர் அரவிந்தும் ,,லண்டனில் அண்ணன் சுதன் தலைவனின் தம்பி அவர்களும் ஆஸ்ரேலியாவில் சகோதரன் Aravinth Gurusamy அவர்களும் டென்மார்க்கில் சுமேஷ் அண்ணனும் பார்க்க ஏற்பாடு செய்து ஒருசில தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மேதகு வெளியாக 99.9% வேலைகள் நிறைவடைந்த மனநிலையில் இருந்தோம்////

நேற்று மாலை அந்த தனியார் Ott நிறுவன மேலாளரும்,,லீகல் டீம் தலைவரும் என்னையும் ,,அண்ணன் சுமேஷ் அவர்களையும் ,,தம்பி கிட்டுவையும் அழைத்து எங்களுக்கு சிவப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது /// அதை நாளை வெளியிட முடியாது என்று சொன்ன போதுதான் மேதகு என்ற சொல்லின் அர்த்தமும் ,,ஆழமும் புரிந்த்து/// இது நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்…

இப்படி ஒரு வேளை தடைசெய்யப்பட்டால் நாம் செய்யவேண்டிய மாற்று ஏற்பாடுகளை குறித்து ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து வைத்திருந்ததால் எங்களுக்கு பெரிய ஏமாற்றம் இல்லை குறித்த தேதியில் வெளியிட முடியவில்லை என்ற வருத்தம் தான் லேசாக…

எங்க தடுக்கப்பட்டோமோ?? அது முதலில் உடைக்கப்பட வேண்டும் என்ற மேதகுவின் தத்துவத்தை அப்படியே உள்வாங்கி மேதகுவை உங்களிடம் ஒரிரு நாட்களில் உங்களிடம் சேர்ப்போம்/// இனி வெளியாகும் தேதி அறிவிப்பெல்லாம் ஒருபோதும் இல்லை /// நேரடியாக பட வெளியிடு மட்டுமே படக்குழுவால் அறிவிக்கப்படும்…

எமக்காக ,,அந்த உன்னத தலைவனுக்காக உங்கள் பொன்னான ,,விலைமதிக்க முடியாத நேரத்தை,,உழைப்பை கொட்டி சமூக வலைதளங்களில் நீங்களே ஊடகமாக மாறி பரப்புனீர்கள் //// உங்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து செல்லமுடியாது/// எங்கள் வெற்றி என்பது ஒவ்வொறு தமிழீழ உணர்வாளர்களின் வெற்றி //// காத்திருங்கள் வெற்றிவிழாவில் கூடி களித்திருப்போம்////

அன்புடன்
தமிழீழதிரைக்கள குழுவினர்

https://tamileelathiraikalam.com/

MEDHAGU Official 2.0

#மேதகு திரைப்படம் வரும் சனிக்கிழமை (மே 22) OTT தளத்தில் வெளியாகிறது.. படக்குழுவினர் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறார்கள் லட்சங்கள் பல கடன் வாங்கி அதற்கு வட்டியும் கட்டி கொண்டிருக்கிறார்கள் (விரைவில் பொதுவெளியில் வெளிட இருக்கிறார்கள்) இது மிகுந்த மனவேதனையை அளித்தது… ஈழ வரலாற்றை, பிரபாகரனை ஆவணபடுத்த ஒருவன் திரைப்படம் எடுத்து கடனாளியாகி விடகூடாது என்று இந்த தமிழ் சமூகம் நினைக்க வேண்டும்.. இந்த படத்தின் டிக்கெட் விலை எத்தனை ரூபாய் நிர்ணயிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. குறைந்தபட்சம் ரூ.150 நிர்ணயத்தாலும், இந்த படத்தை சுமார் 75 ஆயிரம் பேர் பார்த்துவிட்டால் படக்குழுவினர் இழந்த பொருளாதாரத்தையாவது மீட்பார்கள்..

இந்த சமூகத்திற்கு தேவையில்லாத எத்தனையோ குப்பை படங்கள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி என்று வசூல் செய்கிறது. நம் இன வரலாற்று ஆவண படம் இழப்பை சந்தித்தால் அது ஈழத்தை, பிரபாகரனை நேசிக்கும் பிள்ளைகளின் நமது தோல்வி தான்.. இது போன்ற படைப்பாளிகளை ஊக்கப்படுத்தினால் தான் அடுத்தடுத்த நமது வரலாற்றை, வலிகளை ஆவணப்படுத்தும் படைப்பாளிகள் பலரும் வருவார்கள்.. எனவே இந்த படத்தை ஒவ்வொருவரும் முடிந்த அளவில் உங்களது நண்பர்கள், உறவினர்கள் என்று குறைந்தது 10 நபர்களையாவது பார்க்க வைத்துவிடுங்கள் 🙏..

ஒரு லட்சம் பேர் இந்த படத்தை பார்த்தால், நமது வரலாற்றை ஆவணப்படுத்த கிட்டு போல பல படைப்பாளிகள் உருவாவர்கள்.. இல்லை எனில் கிட்டு தான் இறுதி படைப்பாளி..! படத்தை இயக்குபவன் யாரா வேண்டாலும் இருக்கடும்.. படத்தில் வருபவன் பிரபாகரன்… அவ்ளோ தான்.

பதிவர்: சகோதரி அன்பரசி

@prabhakaran_ntk_offical

#முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு #வீரவணக்கம் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Mullivaikkal #ltte #Tamil #Eelam #Genocide #May18 #TamilGenocide

Posted on

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

ltte leaders dead


leader prabakaran tribute

praba god




எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !

2009 போரை 2002 இல் முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன் ! #காணொளி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #prabhakaran

Posted on

இங்கே ஒரு நெருடலான ஒரு விடயம் 2002 இல் நடைபெற்ற செவ்விகளை 18 வருடங்கள் கழித்து பகிரங்கப்படுத்துவது தான் ???????

#kolakalasrinivasan


தேசிய தலைவரை சந்தித்த வேளையில் – அப்துல் ஜப்பார்



அப்துல் ஜப்பார் | #Prabhakaran -ஐ ஈர்த்த ஊடகவியலாளரின் குரல்

‘நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன?”

இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரனிடம் கேட்க முடிகிற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்த்தாலே சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது இல்லையா?

இதைக் கேட்டவர் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான அப்துல் ஜப்பார்.

ஏப்ரல் 10, 2002 அன்று சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும் கிளிநோச்சியில் இருந்தார்கள். ஒட்டுமொத்த ஊடக உலகின் கண்களும் அன்று அந்த திசை நோக்கிதான் இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச ஊடவியலாளர் மாநாட்டினை அன்று ஏற்பாடு செய்திருந்தார். ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று ராஜீவ்காந்தி படுகொலையைப் பற்றி முதன்முறையாக புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது அன்றுதான்.

இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிற்குத்தான் அப்துல் ஜப்பார் சென்றிருந்தார். மாநாட்டின் நிறைவில் எதிர்பாராததொரு ஆச்சரியமாக பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு, அப்துல் ஜப்பாருக்கு கிடைத்தது.

இவரின் வானொலி நிகழ்ச்சிகள் அங்கு பிரபலம் என்பதால் பிரபாகரனே இவரைச் சந்திக்க விரும்புகிறார். அந்த உரையாடலின் இடையில்தான் ஒரு தருணத்தில் மேற்குறிப்பிட்ட கேள்வியை ஜப்பார் கேட்கிறார்.

***
இந்த மாநாட்டிற்கு சென்ற அப்துல் ஜப்பாரின் பயண அனுபவங்களும் பிரபாகரனுடனான சந்திப்பு விவரங்களும் தொகுக்கப்பட்டு ஒரு சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.

‘கண்டேன் சீதையை’ என்று அனுமன் சொல்வது போல ‘அழைத்தார் பிரபாகரன்’ என்பது நூலின் அழகான தலைப்பு.

எதிர்பாராமல் அமைந்த இந்த பயண நிகழ்வு, அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிரமங்கள், அதைத் தாண்டி வந்த சாதனைகள் என்று தன் பயணம் தொடர்பான ஒவ்வொரு நுண்தகவலையும் எளிமையான, அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார். அவருடனேயே நாமும் சென்று வந்த உணர்வு இந்நூலின் மூலம் கிடைக்கிறது.

போரினால் அழிந்த கட்டிடங்கள், புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், எல்லா ஏற்பாடுகளையும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யும் புலிகளின் ஒழுங்கு, நிர்வாகத்திறமை, அவர்களின் தியாகவுணர்வு உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் சுவாரசியமாக வெளிப்படுகின்றன.

#Tamilniram #HBDLeaderPrabhakaran66 #JegathGaspar

என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்



நாடாளுமன்றை அதிரவைத்த கூட்டமைப்பு உறுப்பினரின் பேச்சு!!

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களை சிறிலங்கா காவல்துறை கைசெய்வது என்பது அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயல் என்று தெரிவித்திருந்தார் த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.

நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருந்தார்

ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் அரசாங்கத்தை சரமாறியாக குற்றம்சுமத்தி சாணக்கியன் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? – ஃபேஸ்புக் பதில்
பிபிசி தமிழ்

தமிழீழ தனியரசே தீர்வு’ சுதுமலைப் பிரகடனம்.! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide

Posted on

1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டு, பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறீலங்காப் பிரதமர் ஜெ.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளுக்கு ‘அதிரடிப்படை” என்ற பெயரில் அனுப்பப்பட்டது.

ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப்பிரதமர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சில உறுதிமொழிகளை அளித்தார். இந்த உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பினார்.

இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.

நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி , தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு, தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 .08.04….

1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது

இலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.

தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.

இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட திரு.பிரபாகரன் அவர்களின் அந்த இந்தியப் பயணம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.

புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ‘அஷோகா’ ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட, ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள்’ பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் ‘கறுப்புப் பூனை’ பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த ‘அஷோக்கா ஹோட்டல்’ சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் பல இராணுவ ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், ஈழத் தமிழர்கள் இன்றுவரை மனதினில் நிறுத்தியபடிதான் இருக்கின்றார்கள்.

24ம் திகதி முதல் ‘அஷோகா’ ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.

புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், ‘புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்’ என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.

சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களையும், மிரட்டல்களையும் பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.

வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததானது, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் மன்னிக்கமுடியாத துரோகத்தை ஈழத் தமிழருக்கு வெளிப்படுத்தியிருந்தது.

இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் ‘போர் வாள்’ என்று அழைக்கப்பட்டவரும், தற்போதைய ம.தி.மு.கா.வின் தலைவரும்,, ஈழ விடுதலை பற்றி பேசி ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபாலசாமி (வைகோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.

அஷோகா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபாலசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபாலசாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்,

அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ நினைவுகூர்ந்திருந்தார்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.

இந்தியத் தலைவருக்கு எதிரான துன்பியல் சம்பவம் இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இப்படியெல்லாம் இந்தியாவால் நெருக்கடிக்குள்ளான நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகக் கூறி 02.08.1987 அன்று யாழ்ப்பாணம் திரும்பிய புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஒரு உரையை நிகழ்த்தினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரை என்று அந்த உரை பிரசித்தி பெற்றிருந்தது.

திரு.பிரபாகரன் அவர்களது அந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’, ‘திம்புக் கோட்பாடு’, என்பது போன்று சுதுமலையில் புலிகளின் தலைமை ஆற்றிய உரை ‘சுதுமலைப் பிரகடனம்’ என்றே அழைக்கப்படுகின்றது.

இந்தியாவால் ஏமாற்றப்பட்ட நிலையில், இந்தியாவால் முதுகில் குத்தப்பட்ட நிலையில், இந்தியாவால் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவுத் திகதிகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்தியப்படைகளுக்கு எதிராகப் போராடுவது என்று புலிகள் தீர்மானம் எடுத்துவிட்ட பின்னர்தான், புலிகளின் தலைவரது சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.



புலிகளது சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு

‘நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம்” -இதுதான் விடுதலைப் புலிகளின் சுதுமலைப் பிரகடனத்தின் தலைப்பு.

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த சுதுமலைப் பிரகடனத்தின் சில வாக்கியங்களை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்:

எமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப்படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.

எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.

மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்கள் அனைத்துமே இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் மேற்கொண்ட சுதுமலைப் பிரகடத்தில் உள்ளடக்கப்பட்ட வாக்கியங்கள்.

திரு.பிரபாகரன் அவர்கள் இந்தச் சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளும் முன்னதாக மற்றொரு கசப்பான சம்பவத்தையும் அவர் இந்தியாவினால் எதிர்கொண்டிருந்தார்.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்,16ம்,17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துளைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. அவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.

அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க ராஜீவ் காந்தி எண்ணினார்.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சக்திவாயந்த தொலைத்தொடர்பு கருவிகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்திலும் நடந்துகொண்டார்கள்.

இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இந்தியா மீது முற்றாக நம்பிக்கை இழந்த நிலையில் புலிகளின் தலைவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழப்பாணம் திரும்பினார்.

அதாவது இந்தியா மீது விடுதலைப் புலிகள் முற்றாகவே நம்பிக்கை இழந்த நிலையில், இந்தியா மீது விடுதலைப் புலிகள் மிக மோசமாகப் பகை கொண்ட நிலையில், இந்தியாவை நம்பி இனிப் போராட்டம் நடாத்துவதில்லை என்று புலிகளின் தலைமை நிலைப்பாடு எடுத்த நிலையில், இந்தியா ஆயுதக்களைவு செய்ய முற்படும்பொழுது இந்தியப்படைகளுடன் மோதுவதென்று புலிகள் தீர்மானம் எடுத்தபின்பு, இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை முடிவுசெய்த பின்னர்தான், இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் பலிகளின் தலைமை சுதுமலைப் பிரகடனத்தை மேற்கொண்டிருந்ததை இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.

இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், இந்தியாப் படைகளுடன் மோதுவதற்கு முடிவெடுத்த நிலையில், சுதுமலைப் பிரகடனம் ஊடாக திரு.பிரபாகரன் இந்தியாவை சிறிது காலத்திற்கு கையாள முயன்றார் என்பதைத்தான் நாம் இங்கு கவனகத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

திடுதிப்பென்று இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. வந்ததும் வராததுமாக புலிகளிடம் ஒரு ஆயுதக்களைவை இந்தியப்படைகள் செய்ய இருந்தன. ஈழத்தமிழர்களும் இந்தியாவை தமது காவல்தெய்வங்களாக நினைத்து கிட்டத்தட்ட பூசை செய்யும் நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியா அங்கு சென்றுள்ளதாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் மக்களின் மனங்களில் இந்தியாவின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டவேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தது.

திலீபன் தலைமையிலான அரசியல் பிரிவினர் அந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருக்க, மறுபக்கம் இந்தியப் படையினருடன் மோதுவதற்குத் தேவையான ஆயுதங்களை குமரப்பா, புலேந்திரன் தலைமையிலான குழுவினர் பல்வேறு மார்க்கங்களில் சேகரிக்க, தமிழ் நாட்டில் இருந்த புலிகளின் பல தளங்களை கிட்டு தலைமையிலான குழுவினர் வேறு இடங்களுக்கு மாற்ற, மாத்தையா(துரோகி) தலைமையில் வன்னிக் காடுகளில் பாரிய இரகசியத் தளம் அமைக்கப்பட, அதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் பணியைத்தான் தலைவர் பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் செய்திருந்தது.

வெளியீடு:தமிழீழ விடுதலைப்  போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும் நூல்

தமிழனாக இருந்தாலும் நீயும் எதிரியே – தேசியத் தலைவர் கூறும் செய்தி ! #இனப்படுகொலை #ஈழம் #தமிழர் #சுத்துமாத்துக்கள் #Tamil #Eelam #TamilGenocide #srilanka #Traitors @TNAmediaoffice

Posted on


(பகுதி 01)

கலங்காலமாக தமிழ்தேசியம் புதுப்புது தமிழின துரோகிகளை பிரசவித்து கொண்டே இருக்கின்றது. மாமன்னன் இராவணன் தொடக்கம் தமிழீழ விடுதலைப்போராட்டம் வரை தொடராகவே விதையில் விசமானதால் விருட்சமாக துரோகங்கள் வளர்ச்சியடைந்து செல்கின்றது. பயிரில் கலந்த நச்சு செடிகள் காலங்காலமாக புடிங்கி எறியப்படுவதைப்போன்று விரைவில் இந்த அடிவருடிகளும் புடுங்கி எறியப்படும் அதற்கு முதல் நாம் தெளிவு நிலையை அடைய வேண்டும். காலங்காலமாக விடுதலைப்போரை குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைத்து விட்டு ஒதிங்கி விடுகின்றோம் அது தற்காலத்தில் பெருமடங்காக அதிகரித்துள்ளது.

தமிழீழ கொள்கையில் உலகத் தமிழர்கள் அறுதி பெரும்பான்மையினர் அணைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றோம் ஆனால் கேள்வி என்னவென்றால் தமிழீழ கொள்கையில் ஒற்றுமையாக இருக்கும் நாம் ஏன் நமக்குள் ஒற்றுமையாக இல்லை?

இதற்கான காரணத்தை தேடினால் விடை சின்னதாகவே தெரியும் ஆனால் அதன் பின்னால் உள்ள காரணத்தை தட்டி பார்த்தால் துரோகத்தை விட கொடிய நச்சு செடியாக அசுர வளர்ச்சி பெறுவதை பார்க்க முடியும். பதவி ஆசை, அரசியல் லாபம், பணம் சம்பாதிப்பது பெயர் புகழ். அவனை விட நான் பெரது இவ்வாறு பல காரணங்களை சொல்லலாம்

தமிழீழ விடுதலைப் போராட்ட களங்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. களம் – ஈழம்
2. பின் களம் – புலம்பெயர் தேசம்
3. பின் களம் இரண்டு – தமிழகம்

தற்போது தமிழீழத்தை பொறுத்தவரை ஒற்றுமையாக களத்தில் நிற்க மாத்திரமே முடியும் ஆனால் எவ்விதமான போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாது காரணம் அரசியல் சட்டம் மூன்று மற்றும் ஆறு ஆகிய சட்டங்கள் எந்த நேரத்திலும் களத்தில் உள்ளவர்கள் மீது பாயும் நிலமை உள்ளது. ஆகவே தற்போது தமிழீழ களம் ஒரு பலவீனத்தை சந்தித்து நிற்கின்றது ஆனால் இந்த பலவீனத்தை பின்களம் அதாவது புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்றவர்கள் இந்த பதினொரு ஆண்டுகளில் சீர் செய்திருக்க முடியும்?

உதாரணத்திற்கு:

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவை ஐரோப்பிய தேசத்தில் உள்ள ஈழத்தமிழர் ஒருவரின் விருந்து உபசர நிகழ்வில் கலந்து கொள்ள முடிகின்றது எனில்!?

முன்னால் பிரித்தானிய பிரதமர் திரேசா மே ஈழத்தமிழரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள முடிகின்றது எனில்?

கனடா பிரதமர் ஈழத்தமிழரின் பிறந்த நாள் விழா திருமண விழா பொங்கல் விழா போன்றவற்றில் கலந்துகொள்ள முடிகின்றது எனில்?!

பிரான்ஸ் ஜனாதிபதி ஈழத்தமிழர் ஒருவரின் விருந்து உபசாரத்தில் கலந்து கொள்ள முடிகின்றது எனில்?!

கனடா ஒன்றாரியோ நாடளுமன்ற உறுப்புனராக, சுவிஸ் பேர்ன் நகராட்சி உறுப்பினராக, நோர்வே ஒஸ்லோ நகர முதல்வராக, அமெரிக்க நியு ஜெர்சி நகராட்சி உறுப்பினராக, கலியோர்னியா நாடாளுமன்ற உறுப்பினராக, காவல்துறையாக, ஜேர்மனி அரசியல் ஆரிசியராக, காவல்துறையாக ஈழத்தமிழர்களால் வர முடியுமெனில்? ஏன் இதுவரை ஈழத்தில் சிறிய மாற்றத்தை கொன்டுவர முடியவில்லை? முடியவில்லையா மாற்றத்தை கொண்டுவர விரும்பவில்லையா? இதற்கான காரணத்தை பார்க்க முதல் ஏன் நாம் ஒற்றுமையாக இல்லை

மாவீரர் நாள், கரும்புலி நாள், தமிழின அழிப்பு நாட்களில் கடமைக்காகவும் பெயருக்காகவும் அவர் அவர் இனங்களில் பிரிந்து நின்று நினைவேந்துவதும் கடமைக்காகவும் பெயருக்காகவும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாத்திரமே மேற்கொள்ளுகின்றோம் இதிலும் ஒருசிலரே உணர்வுபூர்வமாக கலந்து கொள்கின்றனர் மற்றவர்கள் பெயருக்கும் புகழுக்கும், சுயநல ஆதாயத்திற்குமாகவே கலந்து கொள்கின்றனர் இன்னும் சிலர் நான் தான் பெரிது நீதான் பெரிது என காட்டிக்கொள்வதற்காக நிகழ்வுகளை செய்கின்றனர். ஒரு அறிக்கை விடுவதில் தொடங்கி ஒரு பாடல் வெளியிடுவதுவரை எமக்குள்ளையே பிளவும் வேற்றுமைகளும் ஏன் இவ்வாறு நடக்க காரணம் தாங்கள்தான் பெரிது என ஒருகூட்டம் தேசியத்தை மறந்து தேசியத்தலைவராக முற்படுகின்றனர். ஆளுக்கொரு அமைப்பு, ஆளுக்கொரு கொள்கை.

இவ்வாறு தொடர்ந்தால் விடுதலை என்பது வெறும் வார்த்தைகளிலே அமைந்து விடும். எப்போது ஒரு தமிழனாக தமிழீழ விடுதலைக்காக தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் ஒன்றாக “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது கொள்கை பெரிது” என்று ஒன்றாக செயற்படுகின்றோமோ அன்றுதான் விடுதலை இது தேசியத்தலைவர் கூறியது.

இவ்வாறு பின் களம் பலம் பெற்றால் தமிழீழ களம் பலம் பெறும் தமிழீழ களம் பலம் பெற்றால் அரசியல் துரோக நரிகள் சுமந்திரன், சம்மந்தன், சிறிதரன் உட்பட பலர் தானாகவே களைந்து மக்கள் மத்தியில் இருந்து தூக்கி எறியப்படுவர்.

இதனையே தேசியத்தலைவர் இவ்வாறு கூறுகின்றார். “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறாது” என

இதனிடையே அன்று சமாதான காலகட்டத்தில் தலைவருக்கும் ஒரு ஊடகவியளாலருக்கும் இடையில் நடந்த உரையாடலில் அந்த ஊடகவியளாளர் ஒரு கேள்வியை கேட்டார் அதாவது உங்களுக்கு கோபம் வரவேண்டுமாயின் நான் என்ன செய்ய வேண்டும் இதற்கு தலைவர் சிறிதும் யோசிக்காது புன்னகையுடன் “தமிழினத்திற்கு எதிரியாகி பாருங்கள் எனது கோபம் விளங்கும் என்றார்”

ஆக தமிழீழ களத்தில் நிற்கின்ற தடம் மாறுகின்ற கூத்தமைப்பு தொடக்கம் சில முன்னால் போராளிகள் உட்பட தமிழீழ தேசத்தின் அடிவருடிகளாக துரோகிகளாகவே கருதப்படுவார்கள்

நாங்கள் ஒன்றாக இல்லாவிட்டாலும் இலட்சியத்தில் இருந்து தவறினாலும். தமிழீழ தேசத்தில் தண்டனைகள் உள்ளன

தமிழீழ விடுதலை போராட்டத்தில் கறுப்பு பக்கங்களில் நின்றார்கள் என்பதற்கு அமைவாக அவர் அவர் செய்த துரோக செயற்பாடுகளுக்கு அமைவாக

வி/போ/து/ச/1994/1/1மற்றும் 1996/1/3 ஆகிய தமிழீழ சட்டங்களுக்கு அமைவாக தண்டனைகள் வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது அரசியல் போராட்டாங்கள் கைகொடுக்க போவதில்லை பரிதாபத்திற்கு உரியவர்களாக இருந்தால் உலகம் எம்மை கண்டுகொள்ளபோவதில்லை ஆகவே நாம் பலசாலியாக மாறவேண்டும் அதற்கு எம்மிடம் இருக்கும் ஒரே ஆயும் இராஜ தந்திர நகர்வு.

இதற்கிடையில் ஒரு சிலர் எம்மிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை எவ்வாறு போரோடுவது என்று உங்கள் கொள்கையில் இருந்து வலகாதீர்கள் காரணம் இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவனால்தான் போராட முடியும் இலட்சியத்தை வெற்றிகொள்ள முடியும்.

இறுதியாக பலருக்கு இருக்கும் கேள்வி தமிழீழ களத்தை பலப்படுத்திய பின்னர் எவ்வாறு இராஜ தந்திர போராட்டத்தை முன்னெடுப்பது எம்மிடம் பலம் இல்லை எந்த பின்புல சக்தியும் இல்லை எந்த நாட்டின் ஆதரவும் இல்லை பின்னர் எவ்வாறு சாத்தியம்??

இதற்கான விடை அடுத்த பகுதியில் இதுவும் தேசியத் தலைவரே குறிப்பிட்டுள்ளார்….

ஈழம் புகழ் மாறன்

துரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide

Posted on

1995ல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பகுதி புலிகள் கையில் இருந்தது. சிங்கள ராணுவம் யாழ்ப்பாண கோட்டை, பலாலி விமானப்படைத்தளம், அதற்குள் அடங்கிய காங்கேசன் துறைமுகம் (காங்கேயன்துறை என்பதே சரி) போன்றவற்றில் ஆடுகளைப் போல பட்டி அடைக்கப்பட்டிருந்தது.

பலாலி படைத்தளத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். மொத்த யாழ். மாவட்டத்தில், பரந்து விரிந்து கிடந்த பலாலி படைத்தளத்தின் பரப்பளவு மட்டும் 8 விழுக்காடு.

யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு உணவு, ஆயுதம், மருந்து போன்றவை அந்த காலகட்டத்தில் வான் வழியே கொண்டு செல்லப்பட்டு வந்தன.

இந்தநிலையில், பலாலி விமானப்படைத்தளத்தில் இருந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில், ஓர் அவ்ரோ சரக்கு விமானம் அநுராதபுரத்துக்குப் புறப்படத் தயாரானது. வழமையான விமானம் அது.

சார்லி ரோஜர் HS – 748 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த விமானத்தில், விமானப்படையின் வடபகுதி தளபதி விங் கமாண்டர் ரோகன் வீரசிங்கே உள்பட நான்கு விங் கமாண்டர்கள், 35 ராணுவத்தினர், ஊர்காவற்துறை பகுதியில் நடந்த சண்டையில் காயமடைந்த 4 படையினர், விமானஊழியர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 48 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த 8 ராணுவத்தினரின் உடல்களும் விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தன.

விமானம் ஓடுதளத்தில் ஓடி மேலேறி பறந்தபோது மெல்லிய மழைத்தூறல் பொசுங்கிக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம். அதையடுத்து விமானத்தின் இரு ரோல்ஸ்ராய்ஸ் இயந்திரங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

பதற்றம் அடைந்த விமானத்தின் வலவர், விமானத்தை திருப்பி ஓடுபாதைக்கு மீண்டும் கொண்டுவர முயன்றார். ஆனால் முடியவில்லை. விமானம் வெடித்து கடலில் விழுந்தது. விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும் பலியானார்கள். விமானம் வெடித்து, ஓடுதளத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் விழுந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த புலிகளின் ஏவுகணை தாக்கித்தான் விமானம், பலியானது என்பதுகூட இலங்கை படையினருக்குத் தெரியவில்லை. வழக்கம்போல, இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சரத் முனசிங்கேவிடம் , “புலிகளின் ஏவுகணை தாக்கி விமானம் விழுந்திருக்குமோ?” என்று கொழும்பில் செய்தியாளர்கள் கேட்டபோது, சரத் முனசிங்க அதை அடியோடு மறுத்துவிட்டார்.

இதற்கிடையே ஏவுகணை தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்தியது பற்றி புலிகளும் மூச்சு விடவில்லை. அடுத்த விமானத்தை தாக்கி தகர்ப்பதற்காக அவர்கள் மற்றொரு ஏவுகணையுடன் தயாராகக் காத்திருந்தனர்.

இதற்கு மறுநாள் 29ஆம்தேதி சனிக்கிழமை காலை 8.45 மணி. மீண்டும் ஓர் அவ்ரோ விமானம், இந்தமுறை கொழும்பு ரத்மலானை விமானநிலையத்தில் இருந்து பலாலிக்குப் புறப்பட்டது.

சார்லி ரோஜர் 834 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த விமானத்தில் பாதுகாப்புப் படையினர் மொத்தம் 52 பேர் இருந்தனர். அவர்களில், அவ்ரோ விமான ‘விபத்தை‘ பற்றி புலனாய்வு நடத்த வந்த அலுவலர்களும் அடங்குவார்கள். விமானப்படை ஏர்மார்ஷல் ஒலிவர் குணதிலகவும் அந்த விமானத்தில் இருந்தார்.

அநுராதபுரத்தில் சற்றுநேரம் தரித்துநின்ற பின் அந்த விமானம், பலாலி நோக்கி புறப்பட்டது. விமானத்தை ஓட்டியவர் விங் கமாண்டர் சிரந்த குணதிலக. இவர் இலங்கை விமானப்படையின் ஏர்வைஷ் மார்ஷலான ஹாரி குணதிலகவின் இளைய மகன். மற்றொரு விமானப்படை அலுவலரான ரோஷன் குணதிலகவின் சகோதரர்.

ஐந்தாயிரம் அடி உயரத்தில், பலாலி விமானதளத்துக்கு 4 மைல் தொலைவில் விமானம் வந்தபோது, தொண்டமானாறு பகுதியில் இருந்து விமானத்தை நோக்கி ஓர் ஏவுகணை சீறிப்பாய்ந்து வந்தது.

ஏவுகணை பாய்ந்து வருவதை பார்த்துவிட்ட வலவர் சிரந்த குணதிலக, ‘ஏவுகணை வருகிறது’ என்று அலறினார். ஆனால் அதற்குள் விமானம் அடிபட்டு சிதறி, பலாலி விமானப்படைத் தளத்துக்கு 7 கிலோ மீட்டர் வெளியே நிலாவரை பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. பலாலி விமானப் படைத்தளம், அதைச்சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு வலயத்தை அமைத்திருந்த நிலையில், இந்த பாதுகாப்பு வலயத்துக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வெளியே விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் 30 ராணுவத்தினர், 12 கடற்படையினர், 12 விமானப்படையினர், 2 காவல்துறையினர் என 59 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. மொத்தம் 52 பேர் என்றும் தகவல் பரவியது. எது எப்படியோ விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர்தப்பவில்லை.

அடுத்தடுத்து நாள்களில் 16 மணிநேர இடைவெளியில் இரண்டு விமானங்களை புலிகள் சுட்டுவீழ்த்தி விட்டதால், இலங்கை முழுவதும் பரபரப்பு ‘பக்’கென பற்றிக் கொண்டது. இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் சந்திரிகா பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதிர்ந்து போன அவர் உடனடியாக நாடு திரும்பினார்.

புலிகளின் தாக்குதலின் எதிரொலியாக பலாலி விமானப்படைத்தளத்தில் அனைத்து விமானப்போக்குவரத்துகளும் உடனே நிறுத்தப்பட்டன.

புலிகள் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், அதன் விமானிகளை இலங்கைக்கு மேலே 25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அறிவுறுத்தியது.

இதனிடையே புலிகள் பயன்படுத்திய ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று பலவாறான கேள்விகள் நாலா திக்கிலும் எழுந்தன. புலிகள் ரஷியத் தயாரிப்பான ஸ்ட்ரெலா அல்லது இக்லா ஏவுகணையைப் பயன்படுத்தியிருக்கலாம், அல்லது ஒருவேளை அது அமெரிக்கத் தயாரிப்பான ஸ்டிங்கர் ஏவுகணையாக இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் வட்டமிட்டன.

ஒலியைவிட ஒன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடிய அமெரிக்க ஸ்டிங்கர் ஏவுகணை, தோளில் இருந்து ஏவப்படக்கூடியது. 4 கிலோ மீட்டர் தொலைவு வரை இது அதிக ஆற்றலுடன் செயல்படக் கூடியது. ரஷிய ஏவுகணைகள் ஒன்றும் தக்காளித் தொக்கல்ல. ஆற்றலில் ரஷிய ஏவுகணைகளும் படுசமர்த்து. ஒலியை விட 3 அல்லது 4 மடங்கு வேகத்தில் பாயக் கூடிய விமான வீழ்த்தி ரஷிய ஏவுகணைகள் உண்டு.

இக்லாவின் உச்சகட்ட வேகம் நொடிக்கு 570 மீட்டர். ஸ்ட்ரெலாவும் லேசுபட்டதல்ல. ராடாரின் கண்ணில்படாமல் 2,300 மீட்டர் உயரத்துக்குக் கீழே திருட்டுத்தனமாகப் பறக்கும் விமானங்களை மிரட்டி, ‘மேலே போ, மேலே போ என்று ஒரேடியாக ‘மேலே’ பறக்க வைக்கக்கூடிய ஏவுகணை அது.
ரஷிய மொழியில் இக்லா என்றால் ஊசி. ஸ்ட்ரெலா என்றால் அம்பு.

இறுதியில், புலிகள் பயன்படுத்திய ஏவுகணை, ரஷிய உருவாக்கமான ஸ்ட்ரெலா -2 என தெரியவந்தது. தரையில் இருந்து புறப்பட்டு வான் இலக்கைத் தாக்கும் உணர்மோப்பத்திறன் கொண்ட இந்த ஸ்ட்ரெலா -2 ஏவுகணை புலிகளிடம் இருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படைத்தளத்தின் இயக்கம் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டது.

ஈழப்போர் வரலாற்றில் தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இரு விமானங்களை அடுத்தடுத்து புலிகள் வீழ்த்தியது அதுவே முதல்முறை.

புலிகள் வீசிய ஏவுகணைகள். ஈழப்போர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிங்கள விமானப்படையின் சிறகுகளை அறுத்து புலிகள் வானில் நடத்திக் காட்டிய புதிய பாய்ச்சல் அது.

பா. ஏகலைவன்

எழுத்தாளர் மோகன ரூபன் பதிவு

தமிழ்த் தேசிய ஆவணக்காப்பகம்

விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி.

மண்டைதீவு படைத்தளம் போராளிகளின் இலக்காக பல முறை தேர்வாகியது. அவ்வண்ணம் எதிரியின் ஆதிக்கமும், மக்களை பெரும் துன்பவியல் வாழ்விற்குள் தள்ளும் சில ஆறாத ரணங்களை எம்மக்களுக்கு அந்தப் படைத்தளம் கொடுத்தது.

எதிரிக்கு சில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில இராணுவ ஆக்கிரமிர்க்கும் தீவகத்தின் உள் பகுதிகளில் இருக்கும் சிறு சிறு எதிரி முகாம்கள் மற்றும் மினிமுகாம் போன்றவற்றுக்கும் முக்கியம் வாய்த தளமாக மண்டைதீவு படைத்தளம் இருந்தது.
அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப் பகுதியிடமிருந்து சிறு நீர்ப் பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இரு மாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் யாழ் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும்.

யாழ் குடாநாட்டின் மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையின் பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.

இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.

திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான். இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான ‘இதயபூமி’ தாக்குதல் உள்ளது.

மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

இன்றும் அவ்வண்ணம் தான், ஆயினும் எம்மக்களின் நிலங்களும் அங்கு அபகரிக்கப்பட்டு அதன் கடல்வளங்களும் சிங்கள அரசால் சூறையாடிய அழிக்கப்பட்ட வண்ணம் இருப்பது வேதனைக்குரிய விடயம்.

தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ் குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.

நெல்சன் மண்டலேவும் பிரபாகரனும்.

27 வருடங்கள் சிறையில் இருந்த நெல்சன் மண்டலேவிடம் “ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிக்கை விடுங்கள் விடுதலை செய்கிறோம்” என ஆட்சியாளர்கள் கூறினார்கள்.

ஆனால் அவர் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இறுதியாக அவர் விடுதலையானபோது பல உலக நாட்டு தலைவர்கள் அவரை சந்திக்க விரும்பினார்கள்.

ஆனால் அவர் தான் சந்திக்க விரும்பிய ஒரு தலைவர் பிரபாகரன் என்று கூறியிருக்கிறார்.

நெல்சன் மண்டலேவுக்கு ஈழப் போராளிகளன் தியாகம் தெரிந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்கிறது.

நான் போராளி, அரசியல்வாதி இல்லை.
என்னால் என்றுமே ஒரு அரசியல்வாதியாக இருக்கமுடியாது.

#காலங்களை வென்ற புரட்சியாளன்…