தேசியத் தலைவர் உயிருடன் இல்லை !

வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

- காலம் ஒரு பதிலெழுதும் – சண் தவராஜா
- தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் – பொங்குதமிழ் இணையம்
- தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன? – கேட்கின்றார் அறிஞர் பெருந்தகை சட்டவாளர் நடேசன் சத்தியேந்திரா அவர்கள்
- தனது இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர்? – வருந்துக்கிறார் ஆய்வாளர் சபா நாவலன்
- ஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்! – நல்லாசான் ஏ.சி தாசீசியஸ்
- தத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்! வேண்டுகிறார் கிருஸ்ணா அம்பலவாணர்
- தாயில்லாப் பிள்ளையானோம் அழுகின்றார் அகதித்தமிழன்
- வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..!-தொல்காப்பியன்

இறுதியில் நடந்தது இதுவே ! விடுதலைப்புலிகள் அரசியல் துறை சங்கீதன், ஜெயாத்தன் செவ்வி
பிரபாகரன் உயிர்:
கடைசி யுத்தத்தில் போரிட்ட முன்னாள் போராளி பிபிசி தமிழுக்கு பேட்டி
இதைத் தவிர மேலதிக தகவல்களை பேச முடியாத நிலைமையில் இருக்கின்றோம். இதைப்பற்றி பேச விளைகின்றவர்கள், இறுதிச் சண்டை களத்திலே நின்றவர்களாகவோ, அல்லது அண்ணனினுடைய பாதுகாப்பில் நின்றவர்களாகவோ அல்லது குறைந்த பட்சம் நந்திக்கடல் சண்டை களத்தில் கலந்து கொண்டவர்களாகவோ இருந்து, இதற்கு பதிலளிப்பது, உகந்ததாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை வழங்கும் தருணத்தில், இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டமையானது, ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முன்னாள் போராளி அரவிந்தன் கூறுகின்றார்.
”போராளிகள் என்ற விதத்தில் இதை நாங்கள் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கின்றோம். தற்போது இலங்கை அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை வழங்குகின்ற நிலைமையிலேயே, அதனை குழப்பி விடுகின்ற ஒரு தரப்பினுடைய வேலையாக இது இருக்கலாம். 13வது திருத்தச் சட்டத்தை வழங்க போகின்றார்கள், போலீஸ், காணி அதிகாரங்களை வழங்க போகின்றார்கள். என்ற நிலையிலேயே இதனை செய்கின்றார்கள்.
அண்ணன் வரப் போகின்றார் என கூறி, புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்கள். இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட இந்தியாவின் ‘ரா’ உளவுப்பிரிவின் திட்டமாக நாங்கள் பார்க்கின்றோம்.
கோத்தபாயவின் பங்காளி தவிபு துரோக கட்சி தலைவர் கந்தசாமி இன்பராஜா முன்னாள் போராளி அரவிந்தன் பிபிசிக்கு பேட்டி அளித்ததற்காக மிரட்டிய -பிள்ளையான் கட்சி ஊடக காணொளி
விடுதலைப்புலிகள் இப்படிச் செய்தார்கள் என்று பொய்ச் செய்தி பரப்பும் இந்த கோத்தபயா கட்சி கந்தசாமி இன்பராஜா இதற்கு யார் உரிமம் அளித்தது -பிள்ளையான் கட்சி ஊடக காணொளி
பிரபாகரன் பற்றி பழ.நெடுமாறன் கருத்து ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா?