Prabhakaran a Leader for All Season -Book
Prabhakaran – A Leader for All Seasons – Glimpses of the Man behind the Leader,
Pdf – http://www.scribd.com/doc/124588262/Prabhakaran-a-Leader-for-All-Season-Book
“இத்தலைவனின் சொற்களில் ஆவேசமும் உண்டு அன்பும் உண்டு. நிதானமும் உண்டு தீர்க்கதரிசனமும் உண்டு. ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்” என்று அன்று பாரதி பாடிய கவிதைக்கு இத்தலைவன் இலக்கணமாக விளங்குகிறான்…”
Pdf tamil book http://www.scribd.com/doc/124718687/Prabhakaran-a-Leader-for-All-Season-Tamil-Book
From the Introduction:
The end of the Second World War spawned many liberation struggles in the Afro-Asia regions. Before the war, the European colonial powers, for administrative convenience, had amalgamated small countries and distinct regions into single administrative units t1e consideration for their racial and cultural sensitivities and histories.
In the island of Sri Lanka too, the British amalgamated the Tamil and Sinhala Kingdoms – which until then had been treated as separate entities by the earlier Portugese an Dutch rulers – into one unit. When independence was granted in 1948, they handed the administration of the whole island to the Sinhalese in Colombo.
For decades, political and peaceful campaigns by the Tamil people for the restoration of their rights were answered with discrimination, intimidation and military oppression by the Sinhaia forces. Ultimately the Tamils resorted to an armed liberation struggle. From this ultimate stand by the Tamils for their self preservation and dignity; rose the Man of Destiny, Prabhakaran.
From Visionary to Leader
Valvettithurai was a famous part of the last Jaffna Kingdom which existed from the early 131 Century to the 171 Century. It was here that Prabhakaran was born on 26`n November 1954. His parents, Veluppillai of Thirumeniyar and Parvathy, daughter of Nagalingam of Pt. Pedro, were bath from orthodox, affluent families. Veluppillai was a Lands Officer for the Sri Lankan Government. Prabhakaran was the youngest of their four children.
“I was brought up in an environment of’strict discipline, from childhood… Great store was laid by personal rectitude and discipline. My father set an example through his own personal conduct… “
His education at Chithambara College in Valvettithurai was nonedescript and he was an average student. He loved history and read avidly of the lives of great leaders like Alexander the Great and Napoleon. The Indian nationalist leaders, Subhas Chandra Bose and Bhagat Singh, were to become sources of inspiration to him. It was the norm for children of affluent families in Jaffna to continue their education in English in preparation to go abroad or to join the Government Service. However, the young Prabhakaran was different.
He became highly sensitive to the harassment and intimidation of the Tamils by the Sinhala armed forces even as a child. The 1958 anti-Tamil riots left him deeply disturbed.
“…I heard horrifying incidents of haw our people had been mercilessly and brutally put to death by Sinhala racists. Once I met a widowed mother, a friend of my family, who related to me her agonizing personal experience of this racial holocaust. A Sinhala mob attacked her house in Colombo. The rioters set f ire to the house and murdered her husband. She and her children escaped with severe burn injuries… When I heard such stories of cruelty, I felt a deep sense or sympathy and love for my people…” As told to Anita Pratap, Sunday Magazine, March 11-17 1984
The discriminatory policy of standardisation which deprived Tamils of fair university and employment opportunities angered him even as a Year 10 student. He and fellow students joined the Tamil Students Organisation (Thamil Maanavar Peravai). Instead of addressing their grievances, the Government arrested and tortured these students. This only served to fuel the indignation of the young Prabhakaran.
In 1972, at the age of 17, he gathered his colleagues and formed the resistance movement, ” Tamil New Tigers “, the members coming from friends and relatives. The Movement grew into an armed Liberation movement and changed its name on 5 May 1976 to the Liberation Tigers of Tamil Eelam.
Prabhakaran stressed adherence to a strict code of conduct as the main criteria for membership into the LTTE. When asked once who were his beacons, his reply was characteristic:
“Nature is my friend, Life my philosopher and History my guide.”
History is full of tales of men who rose to meet the need of the time. Here was one such Man; the time of need had come for the Tamil people for such a man. Today, to his followers he is the inspiring object of devotion and respect, their `Annai’.
To the Tamil people in the north and east of Sri Lanka and to the hundreds of thousands of Tamils flung all over the globe, he is the unquestioned Leader, simply, their `Thalaivar’.”
ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் கதை இது. இது ஒரு வரலாறு.
பெருந்தலைவர்களின் வரலாற்று நூல்கள் பல உள்ளன. சில வரலாறுகள் சுயசரிதைகள். சில ஒருவரின் சரிதத்தை மற்றவர் எழுதியவை. இந்த வகையில் இந்த நூல் சற்றே வேறுபட்டுக் காணப்படுகிறது. இது ஒரு படத்தொகுப்பு – தனது இனத்தின் விடுதலைப் போராட்டத்தை இயக்கி வழிநடத்தும் ஒரு பெருந்தலைவனின் கதை இது. அத்தோடு போராட்டத்தின் படிப்படியான வளர்ச்சியின் வரலாறும் சேர்ந்து வருவதைப் பார்க்கிறோம். இப்படத்தொகுப்பிலே வரும் உரைகள் யாவும் அத்தலைவனின் கூற்று – அவனது வார்த்தைகள். எனவே ஒரு புறம் சுயசரிதை போலவும் மற்றொரு வகையில் வரலாறாகவும் அமைந்து விடுகிறது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப்பற்றிக் கூறும் நூல்கள் பல இன்று வெளிவந்துள்ளன – வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையிலே இந்த நூல் தனித்துவமானது.
படங்களே கதை சொல்கின்றன. படங்களோடு கூடிய நூல்களைப் பார்ப்பதற்கு எந்த வயதினருக்கும் எப்பொழுதுமே பிடிக்கும். பதினேழு வயதுப் பாடசாலைச் சிறுவனின் காலம் முதல்இ இன்றைய ஐம்பது வயது முதிர்ந்த ஆளுமை மிக்கஇ ஒரு இனத்தின் பெரும் தலைவனை இங்கே பார்க்கிறோம். படங்களின் பன்முகப்பட்ட தன்மைஇ கருத்து மனதிலே ஆழமாகப் பதிய உதவுகிறது. படங்களின் பக்கத்திலே உள்ள உரைகள் இத்தலைவனின் நெஞ்சிலிருந்து வரும் தீர்க்கதரிசனமுள்ள வார்த்தைகள். அந்த உரையில் காணப்படும் நேர்மையும் வீரமும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. தமிழ் மக்கள் மாத்திரம் இதுவரை அறிந்திருந்த வரலாற்று உண்மைகள் பல இன்று ஏனையோரும் அறியும் வகையிலே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில நிமிடங்களிலேயேஇ மிக விரைவாகää ஒரு விடுதலைப் போராட்டத்தின் பரிணாமத்தையும் அதை வழிநடத்தும் தலைவனையும் சகலருமே இனங்கண்டு கொள்ள இந்த நூல் உதவுகிறது.
இப்படிப்பட்ட ஒரு நூலை ஒரு முக்கியமான காலகட்டத்திலே சிந்தித்து தொகுத்தளித்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந் நூலின் வரவு காலத்தின் கட்டாயம்.
நாம் ஒரு பதினேழு வயது மாணவனின் படத்தை முதலில் பார்க்கிறோம். சாந்தமான தோற்றம். நெற்றியிலே திருநீறு. ஒரு சாதாரண தமிழ் மாணவன் இப்படித்தான் இருப்பான். இப்படியே எமது பிள்ளைகள் பலர் மனதிலே வருகிறார்கள். 33 வருட காலத்தில் இந்த சாதுவான பசுக்கள் எப்படி வேங்கைகளாக மாறினார்கள் என்பதுஇ இங்கே படங்களாக விரிகின்றன.
அடக்கி வைக்கப்பட்ட ஒரு இனம் எரிமலையாக வெடிப்பதைப் பார்க்கிறோம். தொடர்ந்து வரும் பக்கங்களிலே இந்தத் தலைவனின் வீரம் மிக்க வார்த்தைகள் – தனது மக்களின் சுதந்திர வேட்கையை நியாயமான போராட்டத்தைää நியாயப்படுத்தும் இத்தலைவனின் உறுதியைக் கண்டு தமிழினமே தலை நிமிர்கிறது. ‘என்னுடைய மக்கள் என்னுடைய மக்கள்” என்று வார்த்தைக்கு வார்த்தை பாசத்தோடு சொல்லுவதைப் பார்க்கிறோம்.
அந்த வார்த்தை பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதத்தை ஒழித்து சமத்துவம் என்று நீதி கேட்கிறது. அரசியலிலிருந்து மாத்திரமல்ல பொருளாதார விடுதலையும் சமமாக வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையை அந்த வார்த்தைகளிலே பார்க்கிறோம். ஏற்றத் தாழ்வில்லாத ஒரு சுதந்திரமான சமூகத்தை அமைப்பதன் அவசியத்தை வற்புறுத்துவதைக் கேட்கிறோம். ‘மானிடத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம். இங்கே ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை” என்று மனிதத்தின் மாண்பைச் சிறப்பிப்பதைப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறோம். பெண்விடுதலை பற்றிப் பேசுவோர் பலர் ஆணாதிக்கம் பற்றியே அதிகம் பேசுவார்கள். ஆனால் இங்கே ஆதிக்கம் பற்றிப் பேசும் ஒலி இல்லை. ‘பெண்களைப் பற்றிய ஆண்களின் அறியாமையிலிருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும்” என்ற உயர்ந்த கருத்து சிந்திக்கப்பட வேண்டியது. (The struggle against male chauvinism is not a struggle against men but a struggle against the ignorance of man.)
இந்தமாதிரியான சிந்தனை ஆழமான தொலை நோக்கு இருப்பதாலேயே துணிச்சல் மிக்க வீராங்கனைகளை இத்தலைவனால் தமது இயக்கத்திலே வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது.
‘நாங்கள் சிங்கள மக்களின் எதிரிகளல்லசிங்கள அரசின் கொடுமைகளுக்கு எதிராகவே போராடுகிறோம்” என்பதை தனது ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் வற்புறுத்தியிருப்பதை இந்நூல் வரிசைப்படுத்தியுள்ளது. அவர் கொண்டகொள்கையிலிருந்து மாறவில்லை. இது ஒரு சிறந்த தலைமைக்கே உரிய பண்பு.
படங்களில் குழந்தைகளை அணைத்தபடிää மலர்ந்த முகத்துடன் நிற்கும் அந்தத் தலைவனின் கனிந்த பார்வையில் மனிதாபிமானம் தெரிகிறது.
‘நான் ஏற்றுக்கொண்ட பணியை முடிக்கவேண்டும். இச்சிறுவர்கள்தான் வருங்காலத்தில் இந்த விடுதலைப் போரின் பயன்களை அனுபவிக்கவேண்டும்” என்ற வேட்கை அவ்வார்த்தைகளில் ஒலிக்கிறது.
‘எங்கள் மக்களைப் பெரும்பான்மையினர் கொன்றுகுவிக்கும்போது பிறர் எம்மீது இரக்கப்படுகிறார்கள் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் எழுதுகிறார்கள் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வந்து எங்களுடைய பிரச்சனையைத் தீர்த்து வைப்பார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். எங்களுடைய பிரச்சனையை நாங்கள்தான் தீர்க்கவேண்டும். பிரச்சனை எங்களுடையது” என்று தீர்மானமாகக் கூறுகிறார்.
‘போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை, சமாதானத்தையே விரும்புகிறோம். ஆனால் எங்கள் உரிமைகளை நாங்கள் போராடிப் பெறவேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்று கூறுவதைப் பல இடங்களில் பார்க்கிறோம்.
‘இது ஒரு வேள்வி. இந்தத் தீயிலே எங்கள் இளைஞர் தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிவிட்டார்கள். இந்த நெருப்பு என்னுள் கனன்றுகொண்டிருக்கிறது” என்று வேதனையோடும் ஆதங்கத்தோடும் அந்தத் தலைவன் கூறும்போது நாமும் அந்தச் சோகத்தை அனுபவிக்கிறோம்.
‘எந்த ஒரு இயக்கமும் மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது. மக்கள் எத்தனை இன்னல்களுக்கிடையிலும் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.” இங்கே இந்த விடுதலைப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்காகத் துயரப்படுவதையும் அதேவேளை தனக்கு ஆதரவு தரும் மக்களை நன்றியுடன் நினைவு கூர்வதையும் பாரக்கலாம்.
‘இந்தப் புதிய சுதந்திர பூமியைக் கட்டியெழுப்பும் இளம் சமூகம், சுதந்திர வேட்கைகொண்ட சுயமரியாதையுள்ளää மானங்காக்கும் வீரர்கள் மாத்திரமல்லää அவர்கள் விஞ்ஞான நோக்குடைய நவீன உலகச் சிற்பிகள். சமூகவியலாளரும்,எழுத்தாளரும், படைப்பாளிகளும், கலைஞர்களும், எல்லோருமே சேர்ந்து இந்தப் புதிய உலகைப் படைக்க வேண்டும்” என்ற வேண்டுகோளில் ‘புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தலைவனை தரிசிக்கிறோம்.
இத்தலைவனின் சொற்களில் ஆவேசமும் உண்டு அன்பும் உண்டு. நிதானமும் உண்டு தீர்க்கதரிசனமும் உண்டு. ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்” என்று அன்று பாரதி பாடிய கவிதைக்கு இத்தலைவன் இலக்கணமாக விளங்குகிறான்.
பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி ஒரு சிறந்த தலைவன் என்பதை இந்நூல் உலகோருக்கு எடுத்துரைக்கிறது.
‘இயற்கையே எனது நண்பன். வாழ்க்கையே எனது தத்துவம். வரலாறே எனக்கு வழி காட்டி”. இதுதான் இந்தத் தலைவனின் தாரக மந்திரம்.
விடுதலைப் போரை விடுதலை வீரர்களை உருவகித்து ‘காத்தவன் கூத்து” என்று அவுஸ்திரேலியாவிலே அரங்கேறிய ஒரு கூத்து இவ்வேளை ஞாபகத்திற்கு வருகிறது. தனது மண்ணை,தனது மக்களை,அவர் மொழியை, அவர் பண்பாட்டை,அவர் மானத்தை, மரியாதையை காத்த ஒருவனின் கதை இது.
இவன் ‘காத்தவன்”.
At Leader for all Seasons Book Release
Melbourne, Australia, 14 November 2004
M.Thanapalasingham,
also in PDF
ம. தனபாலசிங்கம், சிட்னி.
14 11 2004 மெல்பேணில் நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை
[see also Selected Writings by M.Thanapalasingham]
வரலாறு என்பது தன்னியக்கம் உடையதன்று. வரலாற்று மாற்றத்திற்கு தனிமனிதர்களின் குறுக் கீடு அவசியமாகின்றது. இதனால்தான் பெரும் புரட்சிகளை விடுதலைப் போராட்டங்களை சமுதாய மாற்றங்களைப்பற்றி நாம் பேசிக்கொள்ளும் போது அவற்றை முன்னின்று நகர்த்திய ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க தனித்துவம் மிக்க தனிமனிதர்களைப்பற்றிப் பேசிக்கொள்கிறோம். இன்றும் இங்கு அதற்காகவே கூடியிருக்கிறோம்.
விதியின் அடிப்படையில் வரலாற்றை காலச்சக்கரமாகக் கற்பிதம் செய்த ஒரு சமூகத்தில் பிறந்த எங்கள் தலைவர் அதை உடைத்து புதிய வரலாற்றை எழுதுகின்றார். மனிதத்தில் அபாரமான நம்பிக்கை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றிற்கு தரும் விளக்கம் உற்று நோக்கற்பாலது.
“வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியன்று. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திரப்பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான்.”
என செயல்மூலம் காட்டியபின் கூறுகின்றார்.
“You can’t be neutral in a moving train! என்னும் நூலை எழுதிய Howard Zinn என்னும் அமெரிக்க
வரலாற்று ஆசிரியர் the struggle for justice should never be abandoned because of the apparent overwhelming power of those who have the guns and the money and who seem invincible in their determination to hold on to it. That apparent power has, again and again, proved vulnerable to human qualities less measurable than bombs and dollars”… எனக் கூறி அந்த மனிதப்பண்புகளாக அவர் குறிப்பிடும் moral fervor, determination, unity, organization, sacrifice, wit, ingenuity, courage, patience அனைத்தையும் எங்கள் தலைவர் உள்வாங்கியுள்ளார்.
இதனை இந்த வெளியீட்டிலும் காண்கின்றோம்.
வரலாற்றை நகர்த்துவோருக்கு கடந்த காலத்தைப் பற்றிய தெளிவான ஞானமும் நிகழ்காலத்தைக் கூர்மையாக அவதானிக்கும் ஆற்றலும் அவசியமாகின்றது. இவை கைவரப் பெற்றவர்களே காலத்தை வென்று வரலாறு சமைக்கின்றார்கள்.
இவர்கள் சமைக்கும் எதிர்காலம் மானிடத்தின் உயர்ந்த விழுமியங்களை நோக்கிச் செல்கின்றன. கலியை வென்று கிருதயுகம் காணும் யுக புருஷனே வேலுப்பிள்ளை பிரபாகாரன்.
புதுவையாரின் கவிதை வரிகளில் கூறுவதாயின்
“திண்ணையில் ஏறிய அட்டையைத் தட்டக்கூட அண்ணனைக் கூப்பிட்ட தங்கைளிலிருந்து
அங்கையர்க் கண்ணிகள் அணிவகுத்தது எப்படி”
இந்த படைப்பில் நான் ஒரே ஒரு புகைப்படத்தை மாத்திரம் நேரம் கருதி என் ஆய்வுக்கு உட்கொள்கிறேன்.
கிட்டுவின் மரணம். அந்த மரணத்தால் புத்திர சோகத்தில் தவிக்கும் அவரின் தாய். அந்தத் தாயை அணைத்துக் கொள்ளும் தலைவன்.
பற்றிப் படரத்தவிக்கும் தாய்மை. நெஞ்சை நெருப்பாக்கி பாசத்தின் பரிணாமத்தின் கொடுமுடியைத் தொட்டு நிற்கும் அணைப்பு அந்த அணைப்பினுள் தப்பித்தவறி விழும் அந்தத் தாயின் கையொன்றை பற்றி அணைக்கும் போராளி.
இன்னோரு வகையில் பார்க்கின் அணைத்துக் கொள்வது கிட்டுவின் தாயை மட்டுமல்ல. தமிழர் தேசத்தையே அணைத்து வாரிக் கொள்கிறான். அந்த அணைப்பில் தப்பியவற்றை அவர் வளர்த்த போராளி ஏந்துகிறான். அதே சமயம் அவரது பார்வை இந்தக் கொடுமையைச் செய்தவர்களைச் சுட்டு எரிப்பதைப்பாருங்கள். அந்தப்பார்வை செல்லும் பாதையில் எது வந்தாலும் மிதித்து வெல்லும் உறுதியும் அந்தக் கண்களில் பளிச்சிடுகின்றது.
இது புகைப்படம் அல்ல. ஒரு ஓவியம். தியாகம், வீரம், தலைமை, போராளி மாவீரம் யாவும் கோலம் காட்டி நிற்கும் இப் புகைப்படத்தை Rembrandt என்னும் ஒல்லாந்த ஓவியனது கைகளில் மலர்ந்த ஓவியங்களுக்கு ஒப்பிடலாம் எனக்கூறி இந்த வாய்ப்பைத் தந்தவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
One thought on “Prabhakaran a Leader for All Season -Book”
Comments are closed.
February 10, 2013 at 12:42 am
[…] Prabhakaran a Leader for All Season -Book […]